December 6, 2025, 10:28 AM
26.8 C
Chennai

 தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்த தை பொங்கல் ரயில் முன்பதிவு..

images 2022 09 15T132251.428 - 2025

தமிழர் திருவிழா தை பொங்கல் கொண்டாட செல்வதற்கான ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு இன்று (செப். 15) தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்து, காத்திருப்பு பட்டியலுக்கு வந்துவிட்டது.பொங்கலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்

2023 ஆம் ஆண்டு பொங்கல் திருநாள் வரும் ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஜனவரி 16 ஆம் தேதி மாட்டுப் பொங்கல், ஜனவரி 17 ஆம் தேதி காணும் பொங்கலையொட்டித் தொடர்ந்து அரசு விடுமுறை விடப்படுகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை உள்ளிட்ட நகரங்களில் வேலை செய்வோர் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.

ரயில் பயணத்துக்காக, 120 நாள்களுக்கு முன்னதாகவே ரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு கவுன்ட்டா்கள், ஐஆா்சிடிசி இணையதளம் வழியாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம்.ஜனவரி 12 ஆம் தேதி பயணிக்க செப்.14 – புதன்கிழமையும் ஜனவரி 13 ஆம் தேதி பயணிக்க செப். 15 – வியாழக்கிழமையும், பொங்கலுக்கு முந்தைய  நாளான ஜனவரி 14 ஆம் தேதி பயணிக்க  செப். 16- வெள்ளிக்கிழமையும் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம். இதன்படி, ஜன. 13 பயணத்துக்காக இன்று காலை 8 மணிக்குத் தொடங்கிய முன்பதிவு, சில நிமிடங்களிலேயே முடிந்துவிட்டது. 

குறிப்பாக, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை உள்ளிட்ட மதுரைக் கோட்டத்தின் கீழ் உள்ள தெற்கு மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களில் சில நிமிடங்களிலேயே டிக்கெட் தீர்ந்துவிட்டன. 

சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை அதிவிரைவு ரயிலில் அனைத்து டிக்கெட்டுகளும் முடிந்துவிட்டன. அதுபோல கன்னியாகுமரி, நெல்லை, பாண்டியன் அதிவிரைவு ரயில்களிலும் காத்திருப்புப் பட்டியலில்கூட டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாத (Regret) நிலை உள்ளது. 

மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை செல்லும் இதர ரயில்களிலும் காத்திருப்புப் பட்டியல் எண் 200-300க்கும் மேல் உள்ளது.வேலை காரணமாக சென்னை உள்ளிட்ட நகரங்களில் உள்ளோர் பொங்கல் பண்டிகைக்குச் செல்ல ரயில் டிக்கெட் கிடைக்காமல் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனால் பொங்கலுக்கு சிறப்பு ரயில்கள் அதிகளவில் சென்னையில் இருந்து மதுரை செங்கோட்டை திருநெல்வேலி நாகர்கோவில்க்கு இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்

மேலும், சொந்த ஊரில் இருந்து திரும்பி வருவதற்கு பொங்கல் (ஜன.15) அன்று பயணிக்க செப். 17 ஆம் தேதியும், பொங்கலுக்கு மறுநாளான ஜன. 16 ஆம் தேதி பயணிக்க செப். 18 ஆம் தேதியும், ஜன. 17 ஆம் தேதி பயணிக்க செப். 19 ஆம் தேதியும், ஜன. 18 ஆம் தேதி பயணிக்க செப். 20 ஆம் தேதியும் முன்பதிவு செய்துகொள்ளலாம். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories