தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்த தை பொங்கல் ரயில் முன்பதிவு..

images 2022 09 15T132251.428 - 2026

தமிழர் திருவிழா தை பொங்கல் கொண்டாட செல்வதற்கான ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு இன்று (செப். 15) தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்து, காத்திருப்பு பட்டியலுக்கு வந்துவிட்டது.பொங்கலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்

2023 ஆம் ஆண்டு பொங்கல் திருநாள் வரும் ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஜனவரி 16 ஆம் தேதி மாட்டுப் பொங்கல், ஜனவரி 17 ஆம் தேதி காணும் பொங்கலையொட்டித் தொடர்ந்து அரசு விடுமுறை விடப்படுகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை உள்ளிட்ட நகரங்களில் வேலை செய்வோர் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.

ரயில் பயணத்துக்காக, 120 நாள்களுக்கு முன்னதாகவே ரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு கவுன்ட்டா்கள், ஐஆா்சிடிசி இணையதளம் வழியாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம்.ஜனவரி 12 ஆம் தேதி பயணிக்க செப்.14 – புதன்கிழமையும் ஜனவரி 13 ஆம் தேதி பயணிக்க செப். 15 – வியாழக்கிழமையும், பொங்கலுக்கு முந்தைய  நாளான ஜனவரி 14 ஆம் தேதி பயணிக்க  செப். 16- வெள்ளிக்கிழமையும் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம். இதன்படி, ஜன. 13 பயணத்துக்காக இன்று காலை 8 மணிக்குத் தொடங்கிய முன்பதிவு, சில நிமிடங்களிலேயே முடிந்துவிட்டது. 

குறிப்பாக, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை உள்ளிட்ட மதுரைக் கோட்டத்தின் கீழ் உள்ள தெற்கு மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களில் சில நிமிடங்களிலேயே டிக்கெட் தீர்ந்துவிட்டன. 

சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை அதிவிரைவு ரயிலில் அனைத்து டிக்கெட்டுகளும் முடிந்துவிட்டன. அதுபோல கன்னியாகுமரி, நெல்லை, பாண்டியன் அதிவிரைவு ரயில்களிலும் காத்திருப்புப் பட்டியலில்கூட டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாத (Regret) நிலை உள்ளது. 

மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை செல்லும் இதர ரயில்களிலும் காத்திருப்புப் பட்டியல் எண் 200-300க்கும் மேல் உள்ளது.வேலை காரணமாக சென்னை உள்ளிட்ட நகரங்களில் உள்ளோர் பொங்கல் பண்டிகைக்குச் செல்ல ரயில் டிக்கெட் கிடைக்காமல் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனால் பொங்கலுக்கு சிறப்பு ரயில்கள் அதிகளவில் சென்னையில் இருந்து மதுரை செங்கோட்டை திருநெல்வேலி நாகர்கோவில்க்கு இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்

மேலும், சொந்த ஊரில் இருந்து திரும்பி வருவதற்கு பொங்கல் (ஜன.15) அன்று பயணிக்க செப். 17 ஆம் தேதியும், பொங்கலுக்கு மறுநாளான ஜன. 16 ஆம் தேதி பயணிக்க செப். 18 ஆம் தேதியும், ஜன. 17 ஆம் தேதி பயணிக்க செப். 19 ஆம் தேதியும், ஜன. 18 ஆம் தேதி பயணிக்க செப். 20 ஆம் தேதியும் முன்பதிவு செய்துகொள்ளலாம். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories