மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு விடுமுறை?

500x300 875995 untitled 7 - 2026

தமிழகத்தில் இந்த கல்வியாண்டில் பொது காலாண்டுத் தோ்வு கிடையாது என அறிவித்த பள்ளிக் கல்வித்துறை காலாண்டுத் தேர்வு விடுமுறை குறித்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அக்டோபர் 9ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை விடப்படும். அடுத்து அக்டோபர் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.

அதேவேளையில், தமிழகத்தில்  6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 5ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அதன்படி, அக்டோபர் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் வளரறி மதிப்பீட்டுத் தேர்வுக்காக 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கூடுதலாக விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

பொது காலாண்டுத் தோ்வு கிடையாது
காலாண்டுத் தோ்வு தேதிகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களே முடிவு செய்து கொள்ளலாம் எனப் பள்ளிக் கல்வித்துறை நேற்று அறிவித்திருந்தது.

கரோனா காரணமாகக் கடந்த ஆண்டு பொதுத் தோ்வுகள் வழக்கத்தை விடத் தாமதமாயின. அதே போல பள்ளி மாணவா்களுக்கு வகுப்புகளும் காலதாமதமாகவே திறக்கப்பட்டன. இந்நிலையில் காலாண்டுத் தோ்வு குறித்த விவரங்களை பள்ளிக்கல்வித்துறை கடந்த சில வாரங்களுக்கு முன்பாக அறிவித்திருந்தது.

அதன்படி செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் காலாண்டுத் தோ்வை முடிக்கும் வகையில் தோ்வு நாட்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் தமிழக பள்ளிகளில் நிகழாண்டு பொது காலாண்டு தோ்வு கிடையாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேறு தேதிகளில் காலாண்டுத் தோ்வுகளை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு பள்ளிக் கல்வித்துறை திடீா் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் செப்டம்பா் 30-ஆம் தேதியுடன் காலாண்டுத் தோ்வுகளை நடத்தி முடிக்கவும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காலாண்டுத் தோ்வைப் பொருத்தவரை பள்ளி அளவில் வினாத்தாள்களைத் தயாரித்துத் தோ்வை நடத்திக் கொள்ளலாம் எனவும், மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாளைக் கொண்டு தோ்வு நடத்தப்படும் போது வினாத்தாள் வெளியாகும் நிலையில் இந்த நடைமுறையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோ்வு தேதிகளை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்களே முடிவு செய்து கொள்ளலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories