February 21, 2026, 11:24 PM
26.7 C
Chennai

மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு விடுமுறை?

500x300 875995 untitled 7 - 2026

தமிழகத்தில் இந்த கல்வியாண்டில் பொது காலாண்டுத் தோ்வு கிடையாது என அறிவித்த பள்ளிக் கல்வித்துறை காலாண்டுத் தேர்வு விடுமுறை குறித்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அக்டோபர் 9ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை விடப்படும். அடுத்து அக்டோபர் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.

அதேவேளையில், தமிழகத்தில்  6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 5ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அதன்படி, அக்டோபர் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் வளரறி மதிப்பீட்டுத் தேர்வுக்காக 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கூடுதலாக விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

பொது காலாண்டுத் தோ்வு கிடையாது
காலாண்டுத் தோ்வு தேதிகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களே முடிவு செய்து கொள்ளலாம் எனப் பள்ளிக் கல்வித்துறை நேற்று அறிவித்திருந்தது.

கரோனா காரணமாகக் கடந்த ஆண்டு பொதுத் தோ்வுகள் வழக்கத்தை விடத் தாமதமாயின. அதே போல பள்ளி மாணவா்களுக்கு வகுப்புகளும் காலதாமதமாகவே திறக்கப்பட்டன. இந்நிலையில் காலாண்டுத் தோ்வு குறித்த விவரங்களை பள்ளிக்கல்வித்துறை கடந்த சில வாரங்களுக்கு முன்பாக அறிவித்திருந்தது.

அதன்படி செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் காலாண்டுத் தோ்வை முடிக்கும் வகையில் தோ்வு நாட்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் தமிழக பள்ளிகளில் நிகழாண்டு பொது காலாண்டு தோ்வு கிடையாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேறு தேதிகளில் காலாண்டுத் தோ்வுகளை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு பள்ளிக் கல்வித்துறை திடீா் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் செப்டம்பா் 30-ஆம் தேதியுடன் காலாண்டுத் தோ்வுகளை நடத்தி முடிக்கவும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காலாண்டுத் தோ்வைப் பொருத்தவரை பள்ளி அளவில் வினாத்தாள்களைத் தயாரித்துத் தோ்வை நடத்திக் கொள்ளலாம் எனவும், மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாளைக் கொண்டு தோ்வு நடத்தப்படும் போது வினாத்தாள் வெளியாகும் நிலையில் இந்த நடைமுறையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோ்வு தேதிகளை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்களே முடிவு செய்து கொள்ளலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

Topics

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

Entertainment News

Popular Categories