சென்னை பெங்களூரூ வில் இருந்து செங்கோட்டைக்கு பண்டிகைக்கால சிறப்பு ரயில் இயக்கப்படுமா?

images 2022 09 15T130403.149 2 - 2026

ஆயுதபூஜை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு
முன்பதிவு இல்லாத சேர் கார் வசதி கொண்ட
பகல்நேர ரயில்களை சென்னை பெங்களூரூ வில் இருந்து செங்கோட்டை க்கு இயக்க பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு பகல் நேர, முன் பதிவில்லாத சேர் கார் வசதி கொண்ட சிறப்பு ரயில்களை இயக்க வேண்டுமென பொது மக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்துக்களின் முக்கியத் திருவிழாவான தீபாவளி பண்டிகையானது இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வரும் அக்.,24 ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
அன்றைய தினம், சிறியவர் முதல் பெரியவர் வரை புத்தாடைகள் அணிந்து, இனிப்புகள் பரிமாறி, பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடுவது வழக்கம்.
இந்நிலையில், சென்னை உள்ளிட்ட வடமாவட்ங்களில் வசிப்போர் தென் மாவட்டங்களில் உள்ள தங்களது சொந்த ஊருக்குச் சென்று தீபாவளித் திருநாளை கொண்டாடுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் கொண்டாட பலரும் ஆர்வமாக உள்ளனர்.

ALSO READ:  வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!


இந்தநிலையில், தென்னகரயில்வேயில் தீபாவளிப் பண்டிகை முன் பதிவானது 120 நாட்களுக்கு முன்பே தொடங்கப்பட்டது. டிக்கெட்டுகள் அனைத்தும் வழக்கமான அனைத்து ரயில்களிலும் சில நிமிடங்களிலேயே தீர்ந்து போயின.
கடந்தவாரம், அரசுப் போக்குவரத்து கழக விரைவுப் பேருந்துகளிலும் முன்பதிவு டிக்கெட்டுகள் அனைத்தும் தீர்ந்து போய் விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேவேளை, தனியார் ஆம்னிப் பேருந்து கட்டணமானது, எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு தீபாவளித் திருநாளையொட்டி கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. விமானக் கட்டணத்திற்கு இணையாக இந்தக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.


தமிழக அரசானது, தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்களே, கட்டணத்தை நிர்ணயம் செய்து கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால், பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், தங்களது சொந்த ஊர்களுக்கு குடும்பத்துடன் குறைந்த செலவில் செல்ல முடியுமா? என்ற ஏக்கத்தில் தவித்து வருகின்றனர்.
ஆகையால், தெற்கு ரயில்வே நிர்வாகமானது, முன் பதிவில்லாத சேர் கார் வசதி கொண்டு சிறப்பு ரயில்களை பகல் நேரத்தில், சென்னையிலிருந்து திருச்சி, மதுரை, நெல்லை, ராமேஸ்வரம், செங்கோட்டை மார்க்கமாக தென் மாவட்டங்களுக்கு இயக்கிட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது, மதுரை-நெல்லை இடையே இரட்டை ரயில் பாதையானது, பெரும் பகுதி நிறைவடைந்துள்ளதால், எளிதில் பகல் நேர ரயில்களை இயக்க முடியும். எனவே,தீபாவளிப் பண்டிகைக்கு இரு நாட்களுக்கு முன்பும், பின்னரும் பகல் நேர முன் பதிவில்லாத ரயில்களை இயக்கிட வேண்டுமென ரயில் பயணிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ALSO READ:  குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories