காட்டுத்தீ அணைக்கப்பு சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல இன்று முதல் 3 நாட்களுக்கு அனுமதி ..

images 60 - 2026

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டுத்தீ அணைக்கப்பட்டதால் சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல இன்று சனிக்கிழமை முதல் 3 நாட்களுக்கு அனுமதி வனத்துறையினர் அனுமதி கொடுத்ததால் இன்று அதிகாலை முதலே திரளான பக்தர்கள் சதுரகிரி மலையில் பயணித்து சுந்தரமகாலிங்கம் தை தரிசனம் செய்தனர்.பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டுத்தீ அணைக்கப்பட்டதால் சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல இன்று முதல் 3 நாட்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது என வனத்துறையினர் அறிவித்து உள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமிக்கு தலா மூன்று நாட்கள், பிரதோஷத்திற்கு ஒரு நாள் என மாதத்திற்கு 8 நாட்கள் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. நேற்று முதல் வருகிற 10-ந்தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் மேற்கு தொடர்ச்சி மலையில் பீட் எண் 4 தாணிப்பாறை பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருவதால் நேற்று வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல வனத்துறை தடை விதித்தது. பக்தர்கள் ஏமாற்றம் பிரதோஷத்திற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வாகனங்களில் வருகை தந்த பக்தர்கள் நேற்று அதிகாலை முதலே தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு குவிந்தனர். மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து காட்டுத்தீ பற்றி எரிவதால் பக்தர்கள் நலன் கருதி அனுமதி இல்லை எனஅறிவிப்பு செய்ததோடு, அனுமதி இல்லாததால் தங்கள் ஊருக்கு திரும்பி செல்லுமாறு வனத்துறையினர் கூறினர்.

இதனால் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு சூடம் ஏற்றி சாமி தரிசனம் செய்துவிட்டு. 5 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். புரட்டாசி மாதம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு 18 வகையான அபிஷேகப் பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.

வத்திராயிருப்பு வனச்சரகத்திற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதி பீட் எண் 4, தாணிப்பாறை பகுதியில் உள்ள வல்லாளம்பாறை கூடாரம், இட்லி பாறை ஆகிய பகுதிகளில் கடந்த 2 நாட்களுக்கு மேலாக தீப்பற்றி எரிந்து வந்தது. வனத்துறையினர் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்தனர். இந்நிலையில், நேற்று காலை குரங்கு பாறையிலும் பற்றி எரிந்த தீயையும் வனத்துறையினர் அனைத்தனர்.தீயின் காரணமாக இப்பகுதியில் இருந்த வன விலங்குகள் வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்தன. 3 நாட்களுக்கு அனுமதி இந்த நிலையில் காட்டுத்தீ அணைக்கப்பட்டதால் இன்று முதல் 10-ந்தேதி வரை 3 நாட்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் அறிவித்து உள்ளனர். இன்று அதிகாலை முதலே திரளான பக்தர்கள் சதுரகிரி மலையில் பயணித்து சுந்தரமகாலிங்கம் தை தரிசனம் செய்தனர்.இன்று சிவராத்திரி பூஜையும் நாளை பௌர்ணமி பூஜையும் நடக்கிறது.

மேலும் தீ பற்றக்கூடிய பொருட்களை பக்தர்கள் எடுத்து செல்லக்கூடாது எனவும், தீ பற்றக்கூடிய பொருட்களை எடுத்து செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories