இடிந்தது-மைசூரின் பழமையான மகாராணி கல்லூரி கட்டிடம் ..

images 42 1 - 2026

மைசூரின் பழமையான மகாராணி கல்லூரி கட்டிடம் இடிந்து விழுந்தது .கர்நாடக மாநிலம் மைசூர் ஜி.எல்.பி சாலையில் 106 ஆண்டுகால பழமையான மகாராணி கல்லூரி உள்ளது. பாரம்பரிய கட்டிடத்தின் சுவரில் விரிசல் ஏற்பட்டதைக் கண்ட கல்லூரி ஊழியர்கள், அங்கிருந்த அனைவரையும் உடனடியாக வெளியேற்றினர்.

கர்நாடக மாநிலம் மைசூர் ஜி.எல்.பி சாலையில் 106 ஆண்டுகால பழமையான மகாராணி கல்லூரி உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் இந்த கல்லூரியின் கட்டிட சுவரில் விரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இடிந்த கட்டிடத்தின் ஒரு பகுதியில் வேதியியல் துறையின் ஆய்வகம் இருந்தது. வெளியே மகாராணி கலைக் கல்லூரியின் நுழைவு வாயில் இருந்தது. சுவர் இடிந்து விழுவதற்கு முன், வேதியியல் துறைத் தலைவர் டாக்டர் கே.கே.பத்மநாபா, வழக்கம்போல் அறைக்கு வந்து, சுவரில் பெரிய விரிசல் இருப்பதைக் கண்டு, உடனடியாக முதல்வர் டாக்டர் டி.ரவியின் கவனத்துக்குக் கொண்டு சென்றார். உடனடியாக அறையைச் சரிபார்த்த அவர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அறையின் கதவை மூடிவிட்டு, மின்சாரத்தை துண்டித்து விட்டு, யாரையும் உள்ளே நுழையவிடாமல் பார்த்துக் கொண்டார். பொதுவாக இந்த ஆய்வகத்தில் 30 மாணவிகளும் ஐந்து விரிவுரையாளர்களும் இருந்தனர். சிறிது தாமதம் ஏற்பட்டாலும் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கும்.

கட்டிடம் இடிந்து விழுந்ததால், வேதியியல் மற்றும் விலங்கு அறிவியல் துறையின் ஆய்வக உபகரணங்கள் அனைத்தும் இடிந்து கிடக்கின்றன. ரூ.40 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பாரம்பரிய கட்டிடத்தின் சுவரில் விரிசல் ஏற்பட்டதைக் கண்ட கல்லூரி ஊழியர்கள், அங்கிருந்த அனைவரையும் உடனடியாக வெளியேற்றினர். இதையடுத்து கல்லூரிக்கு 2 நாட்கள் விடுமுறை என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே பழமையான இந்த கட்டிடத்தை பழுது பார்த்து பாதுகாக்க நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது. இதற்காக ரூ.2 கோடி அனுமதிக்கப்பட்டு இன்று பூமி பூஜை விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

images 45 1 - 2026
images 38 1 - 2026

இது குறித்து கல்லூரி முதல்வர் டாக்டர். டி.ரவி கூறுகையில், கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. பழைய கட்டிடம் என்பதால், ஒரு பகுதி ஈரமாகி விரிசல் அடைந்துள்ளது. காலை 10.25 மணியளவில் கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டது. முதல் தளத்தை சரிபார்த்த பிறகு, ஆய்வகங்கள் மூடப்பட்டுள்ளன. பின்னர், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பிரிவுக்கு அனுமதி தடை செய்யப்பட்டது. அதன்பின்னர் மின் இணைப்பை துண்டிக்க அறிவுறுத்தினோம் என்றார். கட்டிடம் இடிந்து விழுந்ததையடுத்து, தீயணைப்பு மற்றும் அவசர சேவைப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இடிபாடுகள் மற்றும் இடிந்து விழுந்த கட்டிடத்தை சோதனை செய்து உள்ளே யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்தினர். இந்த மகாராணி அறிவியல் கல்லூரி மகாராஜா 10-வது சாமராஜேந்திர உடையார் தனது மனைவி கெம்பனஞ்சம்மன்னிக்காக கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories