இடிந்தது-மைசூரின் பழமையான மகாராணி கல்லூரி கட்டிடம் ..

images 42 1 - 2026

மைசூரின் பழமையான மகாராணி கல்லூரி கட்டிடம் இடிந்து விழுந்தது .கர்நாடக மாநிலம் மைசூர் ஜி.எல்.பி சாலையில் 106 ஆண்டுகால பழமையான மகாராணி கல்லூரி உள்ளது. பாரம்பரிய கட்டிடத்தின் சுவரில் விரிசல் ஏற்பட்டதைக் கண்ட கல்லூரி ஊழியர்கள், அங்கிருந்த அனைவரையும் உடனடியாக வெளியேற்றினர்.

கர்நாடக மாநிலம் மைசூர் ஜி.எல்.பி சாலையில் 106 ஆண்டுகால பழமையான மகாராணி கல்லூரி உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் இந்த கல்லூரியின் கட்டிட சுவரில் விரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இடிந்த கட்டிடத்தின் ஒரு பகுதியில் வேதியியல் துறையின் ஆய்வகம் இருந்தது. வெளியே மகாராணி கலைக் கல்லூரியின் நுழைவு வாயில் இருந்தது. சுவர் இடிந்து விழுவதற்கு முன், வேதியியல் துறைத் தலைவர் டாக்டர் கே.கே.பத்மநாபா, வழக்கம்போல் அறைக்கு வந்து, சுவரில் பெரிய விரிசல் இருப்பதைக் கண்டு, உடனடியாக முதல்வர் டாக்டர் டி.ரவியின் கவனத்துக்குக் கொண்டு சென்றார். உடனடியாக அறையைச் சரிபார்த்த அவர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அறையின் கதவை மூடிவிட்டு, மின்சாரத்தை துண்டித்து விட்டு, யாரையும் உள்ளே நுழையவிடாமல் பார்த்துக் கொண்டார். பொதுவாக இந்த ஆய்வகத்தில் 30 மாணவிகளும் ஐந்து விரிவுரையாளர்களும் இருந்தனர். சிறிது தாமதம் ஏற்பட்டாலும் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கும்.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

கட்டிடம் இடிந்து விழுந்ததால், வேதியியல் மற்றும் விலங்கு அறிவியல் துறையின் ஆய்வக உபகரணங்கள் அனைத்தும் இடிந்து கிடக்கின்றன. ரூ.40 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பாரம்பரிய கட்டிடத்தின் சுவரில் விரிசல் ஏற்பட்டதைக் கண்ட கல்லூரி ஊழியர்கள், அங்கிருந்த அனைவரையும் உடனடியாக வெளியேற்றினர். இதையடுத்து கல்லூரிக்கு 2 நாட்கள் விடுமுறை என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே பழமையான இந்த கட்டிடத்தை பழுது பார்த்து பாதுகாக்க நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது. இதற்காக ரூ.2 கோடி அனுமதிக்கப்பட்டு இன்று பூமி பூஜை விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

images 45 1 - 2026
images 38 1 - 2026

இது குறித்து கல்லூரி முதல்வர் டாக்டர். டி.ரவி கூறுகையில், கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. பழைய கட்டிடம் என்பதால், ஒரு பகுதி ஈரமாகி விரிசல் அடைந்துள்ளது. காலை 10.25 மணியளவில் கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டது. முதல் தளத்தை சரிபார்த்த பிறகு, ஆய்வகங்கள் மூடப்பட்டுள்ளன. பின்னர், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பிரிவுக்கு அனுமதி தடை செய்யப்பட்டது. அதன்பின்னர் மின் இணைப்பை துண்டிக்க அறிவுறுத்தினோம் என்றார். கட்டிடம் இடிந்து விழுந்ததையடுத்து, தீயணைப்பு மற்றும் அவசர சேவைப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இடிபாடுகள் மற்றும் இடிந்து விழுந்த கட்டிடத்தை சோதனை செய்து உள்ளே யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்தினர். இந்த மகாராணி அறிவியல் கல்லூரி மகாராஜா 10-வது சாமராஜேந்திர உடையார் தனது மனைவி கெம்பனஞ்சம்மன்னிக்காக கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை - வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories