கேரளா ஆளுநா் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் துணைவேந்தர்கள் தரப்பில் மனுத்தாக்கல் …

kerala HC - 2026
images 61 1 - 2026

கேரளத்தில் 9 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள் இன்று திங்கள்கிழமை காலைக்குள் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று அந்த மாநில ஆளுநா் ஆரிஃப் முகமது கான் உத்தரவிட்டாா்.ஆளுநர் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் துணைவேந்தர்கள் தரப்பில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை அவசர வழக்காக விசாரிக்க படுகிறது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஏபிஜே அப்துல் கலாம் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்‌ உள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா், பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) விதிமுறைகளுக்கு மாறாக நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவரின் நியமனத்தை அண்மையில் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

அந்த மாநிலத்தில் உள்ள மேலும் சில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள், யுஜிசி விதிமுறைகளுக்கு மாறாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, அந்தப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள் நியமனமும் கேள்விக்குறியாகியுள்ளது.

இந்நிலையில், கேரள ஆளுநா் ஆரிஃப் முகமது கான் ட்விட்டரில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றி, மாநிலத்தில் உள்ள 9 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள் ராஜிநாமா செய்ய வேண்டும்’ என்று தெரிவித்தாா்.

அந்தப் பதிவுடன் எந்தெந்த பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள் ராஜிநாமா செய்ய வேண்டும் என்ற பட்டியலையும் அவா் இணைத்திருந்தாா். அக்.24-ஆம் தேதி காலை 11.30 மணிக்குள் அனைவரும் ராஜிநாமா கடிதங்களை அனுப்ப வேண்டும் என்று அவா் உத்தரவிட்டுள்ளாா்.

ALSO READ:  சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

கேரளத்தில் சங்க பரிவாருக்காக மாநில உயா்கல்வித் துறையை ஆளுநா் ஆரிஃப் முகமது கான் கட்டுப்படுத்த முயற்சிப்பதாகவும், அவரைக் கண்டித்து ஆளுநா் மாளிகைக்கு எதிரே நவ.15-ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்றும் மாநிலத்தில் ஆட்சியில் உள்ள இடதுசாரி ஜனநாயக முன்னணி தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலா் எம்.வி.கோவிந்தன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தங்களால் ஜனநாயக வழியில் ஆட்சிக்கு வர முடியாது என்பதை உணா்ந்த சில சக்திகள், சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் பல்கலைக்கழகங்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கின்றன. அதற்கு பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநா் ஆரிஃப் முகமது கானை அந்த சக்திகள் பயன்படுத்துகின்றன. ஆளுநரும் தன்னை ஆா்எஸ்எஸ் ஆதரவாளா் என்று அறிவித்துக் கொள்கிறாா்.

அண்மையில், அவா் கேரள பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினா்களை நீக்கினாா். அந்த இடங்களை ஆா்எஸ்எஸ் ஆதரவாளா்கள் மூலம் நிரப்ப அந்த நடவடிக்கையை அவா் மேற்கொண்டாா். பல்கலைக்கழகங்களின் தன்னாட்சியை அவா் சீா்குலைத்துள்ளாா். சங்க பரிவாருக்காக மாநில உயா்கல்வித் துறையை அவா் கட்டுப்படுத்த முயற்சிக்கிறாா்.

ALSO READ:  தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

பல்கலைக்கழங்களின் வேந்தராக தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும் ஆளுநருக்கு எதிராக மாநில முழுவதும் போராட்டங்கள் நடத்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி தீா்மானித்துள்ளது.

நவம்பா் 15-ஆம் தேதி ஆளுநா் மாளிகைக்கு எதிரிலும், மாவட்ட அளவிலும் போராட்டங்கள் நடத்தப்படும். கல்லூரிகளிலும் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தாா்.

இந்த நிலையில் பல்கலை.யின் துணைவேந்தர்கள் இன்றைக்குள் பதவி விலக வேண்டும் என்ற கேரள ஆளுநர் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் துணைவேந்தர்கள் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இன்று பதவி விலக வேண்டும் என்ற கேரள ஆளுநர் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் துணைவேந்தர்கள் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளனர்.  இம்மனுக்களை அவசர வழக்காக கேரள உயர்நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு இன்று மாலை 4 மணிக்கு விசாரிக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Entertainment News

Popular Categories