விண்ணப்பித்த 3 நாளில் பாஸ்போர்ட்டுக்கான போலீஸ் விசாரணை முடிக்க ஏற்பாடு!

Indian-passport சென்னை: புதிய பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தால், விண்ணப்பித்த 3 நாட்களில் போலீஸ் விசாரணையை முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்போது ஆகும் 7 நாள் நடைமுறையை எளிதாக்க இந்த ஏற்பாடாம்! இது குறித்து அதிகாரிகள் தெரிவித்தபோது, பொதுமக்கள் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தால் போலீஸ் விசாரணை நடத்தி முடித்து அறிக்கை கிடைக்க 3 நாட்களுக்கு மேல் ஆகி விடுகிறது. சென்னையில் உடனே தகவல் வந்து விடும். ஆனால் கிருஷ்ணகிரி, காஞ்சீபுரம், வேலூர் உள்பட அதிக தொலைவில் உள்ள ஊர்களில் இருந்து போலீஸ் விசாரித்து தகவல் அனுப்ப காலதாமதம் ஆகி விடுகிறது. இதைத் தவிர்க்க விசாரணை நடத்தும் போலீசாருக்கு இண்டர்நெட் வசதியுடன் ‘டேப்’ இருந்தால் அனைத்து விவரங்களையும் அதில் பதிவு செய்து உடனுக்குடன் போலீஸ் கமிஷனர் அலுவலகம் மூலம் பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு தகவல் வந்து விடும். இதனால் 3 நாளில் போலீஸ் விசாரணை முடிக்கப்பட்டு விடும். பொதுமக்களுக்கும் பாஸ்போர்ட் சீக்கிரம் கிடைக்க வழிவகை காணப்படும். இதுகுறித்து காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பாஸ்போர்ட் தொடர்பாக விசாரணை நடத்தும் ஒவ்வொரு போலீஸ் நிலைய போலீசாருக்கும் ‘டேப்’ வழங்கினால் அதற்கு எவ்வளவு செலவாகும். இதை எல்லா போலீஸ் நிலையங்களுக்கும் அமுல்படுத்த முடியுமா? அல்லது படிப்படியாக அமுல்படுத்துவதா? என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது – என்று தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!

இதனால், 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 4 ஆம் தேதி (வியாழன் கிழமை) முதல் வகுப்புகள் தொடங்கப்படும்.

பிஜேபி., உள்ள வந்துடும்!

இந்த முறை என் டி ஏ கூட்டணியை மட்டுமல்ல மக்களின் அதிருப்தியையும் உங்கள் மீது நீங்கள் சரியாக எடை போடவில்லை. நீங்கள் செய்த தமிழகத் துரோகங்களுக்கு விரைவில் விடை கிடைக்கும்.

மெட்ரோ அரசியல்!

மதுரைக்கு மெட்ரோ குறித்து பட்னவிஸ் பேசியதை வைத்து தி.மு.க., பெரிய அளவில் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அதற்கு பதிலடி தர வேண்டிய தமிழக பா.ஜ., வழக்கம் போல் ஆழ்ந்த துாக்கத்தில் இருக்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஏபிவிபி., மாணவர்கள் மீது விசிக.,வினரின் கண்மூடித்தன தாக்குதலுக்கு கண்டனம்!

அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

Topics

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!

இதனால், 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 4 ஆம் தேதி (வியாழன் கிழமை) முதல் வகுப்புகள் தொடங்கப்படும்.

பிஜேபி., உள்ள வந்துடும்!

இந்த முறை என் டி ஏ கூட்டணியை மட்டுமல்ல மக்களின் அதிருப்தியையும் உங்கள் மீது நீங்கள் சரியாக எடை போடவில்லை. நீங்கள் செய்த தமிழகத் துரோகங்களுக்கு விரைவில் விடை கிடைக்கும்.

மெட்ரோ அரசியல்!

மதுரைக்கு மெட்ரோ குறித்து பட்னவிஸ் பேசியதை வைத்து தி.மு.க., பெரிய அளவில் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அதற்கு பதிலடி தர வேண்டிய தமிழக பா.ஜ., வழக்கம் போல் ஆழ்ந்த துாக்கத்தில் இருக்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஏபிவிபி., மாணவர்கள் மீது விசிக.,வினரின் கண்மூடித்தன தாக்குதலுக்கு கண்டனம்!

அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

மீண்டும் பதற்றம்! ஈரான் எச்சரிக்கை; இஸ்ரேல், அமெரிக்கா அதிரடி பதில்!

எங்கள் விரல் இன்னும் துப்பாக்கி விசையில்தான் இருக்கிறது. எந்த நேரத்திலும் போருக்குத் திரும்ப நாங்கள் தயார். ஈரான் இப்போது மிகவும் பலவீனமாக உள்ளது, அதை நாங்கள் சரியாகப் பயன்படுத்துவோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 9 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

Entertainment News

Popular Categories