கேரளா காதலனை விஷம் கொடுத்து காதலி கொன்ற வழக்கு அடுத்தடுத்து தீவிர விசாரணை ..

1785405 greeshma - 2026

கேரளா காதலனை விஷம் கொடுத்து கொன்ற வழக்கு- தடயங்களை அழித்த தாயார், மாமாவிடம் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கிரீஷ்மாவின் தாயார் சிந்து, மாமா நிர்மல் குமார் இருவரையும் அவர்களின் வீட்டுக்கு அழைத்து சென்று போலீசார் தடயங்களை சேகரித்தனர். வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பச்சை, நீல நிற ஆசிட் பாட்டில்கள், குளக்கரையில் வீசப்பட்ட விஷ பாட்டில்கள் ஆகியவற்றை மீட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரள மாநிலம் பாறசாலையை அடுத்த முறியன்கரை பகுதியை சேர்ந்தவர் ஷாரோன் ராஜ் ( 23). கல்லூரி மாணவர். இவருக்கும் களியக்காவிளையை அடுத்த ராமவர்மன் சிறை பகுதியை சேர்ந்த கிரீஷ்மா (22) என்ற மாணவிக்கும் காதல் மலர்ந்தது. கிரீஷ்மா தனியார் கல்லூரியில் எம்.ஏ. படித்து வந்தார். இதனால் கல்லூரிக்கு செல்லும் வழியில் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசிக்கொண்டனர். ஷாரோன் ராஜ்-கிரீஷ்மா இருவரும் இருவேறு மதங்களை சேர்ந்தவர்கள். இதனால் கிரீஷ்மாவுக்கு அவரது பெற்றோர் வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதற்காக குமரி மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவரை பேசி முடிவு செய்தனர்.

ALSO READ:  மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:
parasala collage 1 - 2026

பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்ய கிரீஷ்மாவும் ஒப்புக்கொண்டார். இதனை காதலன் ஷாரோன் ராஜிடம் கூறியபோது அவர் அதனை ஏற்க மறுத்தார். தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். இதனால் மனம் உடைந்த கிரீஷ்மா, கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஷாரோன் ராஜை வீட்டிற்கு வரவழைத்தார். அங்கு அவருக்கு குளிர்பானம் மற்றும் கஷாயம் கொடுத்தார். அதனை குடித்த ஷாரோன் ராஜ் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக ஷாரோன் ராஜ் பெற்றோர் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ஷாரோன் ராஜ் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து பாறசாலை போலீசார் கிரீஷ்மாவை கைது செய்தனர். முதலில் காதலனுக்கு விஷம் கொடுக்கவில்லை என மறுத்த கிரீஷ்மா, பின்னர் போலீசார் அதற்கான ஆதாரங்களை காட்டிய போது ஒப்புக்கொண்டார்.

மேலும் அவர் போலீஸ் நிலைய கழிவறையில் வைக்கப்பட்டிருந்த கிருமி நாசினியை குடித்து தற்கொலைக்கும் முயன்றார். இதற்கிடையே கிரீஷ்மா, அவரது காதலனை கொலை செய்ய அவரது தாயார் சிந்து மற்றும் மாமா நிர்மல் குமார் ஆகியோரும் உதவி செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து நேற்று அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அப்போது அவர்கள் ஷாரோன் ராஜூக்கு கொடுத்த விஷ பாட்டிலை வீட்டின் அருகில் உள்ள குளக்கரையில் வீசியதாக தெரிவித்தனர். இதையடுத்து கிரீஷ்மாவின் தாயார் சிந்து, மாமா நிர்மல் குமார் இருவரையும் அவர்களின் வீட்டுக்கு அழைத்து சென்று தடயங்களை சேகரித்தனர். வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பச்சை, நீல நிற ஆசிட் பாட்டில்கள், குளக்கரையில் வீசப்பட்ட விஷ பாட்டில்கள் ஆகியவற்றை மீட்டனர்.

ALSO READ:  ₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

தடயங்கள் அனைத்தையும் கைப்பற்றிய பின்பு இருவரையும் மீண்டும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று கிடுக்கி பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே இந்த வழக்கை குமரி மாவட்ட போலீசார் விசாரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் கொலையுண்ட ஷாரோன் ராஜின் வீடு கேரள பகுதியில் உள்ளது. காதலனை கொலை செய்ததாக கைதான கிரீஷ்மாவின் வீடு குமரி மாவட்ட எல்லையான பளுகல் பகுதியில் அமைந்துள்ளது.

இதனால் வழக்கு விசாரணைக்கும், தடயங்களை சேகரிக்கவும், ஆதாரங்களை திரட்டவும் கேரள போலீசார் குமரி மாவட்டத்திற்கு வரவேண்டியதாக உள்ளது. இதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க இந்த வழக்கை குமரி மாவட்டத்திற்கு மாற்றலாமா? என்று கேரள போலீசார் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories