இன்று குரூப்-1தேர்வு எழுதிய 3 லட்சத்து 22 ஆயிரத்து 416 பேர்..

1794051 tnpsc - 2026

இன்று பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் குரூப்-1 முதல் நிலைத் தேர்வை 3.25 லட்சம் பேர் எழுதியுள்ளனர்.குரூப்-1 பதவிகளில் உள்ள 92 காலி இடங்களுக்கு இந்த தேர்வு நடந்தது காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையில் இந்த தேர்வு நடந்தது.

துணை கலெக்டர், வணிக வரி உதவி கமிஷனர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, ஊரக மேம்பாட்டுத்துறை உதவி இயக்குனர் ஆகிய குரூப்-1 பதவிகளில் உள்ள 92 காலி இடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டு இருந்தது.

முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அந்த வகையில் முதல்நிலைத் தேர்வு இன்று சனிக்கிழமை தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வை எழுதுவதற்காக 3 லட்சத்து 22 ஆயிரத்து 416 பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில், அதில் 2 பேரின் விண்ணப்பங்கள் மட்டும் நிராகரிக்கப்பட்டு, 3 லட்சத்து 22 ஆயிரத்து 414 பேர் தேர்வை எழுத தகுதியுள்ளவர்களாக டி.என்.பி.எஸ்.சி. அறிவித்திருந்தது.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

இன்று காலை 9.30 மணி க்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் துவங்கிய இத்தேர்வு பிற்பகல் 12.30 மணி வரையில் இந்த தேர்வு நடைபெற்றது.

பொதுப்பாடம் பிரிவில் 175 வினாக்கள் திறனறிவு பிரிவில் 25 வினாக்கள் என 200 வினாக்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. தேர்வை எதிர்கொள்ளும் தேர்வர்கள் என்ன மாதிரியான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்? என்பது தொடர்பான முழு விவரங்களை ஹால்டிக்கெட்டில் டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்திருந்தது.பலர் ஆர்வத்துடன் தேர்வை எழுதினர்.

தமிழக அரசு துறைகளில், குரூப் – 1 நிலையில் உள்ள துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட, 92 காலி பணியிடங்களை நிரப்ப‌ இந்த முதல்நிலை தகுதி தேர்வு நடைபெற்றது .

தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகள் என, 38 பிரதான தேர்வு மையங்கள் நிர்ணயிக்கப்பட்டு, அவற்றில், 5,000க்கும் மேற்பட்ட தேர்வறைகள் அமைக்கப்பட்டு இருந்தது.

காலை 9:30 மணி முதல், 12:30 மணி வரை தேர்வு நடந்த இந்த தேர்வில், 175 கேள்விகள் பட்டப் படிப்பு தரத்திலும், 25 கேள்விகள் 10ம் வகுப்பு தரத்திலும் இடம் பெற்றது.

ALSO READ:  மீண்டும் பதற்றம்! ஈரான் எச்சரிக்கை; இஸ்ரேல், அமெரிக்கா அதிரடி பதில்!

துணை கலெக்டர் 18; டி.எஸ்.பி., 26; உதவி கமிஷனர் 25; கூட்டுறவு துணை பதிவாளர் 13; ஊரக மேம்பாட்டு துறை உதவி இயக்குனர் ஏழு; மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, மூன்று என, 92 காலியிடங்கள் இந்த தேர்வின் வழியே நிரப்பப்பட உள்ளன.
தேர்வில் தேர்ச்சி பெறுவோர், அடுத்து நடக்க உள்ள பிரதான தேர்வுக்கும், அதில் தேர்ச்சி பெறுவோர், நேர்காணலுக்கும் தேர்வு செய்யப்படுவர்.

குரூப் – 1 தேர்வுக்கு, மாவட்டம் முழுதும் பல பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. இன்று பள்ளிகளுக்கு மாற்று வேலைநாள் என்பதால், குரூப் – 1 தேர்வு மையம் உள்ள பள்ளிகள் மட்டும், தேர்வு முடிந்த பின், 12:30 மணிக்கு மேல் பிற்பகலில் வகுப்புகளை நடத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதேபோல், பிளஸ் 1, பிளஸ் 2 பருவ இடை தேர்வும் பிற்பகலில் நடத்தப்பட உள்ளது. குரூப் – 1 தேர்வு பணிக்கு செல்லும் ஆசிரியர்களுக்கு பதில், மாற்று ஆசிரியர்கள் வழியே பாடம் நடத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ALSO READ:  தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!
Tamil News large 317426420221119050143 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories