மருந்துகளை அதிகமாக வாங்கி காலாவதியாக்கிய அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு..

images 61 2 - 2026

மருந்துகளை தேவைக்கு அதிகமாக வாங்கி காலாவதியாக்கி, அரசுக்கு ரூ.27 கோடி இழப்பு ஏற்படுத்திய முன்னாள் உயர் அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. முன்னாள் கிராமப்புற சுகாதார சேவை இயக்குனர் இன்பசேகர் உள்ளிட்ட 4 உயர் அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது.

2017-ம் ஆண்டு மதுரை மாவட்டத்தில் உள்ள 65 இஎஸ்ஐ மையங்களுக்கு தேவையான மருந்துகள் பற்றிய விவரத்தை குறித்து மதுரை மண்டல மருத்துவ அதிகாரி கல்யாணி என்பவர் ரூ.13 கோடி அளவிலான மருந்துகள் தேவை என பரிந்துரை செய்துள்ளார்.

ஆனால், ரூ.13 கோடி மருந்துகளை அதற்குரிய விலையில் வாங்காமல் ரூ.40 கோடி அளவிற்கு தேவை என போலி ஆவணங்கள் தயாரித்து 4 மருத்துவத்துறை அதிகாரிகள் மோசடியில் ஈடுபட்டதை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

பணிபுரிந்த முன்னாள் கிராமப்புற சுகாதார சேவை இயக்குனர் இன்பசேகர்,  மதுரை மண்டல மருத்துவ அதிகாரி ஜான் ஆண்ட்ரூ, கண்காணிப்பாளர்கள் அசோக்குமார், அமர்நாத் ஆகியோர் ரூ.13 கோடி ரூபாய்க்கு மருந்துகள் வாங்கி கொடுக்காமல் தனியார் மருத்துவ கம்பெனிகளிடமிருந்து ஆதாயம் பெறுவதற்காக தேவையில்லாமல் அதிகளவில் மருந்துகளை வாங்கி மோசடி செய்ததாக விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

இதற்கு உடந்தையாக இல்லாத கல்யாணி என்பவரை பணியிடை மாற்றம் செய்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக, கல்யாணி என்பவர் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

ALSO READ:  திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை - வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது...

அந்த வழக்கில் அவரது பணியிடை மாற்றத்தை ரத்து செய்து, அவர் மீதான குற்றச்சாட்டையும் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதன் விளைவாக 2017-2018-ல் மதுரை மண்டலத்துக்கு ரூ.13 கோடிக்கு மருந்துகளை வாங்கவதற்கு பதில் ரூ.40 கோடிக்கு மருந்துகள் வாங்க போலி ஆவணம் தயாரித்தது அம்பலமாகியது.

தேவைக்கு அதிகமாக 3 மடங்கு அதிகம் வாங்கப்பட்ட மருந்துகள் பயன்பாடு இல்லாமல் காலாவதியானது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதிக அளவில் வாங்கப்பட்ட மருந்துகள் வீணானதால் அரசுக்கு ரூ.27.16 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மருந்துளை தேவைக்கு அதிகமாக வாங்கி காலாவதியாக்கி, அரசுக்கு ரூ.27 கோடி இழப்பு ஏற்படுத்திய முன்னாள் உயர் அதிகாரிகள் மீது ஊழல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டு விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories