பாகிஸ்தான் அணி படுதோல்வி: 150 ரன் வித்தியாசத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் வெற்றி

icc-wc-2015உலகக் கோப்பை போட்டிகளின் பி பிரிவு லீக் சுற்று ஆட்டத்தில், இன்று க்றிஸ்ட்சர்ச் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், பாகிஸ்தான் அணியை மேற்கு இந்தியத் தீவுகள் அணி 150 ரன் வித்தியாசத்தில் வெற்றி கொண்டது. முன்னதாக டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, பந்து வீசத் தீர்மானித்தது. இதை அடுத்து களம் இறங்கிய மேற்கு இந்தியத் தீவுகள் அணியில், துவக்கத்திலேயே அந்த அணியின் அதிரடி வீரர் கெயில் 5 ஆவது ஓவரில் ஆட்டம் இழந்தார். அவர் 4 ரன்களே எடுத்தார். பின்னர் ஸ்மித்தும் 23 ரன்னில் ஆட்டம் இழந்தார். ப்ராவோ, சாமுவல்ஸ், ராம்தின், சிம்மன்ஸ் என நடுவரிசை உறுதியாக நின்று விளையாடினர். ப்ராவோ 49, சாமுவல்ஸ் 38, ராம்தின் 51, சிம்மன்ஸ் 50, சமி 30 என எடுத்து ஆட்டமிழந்தனர். ரஸல் 13 பந்துகளில் 4 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் அதிரடி காட்டி 42 ரன் குவித்து அணியின் எண்ணிக்கை 310 ரன்னை எட்ட உதவினார். மேற்கு இந்தியத் தீவுகள் அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 310 ரன் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் 23 ரன் உதிரியாகத் தரப்பட்டது குறிப்பிடத் தக்கது. இதில் 14 பந்துகள் வைட்கள். பின்னர் பாகிஸ்தான் அணி 311 ரன்னை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடத் துவங்கியது. ஆனால், துவக்கமே பாகிஸ்தான் அணிக்கு அதிர்ச்சியாக அமைந்தது. நஸிர், யூனுஸ் கான், ஹரிஸ் சொஹெய்ல் மூவரும் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகினர். அஹ்மத் ஷேஹாத் 1 ரன்னில் ஆட்டம் இழந்தார். மிஸ்பா உல் ஹக் 7 ரன்னில் ஆட்டம் இழக்க, அந்த அணி ஒரு ரன்னில் 4 விக்கெட் இழந்தும், 25 ரன்னில் 5 விக்கெட் இழந்தும் தடுமாறியது. ஆனால் பின்னர் வந்ஹ்ட ஷோஹெப் மசூத் 50 ரன்னும், உமர் அக்மல் 59 ரன்னும் எடுத்து மோசமான ரன் தோல்வியில் இருந்து பாகிஸ்தான் அணியை மீட்டனர். பின்னர் வந்த ஷாகித் அப்ரிடி 26 பந்தில் 28 ரன் எடுத்தார். வஹாப் 3 ரன்னும், சொஹெல் 1 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்க, அந்த அணி 39 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 160 ரன்கள் எடுத்து படுதோல்வியை சந்தித்தது. மேற்கு இந்தியத் தீவுகள் தரப்பில் டெய்லர், ரஸல் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

போர்ச் சூழலிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும்!

மேற்காசியப் போர் நிமித்தம் கொஞ்சம் பாதிப்பு இருந்தாலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6% என நிலையாக இருக்கும்.

சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

சித்திரை மேஷ விஷு பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில்...

இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

இஸ்ரேலை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்ற குவாஜா ஆசிஃபின் அழைப்பு "அதிர்ச்சியளிக்கிறது" என்று பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

பிரதமர் மோடியை முடிக்க சதியா? பீகாரில் கைதானவரிடம் விசாரணை தீவிரம்!

பீகாரின் பக்ஸார் மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!

இதனால், 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 4 ஆம் தேதி (வியாழன் கிழமை) முதல் வகுப்புகள் தொடங்கப்படும்.

Topics

போர்ச் சூழலிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும்!

மேற்காசியப் போர் நிமித்தம் கொஞ்சம் பாதிப்பு இருந்தாலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6% என நிலையாக இருக்கும்.

சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

சித்திரை மேஷ விஷு பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில்...

இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

இஸ்ரேலை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்ற குவாஜா ஆசிஃபின் அழைப்பு "அதிர்ச்சியளிக்கிறது" என்று பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

பிரதமர் மோடியை முடிக்க சதியா? பீகாரில் கைதானவரிடம் விசாரணை தீவிரம்!

பீகாரின் பக்ஸார் மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!

இதனால், 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 4 ஆம் தேதி (வியாழன் கிழமை) முதல் வகுப்புகள் தொடங்கப்படும்.

பிஜேபி., உள்ள வந்துடும்!

இந்த முறை என் டி ஏ கூட்டணியை மட்டுமல்ல மக்களின் அதிருப்தியையும் உங்கள் மீது நீங்கள் சரியாக எடை போடவில்லை. நீங்கள் செய்த தமிழகத் துரோகங்களுக்கு விரைவில் விடை கிடைக்கும்.

மெட்ரோ அரசியல்!

மதுரைக்கு மெட்ரோ குறித்து பட்னவிஸ் பேசியதை வைத்து தி.மு.க., பெரிய அளவில் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அதற்கு பதிலடி தர வேண்டிய தமிழக பா.ஜ., வழக்கம் போல் ஆழ்ந்த துாக்கத்தில் இருக்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories