அருப்புக்கோட்டையில் தந்தைமீது பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்த மகன்..

images 23 2 - 2026

அருப்புக்கோட்டை அருகே தந்தைமீது பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்த மகன் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அருப்புக்கோட்டை பந்தல்குடி அருகே வதுவார்பட்டியில் தனியாக வசித்து வருபவர் பெருமாள் மகன் பாக்கியராஜ்(63).இவரது மகனான குருமூர்த்தி(35) என்பவர் வாழ்வாங்கி கிராமத்தில்தனது குடும்பத்துடன் வசித்துவருகிறார்.இதனிடைய சொந்தமாகப் புதிதாக ஒரு டிராக்டர் வாங்கிய பாக்கியராஜ்,அதைத் தனது மகன் குருமூர்த்தியின் பராமரிப்பில் விட்டு வாடகைக்கு விடுமாறு பொறுப்பை ஒப்படைத்திருந்தார்.ஆனால் குருமூர்த்தி அந்த டிராக்டரை வாடகைக்கு விட்ட பணத்தை தானே வைத்துக்கொண்டு வீண்செலவு செய்து வந்தாராம்.இதனால் குருமூர்த்தி மீது அதிருப்தியடைந்த பாக்கியராஜ்,,கடந்த வெள்ளிக்கிழமை இரவு அலைபேசியில் தொடர்பு கொண்டு மகனது தவறைத் தட்டிக்கேட்டாராம்.

இதனால் ஆத்திரமடைந்த குருமூர்த்தி சிறுதி நேரத்தில் தந்தை வீட்டிற்கு வந்தபோது,அவர் வீட்டுக் கதவை உள்முகமாகத் தாழிட்டுத் தூங்கிக்கொண்டிருந்தாராம்.அப்போது குருமூர்த்தி கதவைத்தட்டியும்,தந்தையாகிய பாக்கியராஜ் கதவைத் திறக்காததால்,மேலும் ஆத்திரமடைந்த குருமூர்த்தி தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலை அவ்வீட்டுக் கதவின் கீழ் இடைவெளி வழியாக ஊற்றித் தீவைத்துத் தப்பியோடிவிட்டாராம்.இதில் பாக்கியராஜின் மீது தீப்பற்றிக்கொள்ள, மிகவும் சிரமப்பட்டு உடலில் பரவிய தீயை அவர் தானாகவே அனைத்து உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் இதுதொடர்பாக போலீசில் பாக்கியராஜ் புகார் கொடுத்தாராம்.இதன்பேரில் சனிக்கிழமை இரவு பந்தல்குடி போலீசார் வழக்கு பதிந்து,குருமூர்த்தியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Topics

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Entertainment News

Popular Categories