அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ நடத்தும் இலவச விளையாட்டு பயிற்சி

we the leaders - 2026

கிராமப்புற மாணவர்களுக்கு அடித்தது ஜாக்பாட் ! இனி வாரா வாரம் இலவச விளையாட்டு பயிற்சி; முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை அவர்களது வீ தி லீடர்ஸ் அறக்கட்டளை மும்முரம்…

கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சியில் வீ தி லீடர்ஸ் அறக்கட்டளை சார்பில் கிராமப்புற மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் இலவச கையுந்து பந்து பயிற்சிக்கான துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியும், வீ தி லீடர்ஸ் அறக்கட்டளையின் முதன்மை சேவகருமான அண்ணாமலை அவர்களின் வழிகாட்டுதலின் படி, வீ தி லீடர்ஸ் அறக்கட்டளை சார்பாக பல்வேறு இலவச பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது,

இதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பகுதியில் அமைந்துள்ள நீதிமன்றம் எதிரே, கிராம புற மாணவர்களின் தனித்திறனை மேம்படுத்துவதற்காக, அரவக்குறிச்சி வீ தி லீடர்ஸ் அறக்கட்டளை சார்பாக, சுற்றியுள்ள கிராம புற ஏழை மாணவர்களின் விளையாட்டுத்திறனை மேம்படுத்தும் வகையில் இலவச கையுந்து பந்து (Volleyball ) பயிற்சியின் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பல்வேறு மாணவ, மாணவிகள் பயிற்சியில் ஆர்வமுடன் பங்ககேற்றனர், இனி வரும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களில் வாரா, வாரம் பயிற்சி நடைபெறும் என்று வீ தி லீடர்ஸ் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

we the leaders1 - 2026

மேலும், இந்த துவக்க விழா நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களாக சமூக ஆர்வலர்கள் நல்லசாமி, சிவகுமார், நாச்சிமுத்து, வழக்கறிஞர் ராம்குரு, முன்னாள் தலைமை ஆசிரியர் வீரமலை, பயிற்சியாளர் கௌதம், ராஜா மற்றும் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் ந. பாஸ்கர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் இப்பயிற்சியில் சேர ஆர்வமுள்ளவர்கள் 13 முதல் 21 வயது வரை உள்ள ஆண் மற்றும் பெண் பிள்ளைகள் பங்குபெற வாய்ப்பு வழங்கப்படும் என்றும் இந்த பயிற்சியானது முற்றிலும் இலவசம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த வருடம் நடக்கவிருக்கும் மாவட்ட, மாநில அளவிளான கையுந்து பந்து போட்டியில் கலந்து கொண்டு, அரவக்குறிச்சிக்கு மண்ணிற்கும், மக்களுக்கும் பெருமை சேர்ப்போம் என்று ஆடவர் அணி மற்றும் மகளிர் அணி மாணவ, மாணவிகள் உற்சாகமுடன் நம்பிக்கை தெரிவி்த்தனர், இவர்களை வீ தி லீடர்ஸ் அறக்கட்டளையினர் ஊக்கப்படுத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

Entertainment News

Popular Categories