சபரிமலையில் பக்தர்கள் வருகை அதிகரிப்பால் தரிசன நேரம் அதிகரிப்பு..

FB IMG 1670760151210 - 2026

சபரிமலையில் பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்
இன்று முதல் வரும் டிசம்பர் 18ம் தேதி வரை
இரவு 11.20 மணி்க்கு ஹரிவராசனம் 11.30 நடை அடைக்கப்படும்
மாலை 3 மணி முதல் இரவு 11.30 வரை கோவில் திறந்திருக்கும்.

மதியம் ஒரு மணிக்கு நடை அடைக்கப்படுவதை மதியம் 1:30 அல்லது 2 மணி வரை திறந்திருக்கலாமா என்று தந்திரியிடம் ஆலோசனை கேட்டு முடிவு எடுக்கப்படும் என்று திருவாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

FB IMG 1670760137414 - 2026

சபரிமலையில் 12 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் ..

12-ந்தேதி வழிபட முன்பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது. வருகிற 27-ந்தேதி மண்டல பூஜை நடக்கிறது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக கடந்த மாதம் 16-ந் தேதி திறக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு காரணமாக ஐயப்ப பக்தர்களின் வருகை குறைவாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால் பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என்பதால், சபரிமலையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தரிசனத்திற்கு முன்பதிவு செய்ய வேண்டும் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்திருந்தது. அதன்படி நடை திறக்கப்பட்ட நாள் முதலே தரிசனம் செய்ய பலரும் முன்பதிவு செய்து சபரிமலை வந்து வழிபட்டனர். இது தவிர நிலக்கல் உள்பட பல இடங்களில் உடனடி முன்பதிவு மையங்களும் செயல்பட்டன. அவற்றில் முன்பதிவு செய்தும் பக்தர்கள் அய்யப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். இருப்பினும் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது.

இதனால் பக்தர்கள் 18-ம் படி ஏறவும், ஐயப்பனை தரிசனம் செய்யவும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு கோவில் நடை திறப்பு நேரத்தை காலை, மாலை வேளைகளில் தலா 1 மணி நேரம் அதிகரித்தும் காத்திருப்பு நிலை தொடரவே செய்கிறது. தற்போது சபரிமலை ஐயப்பன் கோவிலில் தினமும் 18 மணி நேரம் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பக்தர்கள் தங்களுக்கான முன்பதிவு நேரத்தில் இருந்து சுமார் 12 மணி நேரம் காத்திருந்து தான் தரிசனம் பெற முடிகிறது.

தினசரி அதிகபட்சமாக 1 லட்சத்து 20 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசனத்திற்கு அனுமதி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் நேற்று ஒரே நாளில் 1 லட்சத்து 9 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்த ஆண்டு நடை திறக்கப்பட்டதில் இருந்து நேற்று தான் அதிகபட்ச பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சபரிமலையில் இன்று தரிசனத்துக்காக ஒரு லட்சம் பக்தர்களுக்கு மேல் முன்பதிவு செய்து தரிசனம் செய்தனர் . நாளை 12-ந் தேதி தரிசனத்திற்கு 1 லட்சத்து பத்தாயிரம் பேர் இதுவரை முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ள தாக கூறப்படுகிறது. வருகிற 27-ந் தேதி மண்டல பூஜை நெருங்கி வருவதால் அன்றைய தினம் தரிசனத்திற்கு ஏராளமானோர் முன்பதிவு செய்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Entertainment News

Popular Categories