ஹனூமத் ஜயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடை மாலை!

namakkal anjaneyar vadaimalai - 2026

ஹனூமத் ஜயந்தியை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, ஒரு லட்சத்து எட்டு வடை மாலை சாற்றப்பட்டது.

நாமக்கல் நகரில் மிகவும் புகழ் பெற்ற ஆஞ்சநேயர் திருக்கோயில் உள்ளது. இங்கு ஒரே கல்லில் உருவான 18 அடி உயர ஆஞ்சநேயர் நின்ற நிலையில் சாந்த ஸ்வரூபியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஆண்டு தோறும் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் ஹனூமத் ஜயந்தி விழா இங்கே கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு ஹனூமத் ஜயந்தி விழா வெள்ளிக்கிழமை இன்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஹனூமத் ஜயந்தி விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடைகளால் கோக்கப்பட்ட மிகப்பெரும் மாலை சார்த்தப்பட்டு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. ஹனுமானுக்கு வடைமாலை மிகவும் பிடித்தமானது என்பதால், பல்வேறு தலங்களிலும் இன்று வடைமாலை, வெற்றிலை மாலை அலங்காரம் நடைபெறுவது வழக்கம். நாமக்கல் ஆஞ்சநேயர் விஸ்வரூபி என்பதால், மிகப் பெரும் மாலையைச் செய்து அவருக்கு சமர்ப்பிக்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து இன்று முற்பகல் 11:00 மணிக்கு நல்லெண்ணை, பஞ்சாமிர்தம், சீயக்காய்த்துாள், 1,008 லிட்டர் பால், தயிர், திருமஞ்சனம் உள்ளிட்ட நறுமண பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று வருகிறது. இதன் பின்னர் அனுமானுக்கு தங்கக்கவசம் சார்த்தப்பட்டு மகா தீபாராதனை நடைபெறும். இதனை முன்னிட்டு ஆலயத்தில் பக்தர்கள் பெருமளவில் கூடியிருந்து, அனுமனை தரிசித்து வருகின்றனர்.

namakkal anjaneyar vadaimalai preparation - 2026

முன்னதாக, ஒரு லட்சத்து எட்டு வடைகளைத் தயார் செய்வதற்காக அன்பர்கள் குழு இரு தினங்களுக்கு முன்பே திருவரங்கம் உள்ளிட்ட தலங்களில் இருந்து நாமக்கல்லுக்குச் சென்று வடை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories