ஹனூமத் ஜயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடை மாலை!

namakkal anjaneyar vadaimalai - 2026

ஹனூமத் ஜயந்தியை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, ஒரு லட்சத்து எட்டு வடை மாலை சாற்றப்பட்டது.

நாமக்கல் நகரில் மிகவும் புகழ் பெற்ற ஆஞ்சநேயர் திருக்கோயில் உள்ளது. இங்கு ஒரே கல்லில் உருவான 18 அடி உயர ஆஞ்சநேயர் நின்ற நிலையில் சாந்த ஸ்வரூபியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஆண்டு தோறும் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் ஹனூமத் ஜயந்தி விழா இங்கே கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு ஹனூமத் ஜயந்தி விழா வெள்ளிக்கிழமை இன்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஹனூமத் ஜயந்தி விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடைகளால் கோக்கப்பட்ட மிகப்பெரும் மாலை சார்த்தப்பட்டு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. ஹனுமானுக்கு வடைமாலை மிகவும் பிடித்தமானது என்பதால், பல்வேறு தலங்களிலும் இன்று வடைமாலை, வெற்றிலை மாலை அலங்காரம் நடைபெறுவது வழக்கம். நாமக்கல் ஆஞ்சநேயர் விஸ்வரூபி என்பதால், மிகப் பெரும் மாலையைச் செய்து அவருக்கு சமர்ப்பிக்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து இன்று முற்பகல் 11:00 மணிக்கு நல்லெண்ணை, பஞ்சாமிர்தம், சீயக்காய்த்துாள், 1,008 லிட்டர் பால், தயிர், திருமஞ்சனம் உள்ளிட்ட நறுமண பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று வருகிறது. இதன் பின்னர் அனுமானுக்கு தங்கக்கவசம் சார்த்தப்பட்டு மகா தீபாராதனை நடைபெறும். இதனை முன்னிட்டு ஆலயத்தில் பக்தர்கள் பெருமளவில் கூடியிருந்து, அனுமனை தரிசித்து வருகின்றனர்.

namakkal anjaneyar vadaimalai preparation - 2026

முன்னதாக, ஒரு லட்சத்து எட்டு வடைகளைத் தயார் செய்வதற்காக அன்பர்கள் குழு இரு தினங்களுக்கு முன்பே திருவரங்கம் உள்ளிட்ட தலங்களில் இருந்து நாமக்கல்லுக்குச் சென்று வடை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories