ராஜ்பவனில் பொங்கல் விழா கொண்டாட தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு..

FmFksTtagAElFI3.jpeg - 2026

வரும் 12-ம் தேதி ராஜ்பவனில் பொங்கல் விழா கொண்டாட தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பிதழில் தமிழ்நாடு என்ற வார்த்தையை தவிர்த்து தமிழக ஆளுநர் என குறிப்பிடப்பட்டுள்ளது பல்வேறு தரப்பினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆளுநர் மாளிகையில் நடத்தப்படும் பொங்கல் விழாவில் கலந்துகொள்ள ஆளும்கட்சி, எதிர்க்கட்சி, பிரபலங்கள் உள்ளிட்டோருக்கு பொங்கல் விழாவில் கலந்துகொள்வதற்கான அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை ஆளுநர் மாளிகையில் 2023-ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெறவிருக்கும் பொங்கல் பெருவிழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு இந்த அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

FmFkrgRacAElfbE - 2026

ஆனால் அந்த அழைப்பிதழில் தமிழ்நாடு என்ற வார்த்தைக்கு பதிலாக தமிழக ஆளுநர் என குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி சென்னை ஆளுநர் மாளிகையில் மாலை 5 மணியளவில் ஒரு தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதில் தமிழ்நாடு ஆளுநர் என குறிப்பிடப்பட்டு ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்திருந்தார்.

ALSO READ:  மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

நேற்று நடைபெற்ற சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடர்பாகவும், தமிழ்நாடு அரசு, திராவிட மாடல், மற்றும் அரசின் பாராட்டுக்கள் போன்ற அனைத்ததும் அவரது ஒப்புதலுடனே அச்சிடப்பட்டே ஆளுநரிடம் வழங்கப்படும். அதனை ஆளுநர் உரையில் அவர் வாசிப்பார். ஆனால் நேற்றுஅது அனைத்தயுமே அவர் வாசிக்காமல் விட்டுவிட்டு வேறு சிலவற்றை அவர் கூறியிருப்பார்.

இதனை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதில் ஆளுநர் உரையில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் என்ன அச்சிடப்பட்டிருக்கிறதோ அவை தான் அவை குறிப்பில் இருக்கவேண்டும் என அந்த தீர்மானத்தில் கூறப்பட்டது.

ஆனால் இது தொடர்பாக ஆளுநர் தரப்பில் அதிகாரபூர்வமாக எவ்வித விளக்கமும் கொடுக்கப்படாத நிலையில், அடுத்த கட்ட சர்ச்சையாக பொங்கல் பண்டிகைக்கு அனுப்பியிருக்க கூடிய அந்த அழைப்பிதழில் தமிழ்நாடு என்பதை பயன்படுத்ததாலும் தமிழ்நாடு அரசின் இலட்சினையை பயன்படுத்தாமலும் இருப்பது ஆளுநர் மீண்டும் ஒரு மோதல் போக்கை தொடங்கியுள்ளார் என தெரியவந்துள்ளதாக பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ALSO READ:  T20 WC 2026: இறுதிப் போட்டியில் இந்திய அணி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

Topics

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

அஸ்ஸாமில் ஆர் எஸ் எஸ் கிளைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று அந்த அமைப்பின் ஆண்டறிக்கை கூறுகிறது. வித்யா பாரதி மூலமாக அந்த மாநிலத்தில் 121 ஆரம்ப பள்ளிகளும் 115 நடுநிலைப் பள்ளிகளும் 341 மேல்நிலைப் பள்ளிகளும் நடத்தப்படுகின்றன. சுமார் இரண்டு லட்சம் மாணவர்கள் இதன்மூலம் பயன் பெறுகின்றனர்.

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

முன்பெல்லாம், அனேகமாக, எல்லோரும் பிரிவினை பேசுவார்கள். இப்போது வெகுவாக குறைந்துவிட்டது. பிரிவினைவாதத்தை எதிர்த்து பேசாமல் இருக்க காரணம் பிரிவினைவாதிகளிடம் இருக்கும் துப்பாக்கிதான். தேசியம், தேசபக்தி வளர்ந்து விட்டது என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் யாரும் சீனாவுடனோ பங்களாதேஷுடனோ இணைவதை விரும்பவில்லை

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா

மோடி அரசு வந்த பிறகு மக்கள் மாறி வருகிறார்கள். பக்கத்து நாட்டில் இருந்து சட்ட விரோதமாக குடியேறும் முஸ்லிம்கள் பிரச்சனை வளர்ந்து வருகிறது. சர்சுகளும் இப்போது அந்த பிரச்சினையை பேச தொடங்கியுள்ளன. தேசபக்தி வளர்த்து வருகிறது. இந்துத்துவம் வளர்ந்து வருகிறது மேகாலயாவில். இது தெளிவாகத் தெரிகிறது.

Entertainment News

Popular Categories