ராஜ்பவனில் பொங்கல் விழா கொண்டாட தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு..

FmFksTtagAElFI3.jpeg - 2026

வரும் 12-ம் தேதி ராஜ்பவனில் பொங்கல் விழா கொண்டாட தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பிதழில் தமிழ்நாடு என்ற வார்த்தையை தவிர்த்து தமிழக ஆளுநர் என குறிப்பிடப்பட்டுள்ளது பல்வேறு தரப்பினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆளுநர் மாளிகையில் நடத்தப்படும் பொங்கல் விழாவில் கலந்துகொள்ள ஆளும்கட்சி, எதிர்க்கட்சி, பிரபலங்கள் உள்ளிட்டோருக்கு பொங்கல் விழாவில் கலந்துகொள்வதற்கான அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை ஆளுநர் மாளிகையில் 2023-ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெறவிருக்கும் பொங்கல் பெருவிழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு இந்த அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

FmFkrgRacAElfbE - 2026

ஆனால் அந்த அழைப்பிதழில் தமிழ்நாடு என்ற வார்த்தைக்கு பதிலாக தமிழக ஆளுநர் என குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி சென்னை ஆளுநர் மாளிகையில் மாலை 5 மணியளவில் ஒரு தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதில் தமிழ்நாடு ஆளுநர் என குறிப்பிடப்பட்டு ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்திருந்தார்.

நேற்று நடைபெற்ற சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடர்பாகவும், தமிழ்நாடு அரசு, திராவிட மாடல், மற்றும் அரசின் பாராட்டுக்கள் போன்ற அனைத்ததும் அவரது ஒப்புதலுடனே அச்சிடப்பட்டே ஆளுநரிடம் வழங்கப்படும். அதனை ஆளுநர் உரையில் அவர் வாசிப்பார். ஆனால் நேற்றுஅது அனைத்தயுமே அவர் வாசிக்காமல் விட்டுவிட்டு வேறு சிலவற்றை அவர் கூறியிருப்பார்.

இதனை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதில் ஆளுநர் உரையில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் என்ன அச்சிடப்பட்டிருக்கிறதோ அவை தான் அவை குறிப்பில் இருக்கவேண்டும் என அந்த தீர்மானத்தில் கூறப்பட்டது.

ஆனால் இது தொடர்பாக ஆளுநர் தரப்பில் அதிகாரபூர்வமாக எவ்வித விளக்கமும் கொடுக்கப்படாத நிலையில், அடுத்த கட்ட சர்ச்சையாக பொங்கல் பண்டிகைக்கு அனுப்பியிருக்க கூடிய அந்த அழைப்பிதழில் தமிழ்நாடு என்பதை பயன்படுத்ததாலும் தமிழ்நாடு அரசின் இலட்சினையை பயன்படுத்தாமலும் இருப்பது ஆளுநர் மீண்டும் ஒரு மோதல் போக்கை தொடங்கியுள்ளார் என தெரியவந்துள்ளதாக பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories