அர்ச்சகர்கள் வயிற்றில் அடிப்பதா? அறநிலையத் துறைக்கு இந்து முன்னணி கண்டனம்!

hindumunnani - 2026

அர்ச்சகர்கள் வயிற்றில் அடிப்பதா? இந்து சமய அறநிலையத் துறை அதிகார துஷ்பிரயோகம்.. இந்து முன்னணி கடும் கண்டனம் தெரிவிக்கிறது என்று மாநில துணைத் தலைவர் V.P . ஜெயக்குமார் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை:

அர்ச்சகர்கள் தட்டில் காசு போடக்கூடாது எனவும், உண்டியலில் மட்டுமே காணிக்கை செலுத்த வேண்டும் எனவும் வாய் மொழியாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் தெரிவித்ததாக செய்திகள் வந்தன. தமிழகத்தின் ஆலயங்களில் பூஜைகள் செய்து இறை பணியை லட்சக்கணக்கான அர்ச்சகர்கள் மற்றும் பூஜாரிகள் செய்து வருகின்றனர்.

இவர்களுக்கு இந்து சமய அறநிலையத் துறை மிகமிகக் குறைந்த தொகையையே ஊதியமாக வழங்கி வருகிறது. இன்னும் சில ஆலயங்களில் அவர்களுக்கென ஊதியம் ஏதும் வழங்கப்படுவதில்லை. மேலும் பல கோவில்களில் அந்த கோவிலுக்கான பூஜைக்கான பொருட்களை இவர்களே வாங்கி பூஜைகள் செய்து வருகின்றனர். இவ்வாறாக குறைந்த ஊதியத்திலும், ஊதியில்லாமலும் இறைபணி செய்து வரும் பெரும்பாலான அர்ச்சகர்கள் மற்றும் பூஜாரிகளின் வாழ்க்கை தீபாரதனை தட்டில் வரும் காணிக்கைகளை வைத்தே நடக்கிறது என்பது வேதனையான உண்மை.

இந்து தர்மத்தில் அர்ச்சகருக்கு காணிக்கை தருவது என்பது நீண்ட கால வழக்கம். அவ்வாறு பக்தர்கள் கொடுக்கும் காணிக்கை முழுக்க முழுக்க அர்ச்சகர் மற்றும் பூஜாரிகளுக்கே சொந்தமானது. ஆலயத்தின் நிர்வாகம் மற்றும் புணரமைப்பு பணிகளுக்காக ஆலயத்தில் வைத்திருக்கும் உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கை செலுத்துகிறார்கள். உண்டியலில் வரும் தொகை முழுக்க முழுக்க ஆலயத்தின் நிர்வாகப் பணிக்கே தவிர அர்ச்சகருக்கு அல்ல.

இவ்வாறான சூழ்நிலையில் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் அர்ச்சகர்கள் மற்றும் பூஜாரிகளுக்கு தீபாரதனை தட்டில் செலுத்தும் காணிக்கைகளை உண்டியலில் போடச் சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். உடனடியாக அறநிலைத்துறை இது போன்ற உத்தரவுகள் வழங்கியிருந்தால் திரும்பப் பெற வேண்டும். மிகவும் ஏழ்மை நிலையில் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் இறை பணிக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட அர்ச்சர்கள் மற்றும் பூஜாரிகளுக்கு எந்த விதமான இடைஞ்சலும் செய்யக்கூடாது என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது… என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சபரிமலையில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா மார்ச் 23ல் துவக்கம்

உலக பிரசித்தி பெற்ற கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் ஸ்ரீகோவிலில்...

மதுரை வட்டார ஆலயங்களில் சனிப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு

மாவட்டத்தில் உள்ள கோயில்களில், மார்ச்..6..ம் தேதி வெள்ளிக்கிழமை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.

மார்ச் 1ல் மதுரை வரும் பிரதமர் மோடி! எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

வரும் ஞாயிறு மார்ச் 1 பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தமிழ்நாட்டில்...

‘3 முறை முதல்வர்’ ஓ.பன்னீர்செல்வம், ‘குடும்பக் கட்சி’ திமுக.,வில் இணைந்தார்!

மதிமுகவினர் திரும்பவும் திமுகவுக்கு வந்தபோது கருணாநிதி சொன்னார். "மதிமுக என்பதற்கு அர்த்தம் "மறுபடியும் திமுக" என்பதுதான்" இப்ப... அதிமுகவுக்கு அர்த்தம்  “அவங்களும் திமுகதான்”

பஞ்சாங்கம் பிப்.27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

சபரிமலையில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா மார்ச் 23ல் துவக்கம்

உலக பிரசித்தி பெற்ற கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் ஸ்ரீகோவிலில்...

மதுரை வட்டார ஆலயங்களில் சனிப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு

மாவட்டத்தில் உள்ள கோயில்களில், மார்ச்..6..ம் தேதி வெள்ளிக்கிழமை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.

மார்ச் 1ல் மதுரை வரும் பிரதமர் மோடி! எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

வரும் ஞாயிறு மார்ச் 1 பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தமிழ்நாட்டில்...

‘3 முறை முதல்வர்’ ஓ.பன்னீர்செல்வம், ‘குடும்பக் கட்சி’ திமுக.,வில் இணைந்தார்!

மதிமுகவினர் திரும்பவும் திமுகவுக்கு வந்தபோது கருணாநிதி சொன்னார். "மதிமுக என்பதற்கு அர்த்தம் "மறுபடியும் திமுக" என்பதுதான்" இப்ப... அதிமுகவுக்கு அர்த்தம்  “அவங்களும் திமுகதான்”

பஞ்சாங்கம் பிப்.27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

T20 WC 2026: விறுவிறுப்பான கட்டத்தில் சூப்பர் 8 போட்டிகள்!

அரையிறுதிக்குச் செல்லும் அணிகள் எவை என இன்னமும் முடிவாகவில்லை. நாளை (27.02.2026) இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடியேயான ஆட்டம்

ஹைதராபாத் தூத்துக்குடி இடையே நேரடி ரயில் சேவை; திருவண்ணாமலை வழி!

ரயில்வே வாரியம் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதற்கான அறிவிப்புகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.

தேசத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதிலேயே குறியாக இருக்கும் காங்கிரஸ்!

ஏற்கெனவே நீங்கள் அம்மணக்கட்டைகள் தான் என்பது தேசத்திற்கு நன்கு தெரியும். பிறகு உடைகளை அவிழ்த்துப் போட என்ன அவசியம்? 

Entertainment News

Popular Categories