அர்ச்சகர்கள் வயிற்றில் அடிப்பதா? அறநிலையத் துறைக்கு இந்து முன்னணி கண்டனம்!

hindumunnani - 2026

அர்ச்சகர்கள் வயிற்றில் அடிப்பதா? இந்து சமய அறநிலையத் துறை அதிகார துஷ்பிரயோகம்.. இந்து முன்னணி கடும் கண்டனம் தெரிவிக்கிறது என்று மாநில துணைத் தலைவர் V.P . ஜெயக்குமார் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை:

அர்ச்சகர்கள் தட்டில் காசு போடக்கூடாது எனவும், உண்டியலில் மட்டுமே காணிக்கை செலுத்த வேண்டும் எனவும் வாய் மொழியாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் தெரிவித்ததாக செய்திகள் வந்தன. தமிழகத்தின் ஆலயங்களில் பூஜைகள் செய்து இறை பணியை லட்சக்கணக்கான அர்ச்சகர்கள் மற்றும் பூஜாரிகள் செய்து வருகின்றனர்.

இவர்களுக்கு இந்து சமய அறநிலையத் துறை மிகமிகக் குறைந்த தொகையையே ஊதியமாக வழங்கி வருகிறது. இன்னும் சில ஆலயங்களில் அவர்களுக்கென ஊதியம் ஏதும் வழங்கப்படுவதில்லை. மேலும் பல கோவில்களில் அந்த கோவிலுக்கான பூஜைக்கான பொருட்களை இவர்களே வாங்கி பூஜைகள் செய்து வருகின்றனர். இவ்வாறாக குறைந்த ஊதியத்திலும், ஊதியில்லாமலும் இறைபணி செய்து வரும் பெரும்பாலான அர்ச்சகர்கள் மற்றும் பூஜாரிகளின் வாழ்க்கை தீபாரதனை தட்டில் வரும் காணிக்கைகளை வைத்தே நடக்கிறது என்பது வேதனையான உண்மை.

ALSO READ:  மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

இந்து தர்மத்தில் அர்ச்சகருக்கு காணிக்கை தருவது என்பது நீண்ட கால வழக்கம். அவ்வாறு பக்தர்கள் கொடுக்கும் காணிக்கை முழுக்க முழுக்க அர்ச்சகர் மற்றும் பூஜாரிகளுக்கே சொந்தமானது. ஆலயத்தின் நிர்வாகம் மற்றும் புணரமைப்பு பணிகளுக்காக ஆலயத்தில் வைத்திருக்கும் உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கை செலுத்துகிறார்கள். உண்டியலில் வரும் தொகை முழுக்க முழுக்க ஆலயத்தின் நிர்வாகப் பணிக்கே தவிர அர்ச்சகருக்கு அல்ல.

இவ்வாறான சூழ்நிலையில் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் அர்ச்சகர்கள் மற்றும் பூஜாரிகளுக்கு தீபாரதனை தட்டில் செலுத்தும் காணிக்கைகளை உண்டியலில் போடச் சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். உடனடியாக அறநிலைத்துறை இது போன்ற உத்தரவுகள் வழங்கியிருந்தால் திரும்பப் பெற வேண்டும். மிகவும் ஏழ்மை நிலையில் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் இறை பணிக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட அர்ச்சர்கள் மற்றும் பூஜாரிகளுக்கு எந்த விதமான இடைஞ்சலும் செய்யக்கூடாது என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது… என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories