ஆன்லைன் வர்த்தகத்தில் 1.46கோடி பண மோசடி மூவர் கைது..

vikatan 2023 02 7ce18b54 f9e0 43fe b1ab 2df0685143fc Screenshot 182 1 - 2026

ஆன்லைன் வர்த்தக நிறுவனத்திடம் வியாபாரம் முடித்துதருவதாகக் கூறி ரூ.1.46 கோடி மோசடி செய்த வேலூர் கும்பலை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.

ஹரியானா மாநிலம், குருகிராம் பகுதியைச் சேர்ந்தவர் ரவிகாந்த் லட்சுமணராவ் ஜராங். இவர் ‘Eco Global Private Limited’ என்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகிலிருக்கும் செதுக்கரை கிராமத்தைச் சேர்ந்த சீதாராம் என்பவர், ‘வர்த்தக ஏஜெண்ட்’ எனக்கூறி அறிமுகமாகி யிருக்கிறார். இதையடுத்து, அந்த வர்த்தக நிறுவனத்தில் ரூ.70 லட்சத்துக்கு வியாபாரம் முடித்து, அதற்குரிய பணத்தையும் செலுத்தியிருக்கிறார் சீதாராம். நம்பிக்கை ஏற்பட்டதையடுத்து, அந்நிறுவனம் ரூ.1.80 கோடி வியாபாரத்தை சீதாராமிடம் கொடுத்தது.

ஆனால், வியாபாரம் முடிந்தப் பின்னரும் அந்தத் தொகையை நிறுவனத்தில் செலுத்தாமல் காலம் தாழ்த்தியிருக்கிறார் சீதாராம். நிறுவனம் தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்படவே, சில லட்சங்களை மட்டும் செலுத்தியிருக்கிறார். சுமார் 1,46,08,000 ரூபாயை மோசடியாக கையாடல் செய்திருக்கிறார். கையாடல் செய்யப்பட்ட தொகையை செலுத்திவிட்டதாக வங்கி ரசீதுகள் மற்றும் பணப்பரிவர்த்தனை விபரங்களையும் போலியாக தயாரித்து, சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

தணிக்கையின்போது, இந்த மோசடியை கண்டறிந்த சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர், இதுபற்றி வேலூர் எஸ்.பி அலுவலகத்தில் புகாரளித்தனர். எஸ்.பி ராஜேஸ்கண்ணன் உத்தரவின்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சீதாராமை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர், கையாடல் செய்த ரூ.1.46 கோடி பணத்தை ஆடம்பரமாக செலவழித்தது தெரியவந்தது.

சொகுசு கார், வேன் வாங்கியதுடன், மனை வாங்கி புது வீட்டையும் கட்டி முடித்திருக்கிறார். அதோடு, பெங்களூருவில் இருந்து பெண்களை வரவழைத்து பத்தாயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை பணத்தை அள்ளி இரைத்திருப்பதாகவும் விவரிக்கிறார்கள் போலீஸார். இதையடுத்து, சீதாராமை கைது செய்த போலீஸார், அவரின் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த சதீஷ்குமார், சரவணன் ஆகியோரையும் கைது செய்தனர். மேலும், சீதாராமின் மனைவி விஜிதா மற்றும் வசந்த்குமார், எஸ்.ஆர்.டிரேடர்ஸ் உரிமையாளர் சரண்ராஜ் என மேலும் மூன்று பேர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories