கடந்த 15 நாட்களில் சுமார் 35 ஆயிரம் மாணவர்கள் த.மா.கா.வில் இணைந்துள்ளனர். இளைஞர்களின் நம்பிக்கையைப் பெற்ற கட்சியாக த.மா.கா. விளங்குகிறது என்று பேசினார் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன். சட்டக் கல்லூரியை இடம் மாற்றக்கூடாது, மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் உள்பட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாணவரணி-இளைஞரணி சார்பில் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. வள்ளுவர்கோட்டம் அருகில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார். அப்போது ஜி.கே.வாசன் பேசியது… தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி கிடைக்கும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது என்றால் அதற்கு முழு காரணம் காமராஜர் அமைத்துக் கொடுத்த அடித்தளம்தான். இது நமக்கு பெருமை. இன்றைக்கும் மாணவர்களுக்காக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி குரல் கொடுக்கிறது. அந்த வகையில் மாணவர்களின் நம்பிக்கையைப் பெற்ற கட்சியாக நாம் திகழ்கிறோம். கடந்த 15 நாட்களில் 35 ஆயிரம் மாணவர்கள் நம்முடைய கட்சியில் இணைந்து இருக்கிறார்கள். மத்திய, மாநில அரசுகள் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி கொடுக்க வேண்டும். மாணவர்கள் இந்தியாவின் தூண்கள். மாணவர்களாலே மாற்றத்தை உருவாக்க முடியும். ஆனால் இன்றைக்கு மாணவர்கள் பல்வேறு போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கிறது. கல்வி வணிகமயமாகி வருகிறது. இதனால் மாணவர்களின் தொடர் கல்வி பாதிக்கப்படுகிறது. மாணவர்களுக்கான கல்வி, கட்டமைப்புகளை மத்திய, மாநில அரசுகள் சீராக்கி கொடுக்க வேண்டும். தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் மருத்துவ கல்லூரி, சட்ட கல்லூரி, வனக்கல்லூரி மாணவர்கள் என்று மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மாணவர்களின் போராட்டத்திற்கு அரசு செவி சாய்த்து அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்ட வேண்டும். அதற்கு மாறாக அவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க கூடாது. என்றார் அவர்.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
நெல்லை
தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!
தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.
விளையாட்டு
IND Vs ZIM T20: தொடரை வென்ற இந்திய அணி! நற்பெயர் வாங்கிய சூரியவன்ஷி!
இந்தியா தொடரை அநாயசமாக வென்றது
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
நெல்லை
தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!
தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.
விளையாட்டு
IND Vs ZIM T20: தொடரை வென்ற இந்திய அணி! நற்பெயர் வாங்கிய சூரியவன்ஷி!
இந்தியா தொடரை அநாயசமாக வென்றது
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
உரத்த சிந்தனை
கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?
தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.
இந்தியா
ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை.

