விருதுநகர் நியாய விலை கடை திறப்புவிழாவில் அமைச்சர் கார் சேதம்..

Published:

விருதுநகர் சூலக்கரையில்
மக்களின் கோரிக்கையை ஏற்று பகுதி நேர நியாய விலைக் கடையை வருவாய்த்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
விருதுநகர் அருகே உள்ளது.
சூலக்கரை 30 ஆண்டுகளாக நியாய விலைக்கடை இல்லாமல் அருகில் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரேசன் கடையில் சென்று பொருட்கள் வாங்கி வந்தனர்.

இந்நிலையில் தங்களது பகுதியில்லேயே ரேஷன் பொருட்கள் வாங்கும் வகையில் நியாய விலைக்கடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் சூலக்கரை மக்களின் 30 ஆண்டு கால கோரிக்கையை ஏற்று இன்று இங்கு பகுதி நேர நியாய விலைக்கடையை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கலந்து கொண்டார்.

அமைச்சர் நியாய விலை கடையை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றிக் கொண்டிருக்கும் போது அவரது கார் அருகில் பட்டாசு வெடித்ததில் கல் தெறித்து அமைச்சரின் கார் கண்ணாடி மீது விழுந்து கார் கண்ணாடி உடைந்தது.

ALSO READ:  சோகமான நாள்; திபெத், நேபாளத்தை உருக்குலைத்த திடீர் வெள்ளம், நிலச்சரிவு! அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

உடனே அதிகாரிகள் அமைச்சரின் காரில் இருந்த தேசிய கொடியை அகற்றிவிட்டனர்.
அமைச்சர் வேறு ஒரு காரில் ஏறி சென்றார்.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img