நாடு முழுவதும் ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை..

500x300 1863401 img20230410094749 - 2026
#image_title

நாடு முழுவதும் ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை- இன்றும், நாளையும் நடைபெறுகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா வைரஸ் பாதிப்பு 21.6 சதவீதமாக இருந்தது. அது மார்ச் மாதத்தில் 35.8 சதவீதமாக அதிகரித்தது. நாடு முழுவதும் உள்ள ஆஸ்பத்திரிகளில் இன்றும், நாளையும் கொரோனா தடுப்பு தயார் நிலை ஒத்திகை நடைபெறுகிறது.

நமது நாட்டில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று கட்டுப்படுத்தப்பட்டு மக்கள் நிம்மதிப்பெருமூச்சு விட்ட நிலை திடீரென மாறி உள்ளது. சராசரியாக 6 ஆயிரம் பேருக்கு தினமும் தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ஆயிரம், 2 ஆயிரம் என ஆஸ்பத்திரி சேர்க்கையும் அதிகரித்து வருகிறது.

அதே நேரத்தில் நோயின் தீவிர தாக்குதலோ, குறிப்பிடத்தக்க அளவில் உயிரிழப்புகளோ நேரவில்லை என்பது ஆறுதலான விஷயம். தொற்று பரவல் அதிகரித்து இருப்பதற்கு காரணம் உருமாறிய புதிய வகை கொரோனாவான எக்ஸ்பிபி.1.16 வைரஸ்கள்தான் என சுகாதார நிபுணர்கள் கருதுகின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் இந்த வைரஸ் பாதிப்பு 21.6 சதவீதமாக இருந்தது.

அது மார்ச் மாதத்தில் 35.8 சதவீதமாக அதிகரித்தது. இருப்பினும் தொற்று பரவலை கட்டுப்படுத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 7-ந் தேதி மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா, மாநில சுகாதார மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில், கொரோனா தடுப்பு தயார் நிலை குறித்து, மாநில சுகாதார மந்திரிகள் மாவட்ட நிர்வாகங்களுடனும், சுகாதார அதிகாரிகளுடனும் ஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். கொரோனா வைரஸ் மாதிரிகள் பரிசோதனைகளை அதிகரிப்பதுடன், உறுதி செய்யப்பட்ட மாதிரிகளை மரபணு வரிசைப்படுத்தல் சோதனைக்காக அதற்கான பிரத்யேக பரிசோதனைக்கூடங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியைப் பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா கால கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்ற வேண்டியதின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அறிவுறுத்தினார். எக்ஸ்பிபி.1.5 மற்றும் 6 வகையான உருமாறிய வைரஸ்களை உலக சுகாதார நிறுவனம் தற்போது உன்னிப்பாக கண்காணித்து ஆராய்வதாகவும் மாநிலங்களுக்கு தெரிவிக்கப்பட்டன.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக நாடெங்கும் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தயார் நிலையை சோதித்து அறிவதற்கான ஒத்திகை இன்றும், நாளையும் நடைபெறுகிறது.

இன்று மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா, அரியானா மாநிலம், ஜாஜாரில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு சென்று, அந்த ஆஸ்பத்திரியின் கொரோனா தடுப்பு தயார் நிலை ஒத்திகையை பார்வையிடுகிறார்.

இதே போன்று நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களில் மாநில சுகாதார மந்திரிகள், அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு சென்று கொரோனா வைரஸ் தடுப்பு தயார் நிலை ஒத்திகையை பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories