திருமலையில் ஒரு ஆண்டிற்கு 12 கோடி லட்டுகள் விற்பனை

images 3 - 2026
#image_title

திருப்பதி ஏழுமலையானுக்கு கடந்த 1715-ம் ஆண்டு பூந்தி தயாரித்து படையிலிடப்பட்டு வந்தது. 1940-ம் ஆண்டு பூந்திக்கு பதிலாக லட்டு தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் திருமலையில் ஒரு ஆண்டிற்கு 12 கோடி லட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது.

திருமலை திருப்பதியில் ஏழுமலையானை தரிசனத்திற்கு செய்ய வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது. கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவை பக்தர்கள் புனிதமாக கருதுகின்றனர்.

திருப்பதி ஏழுமலையானுக்கு கடந்த 1715-ம் ஆண்டு பூந்தி தயாரித்து படையிலிடப்பட்டு வந்தது. பின்னர் அதிக அளவில் பூந்தி தயாரித்து 1803 ஆம் ஆண்டு முதல் பக்தர்களுக்கு விற்பனை செய்து வந்தனர்.

அதனை தொடர்ந்து 1940-ம் ஆண்டு பூந்திக்கு பதிலாக லட்டு தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பக்தர்களுக்காக தயார் செய்யப்படும் லட்டுகளில் ஏலக்காய், கல்கண்டு, முந்திரி, திராட்சை, பச்சை கற்பூரம், குங்குமப்பூ, சர்க்கரை கலவை மற்றும் பச்சைப்பயறு மாவு ஆகியவற்றைக் கொண்டு மிகவும் கவனமாகவும் தரமாகவும் லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன.

தினமும் 4 முதல் 4½ லட்சம் லட்டுக்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஒரு சில மாதங்களில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் கூடுதலாக லட்டுகளை தயாரிக்க வெளிநாடுகளில் இருந்து ரூ.50 கோடி மதிப்பில் பூந்தி தயாரிக்கும் எந்திரங்கள் கொண்டுவரப்பட்டு தற்போது லட்டுக்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

தினமும் சராசரியாக தரிசனத்திற்கு வரும் 70 ஆயிரம் பக்தர்களுக்கு 1 லட்டு இலவசமாக வழங்கப்படுகிறது. தேவஸ்தான ஊழியர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட லட்டுகள் தரமாக இருந்ததாகவும் தற்போது எந்திரங்கள் மூலம் தயாரிக்கப்படும் லட்டுகள் தரம் குறைந்து காணப்படுவதாகவும் பக்தர்கள் புகார் தெரிவித்தனர்.

இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிகள் கூறுகையில்:- எந்திரங்கள் மூலம் தயாரிக்கப்படும் லட்டுகளும் தரமானதாக தான் உள்ளது. லட்டுக்களின் தரத்தை பரிசோதிப்பதற்காக தனியாக தேவஸ்தான அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர்.

திருப்பதி தேவஸ்தானம் மூலம் தினமும் சராசரியாக 4 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்படுவதாகவும் மாதத்திற்கு ஒரு கோடி லட்டுகள் என 12 மாதத்திற்கு 12 கோடி லட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். திருப்பதியில் நேற்று 69,782 பேர் தரிசனம் செய்தனர். 27,552 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.5.16 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories