December 5, 2025, 2:48 PM
26.9 C
Chennai

பட்டியல் சமூக மக்களின் இட ஒதுக்கீட்டை முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு கூறு போடும் கட்சிகளைப் புறக்கணிப்போம்!

hindumunnani - 2025

இந்து தலித் மக்களின் இடஒதுக்கீட்டை முஸ்லிம் கிறிஸ்தவர்களுக்கு கூறு போட நினைக்கும் அரசியல் கட்சிகளை புறக்கணிப்போம் – இந்து தலித் மக்களின் குரலாய் இந்துமுன்னணி ஒலிக்கும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை:

மதம் மாறிய தலித் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்கின்ற வழக்கு மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில் நேற்று விவாதம் எழுந்துள்ள நிலையில் இந்திய சமூகத்தில் அது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வாக்கு வங்கி அரசியலுக்காக சிறுபான்மையினரை தாஜா செய்யும் நோக்கத்தில் அமைக்கப்பட்ட ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கை அடிப்படையில், கிறிஸ்தவ இஸ்லாமியர்களாக மதம் மாறிய தலித்துகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது அண்ணல் அம்பேத்கரின் சித்தாந்தத்தை சிதைக்கும் செயலாகும்.

ஏற்றத்தாழ்வுள்ள சமூகத்தில் ஒதுக்கப்பட்ட மக்கள் முன்னேற்றம் காண்பதற்காக அண்ணல் அம்பேத்காரால் உருவாக்கப்பட்டதே இடஒதுக்கீடு கொள்கை ஆகும். இந்து மதத்தில் மட்டும் தான் ஏற்றத்தாழ்வுகள் உள்ளது என கூறிக் கொள்ளும் இஸ்லாமிய, கிறிஸ்தவ மதங்கள் தங்கள் மதத்தில் சம உரிமை உள்ளதாக கூறிவரும் நிலையில் மதம் மாறிய தலித்துகளுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு சலுகை தங்களுக்கும் வேண்டுமென கேட்பது அடிப்படை வாதம் அற்றதாகும். வாக்கு வங்கி அரசியலுக்காக இந்து பட்டியலின மக்களின் சலுகைகளை முஸ்லிம் கிறிஸ்தவர்கள் பிரித்துக் கொடுக்க நினைப்பது இந்து தலித் மக்களுக்கு செய்யும் துரோகம் ஆகும்

ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கையை ஏற்காத தற்போதைய மத்திய அரசு முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி திரு கே ஜி பாலகிருஷ்ணன் தலைமையில் மற்றொரு குழுவினை அமைத்திருப்பது வரவேற்கத்தக்கது. அந்த குழுவின் அறிக்கையும் வரும் வரை காத்திருந்து அதனையும் சேர்த்து பரிசீலிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தை அனைத்து இந்து தலித் மக்களின் குரலாய் இந்துமுன்னணி கேட்டுகொள்கிறது.

மதம் மாறியவர்களுக்கு இட ஒதுக்கீடு சலுகை அளிப்பது மதமாற்றத்தை மேலும் அதிகப்படுத்தும் ஒரு காலகட்டத்தில் இது இந்திய இறையாண்மைக்கு பேராபத்தை ஏற்படுத்தும் என்பதை வாக்கு வங்கி செய்யும் அரசியல் செய்யும் கட்சிகள் உணர வேண்டும். இந்து தலித் மக்களின் உரிமைகளை பறிக்க நினைக்கும் அரசியல்வாதிகளை இந்து பட்டியலை இன மக்கள் அடையாளம் கண்டு அரசியல் ரீதியாக புறக்கணித்தால் மட்டுமே இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என இந்து மக்களை இந்துமுன்னணி கேட்டுக்கொள்கிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories