திமுகவினரின் பேனருக்கு திமுகவினரே சாணியடித்த சம்பவம்.‌

விருதுநகர் மாவட்டத்தில் வத்ராயிருப்பில் திமுகவினரின் பேனருக்கு திமுகவினரே சாணியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

IMG 20230506 WA0050 - 2026
#image_title

வத்திராயிருப்பில் வைக்கப்பட்டிருந்த திமுகவினரின் பிரம்மாண்ட பேனருக்கு திமுகவினரே சாணியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றிய விபரம் வருமாறு

தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் மகன் ரமேஷ் என்பவருக்கு திமுகவில் விளையாட்டு மேம்பாட்டு பிரிவு அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வத்திராயிருப்பில் திமுகவினர் முத்தாலம்மன் திடல் மைதானத்தில் பிளக்ஸ் பேனர் வைத்திருந்தனர். அதில் கட்சி நிர்வாகிகள் பலரது படம் இடம்பெற்று இருந்தது.

இந்நிலையில் ஒருவரது படம் மட்டும் பேப்பர் ஓட்டி மறைக்கப்பட்டிருந்தது.

காலை 9.30 மணிக்கு அங்கு வந்த மகளிர் அணி முன்னாள் அமைப்பாளர் கற்பகம் என்பவர், ஒரு நீண்ட கம்பில் துணியைக் கட்டி அதில் சாணியை தடவி ஒன்றிய செயலாளர் முனியாண்டி என்பவரின் படத்தின் மீது தடவிக் கொண்டிருந்தார்.

இதனால் அங்கு கூட்டம் கூடியது. காவல்துறையினருக்கு தகவல் சென்றது.

சாணியை தடவிய அப்பெண் சிறிது நேரத்தில் அங்கிருந்து சென்றார். பின்னர் பிளக்ஸ் பேனர் வைத்தவர்களை தொடர்பு கொண்ட போலீசார் உடனடியாக அந்த பேனரை கழற்ற உத்தரவிட்டனர். இதனை தொடர்ந்து அங்கு வந்த திமுகவினர் உடனடியாக அந்த பிளக்ஸ் பேனரை அப்புறப் படுத்தினர்.

இச் சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திமுகவினரிடையே உள்ள உட்கட்சி பூசல் இதன் மூலம் வெளிப்படையாக தெரிந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories