தேக்கடி மலர் கண்காட்சி வரும் 21-ந்தேதி வரை நீட்டிப்பு..

images 78 - 2026
#image_title

கேரளாவில் பிரபலமான சுற்றுலா ஸ்தலமாக உள்ள தேக்கடி மலர் கண்காட்சி வரும் 21-ந்தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது .

தேக்கடி வேளாண் தோட்டக்கலை சங்கம், குமுளி பஞ்சாயத்து நிர்வாகம், மன்னாரத்தரை கார்டன் இணைந்து நடத்தும் தேக்கடி 15வது மலர் கண்காட்சி குமுளி-தேக்கடி ரோடு கல்லறைக்கல் மைதானத்தில் கடந்த ஏப்.1-ந்தேதி தொடங்கியது.

நூற்றுக்கணக்கான மலர் வகைகள், அலங்கார செடிகள், சமையலறைத் தோட்டம் அமைக்க தேவையான செடிகள், நாற்றுகள் அனைத்தும் பார்வையாளர்களை கவரும் வகையில் இந்த மலர் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது.

தற்போது தமிழகம்-கேரள மாநிலம் பகுதியில் கோடை விடுமுறை காலமாக உள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. இதனைத் தொடர்ந்து, தேக்கடி மலர் கண்காட்சி வரும் 21-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் தாமஸ் கூறுகையில், மலர் கண்காட்சி கடந்த ஏப். 1-ந் தேதி முதல் மே 14-ந்தேதி வரை நடப்பதாக அறிவிக்கப்பட்டு நடந்துவருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கோடை விடுமுறையை தொடர்ந்து சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமானதால் மே 14-ந்தேதி வரை நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த மலர் கண்காட்சி மேலும் ஒரு வாரம், அதாவது வரும் 21-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நீட்டிக்கப்பட்ட நாட்களில் புதியதாக கருத்தரங்கம், நாடகம், முக்கிய பொழுதுபோக்கு நிகழ்வுகள் நடப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. கண்காட்சிக்கு நுழைவுக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 7 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கும், ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லத்தில் இருப்பவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் கட்டணம் கிடையாது என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Entertainment News

Popular Categories