தமிழ்நாடு முழுவதும் அக்னிநட்சத்திர கத்தரி டாஸ்மாக் கடைகளில் பீர் தட்டுப்பாடு 16 மே 2023 12:04 PM கோடை வெயில் கடுமையாக உள்ளதால் டாஸ்மாக் கடைகளில் அதிகம் பேர் பீர் விரும்பி கேட்கிறார்கள். கோடை காலத்தில் சில கடைகளுக்கு மட்டுமே அதிக அளவில் பீர் வகைகளை அனுப்புகிறார்கள். மேலும் படிக்க சென்னை: தமிழ்நாட்டில் 5,329 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இங்கு விஸ்கி, பிராந்தி, ரம், ஜின், ஒயின், வோட்கா என பலவகை மதுபாட்டில்கள் விற்பனை யாகி வருகிறது. பீர் வகைகளில் 5000, 2000, கிங்பிஷர் உள்ளிட்ட 46 வகை பீர் பாட்டில்கள் டாஸ்மாக் கடைகளில் கிடைக்கும் என்று பட்டியலில் உள்ளது. ஆனால் இப்போது பீர் பாட்டில் ரகங்களில் 4 அல்லது 5 வகை ரகங்கள் தான் உள்ளது. எந்த பீர் வகையை கேட்டாலும் இல்லை என்றுதான் கடைக்காரர் கூறுகிறார். டாஸ்மாக் கடைகளில் மக்கள் விரும்பும் பெரும்பாலான மது வகைகள் இருப்பு இல்லாததால் அறிமுகம் இல்லாத, பெயர் தெரியாத சரக்குகள் தான் அதிகம் விற்பனை செய்யப்படுகின்றன. இது மது குடிப்பவர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்கள் கூறுகையில், ‘அதிகம் விற்பனையாகும் பிராண்டுகளை கேட்டு டெப்போவுக்கு தினமும் தகவல் அளிக்கிறோம். ஆனால் குறிப்பிட்ட சில பிராண்டுகள் மட்டுமே அனுப்புகிறார்கள். இதனால் வாடிக்கையாளர்கள் விரும்பும் பிராண்டுகளை வழங்க இயலவில்லை’ என்றனர். இப்போது கோடை வெயில் கடுமையாக உள்ளதால் டாஸ்மாக் கடைகளில் அதிகம் பேர் பீர் விரும்பி கேட்கிறார்கள். கடைகளுக்கு பீர் பெட்டிகள் வந்து இறங்கிய சில மணி நேரங்களில் அனைத்தும் விற்பனையாகி வருவதால் பீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் காலதாமதமாக கடைகளுக்கு சென்றால் ‘பீர்’ காலியாகிவிட்டது என்று கூறுகிறார்கள். இதுகுறித்து ஊழியர்களிடம் கேட்டபோது, ‘கோடை காலத்தில் சில கடைகளுக்கு மட்டுமே அதிக அளவில் பீர் வகைகளை அனுப்புகிறார்கள். விற்பனை குறைவாக நடக்கும் மற்ற கடைகளுக்கு பிரீமியம் சரக்குகள் தான் அனுப்பப்படுகிறது’ என்றனர். கடந்த சில நாட்களாக பாட்டில் பீர் கேட்டால் டின் பீர், டின் பீர் கேட்டால் பாட்டில் பீர் கிடைத்தது. இப்போது சில நாட்களாக எந்த பீர் வகைகளும் கிடைக்கவில்லை. பீர் குடிப்பவர்கள் பல கடைகளுக்கு சென்றாலும் பீர் கிடைக்காத விரக்தியில் மது குடித்து செல்கிறார்கள். பீர் குடிப்பவர்கள் விரும்பி கேட்கும் பிராண்டுகளில் 46 வகை பீர் இருப்பதாக டாஸ்மாக் கூறினாலும் கிடைப்பதோ 4 அல்லது 5 வகையான பீர் ரகங்கள் தான். இதனால் பீர் பிரியர்கள் கடை கடையாக சென்று விசாரித்து கடைசியில் கிடைக்கும் பீர் பாட்டிலை வாங்கிச்செல்கின்றனர்.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
சற்றுமுன்
மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!
மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.
சற்றுமுன்
முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!
முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!
அரசியல்
எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!
“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.
அரசியல்
விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!
ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
சற்றுமுன்
மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!
மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.
சற்றுமுன்
முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!
முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!
அரசியல்
எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!
“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.
அரசியல்
விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!
ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.
அரசியல்
மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!
மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....



