டாஸ்மாக் கடைகளில் பீர் தட்டுப்பாடு

தமிழ்நாடு முழுவதும் அக்னிநட்சத்திர கத்தரி டாஸ்மாக் கடைகளில் பீர் தட்டுப்பாடு 16 மே 2023 12:04 PM கோடை வெயில் கடுமையாக உள்ளதால் டாஸ்மாக் கடைகளில் அதிகம் பேர் பீர் விரும்பி கேட்கிறார்கள். கோடை காலத்தில் சில கடைகளுக்கு மட்டுமே அதிக அளவில் பீர் வகைகளை அனுப்புகிறார்கள். மேலும் படிக்க சென்னை: தமிழ்நாட்டில் 5,329 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இங்கு விஸ்கி, பிராந்தி, ரம், ஜின், ஒயின், வோட்கா என பலவகை மதுபாட்டில்கள் விற்பனை யாகி வருகிறது. பீர் வகைகளில் 5000, 2000, கிங்பிஷர் உள்ளிட்ட 46 வகை பீர் பாட்டில்கள் டாஸ்மாக் கடைகளில் கிடைக்கும் என்று பட்டியலில் உள்ளது. ஆனால் இப்போது பீர் பாட்டில் ரகங்களில் 4 அல்லது 5 வகை ரகங்கள் தான் உள்ளது. எந்த பீர் வகையை கேட்டாலும் இல்லை என்றுதான் கடைக்காரர் கூறுகிறார். டாஸ்மாக் கடைகளில் மக்கள் விரும்பும் பெரும்பாலான மது வகைகள் இருப்பு இல்லாததால் அறிமுகம் இல்லாத, பெயர் தெரியாத சரக்குகள் தான் அதிகம் விற்பனை செய்யப்படுகின்றன. இது மது குடிப்பவர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்கள் கூறுகையில், ‘அதிகம் விற்பனையாகும் பிராண்டுகளை கேட்டு டெப்போவுக்கு தினமும் தகவல் அளிக்கிறோம். ஆனால் குறிப்பிட்ட சில பிராண்டுகள் மட்டுமே அனுப்புகிறார்கள். இதனால் வாடிக்கையாளர்கள் விரும்பும் பிராண்டுகளை வழங்க இயலவில்லை’ என்றனர். இப்போது கோடை வெயில் கடுமையாக உள்ளதால் டாஸ்மாக் கடைகளில் அதிகம் பேர் பீர் விரும்பி கேட்கிறார்கள். கடைகளுக்கு பீர் பெட்டிகள் வந்து இறங்கிய சில மணி நேரங்களில் அனைத்தும் விற்பனையாகி வருவதால் பீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் காலதாமதமாக கடைகளுக்கு சென்றால் ‘பீர்’ காலியாகிவிட்டது என்று கூறுகிறார்கள். இதுகுறித்து ஊழியர்களிடம் கேட்டபோது, ‘கோடை காலத்தில் சில கடைகளுக்கு மட்டுமே அதிக அளவில் பீர் வகைகளை அனுப்புகிறார்கள். விற்பனை குறைவாக நடக்கும் மற்ற கடைகளுக்கு பிரீமியம் சரக்குகள் தான் அனுப்பப்படுகிறது’ என்றனர். கடந்த சில நாட்களாக பாட்டில் பீர் கேட்டால் டின் பீர், டின் பீர் கேட்டால் பாட்டில் பீர் கிடைத்தது. இப்போது சில நாட்களாக எந்த பீர் வகைகளும் கிடைக்கவில்லை. பீர் குடிப்பவர்கள் பல கடைகளுக்கு சென்றாலும் பீர் கிடைக்காத விரக்தியில் மது குடித்து செல்கிறார்கள். பீர் குடிப்பவர்கள் விரும்பி கேட்கும் பிராண்டுகளில் 46 வகை பீர் இருப்பதாக டாஸ்மாக் கூறினாலும் கிடைப்பதோ 4 அல்லது 5 வகையான பீர் ரகங்கள் தான். இதனால் பீர் பிரியர்கள் கடை கடையாக சென்று விசாரித்து கடைசியில் கிடைக்கும் பீர் பாட்டிலை வாங்கிச்செல்கின்றனர்.

ALSO READ:  பிரசாரத்தில் இருந்த திமுக., வேட்பாளர்; வீட்டில் 122 பவுன் நகை கொள்ளை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories