தமிழ்நாடு முழுவதும் அக்னிநட்சத்திர கத்தரி டாஸ்மாக் கடைகளில் பீர் தட்டுப்பாடு 16 மே 2023 12:04 PM கோடை வெயில் கடுமையாக உள்ளதால் டாஸ்மாக் கடைகளில் அதிகம் பேர் பீர் விரும்பி கேட்கிறார்கள். கோடை காலத்தில் சில கடைகளுக்கு மட்டுமே அதிக அளவில் பீர் வகைகளை அனுப்புகிறார்கள். மேலும் படிக்க சென்னை: தமிழ்நாட்டில் 5,329 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இங்கு விஸ்கி, பிராந்தி, ரம், ஜின், ஒயின், வோட்கா என பலவகை மதுபாட்டில்கள் விற்பனை யாகி வருகிறது. பீர் வகைகளில் 5000, 2000, கிங்பிஷர் உள்ளிட்ட 46 வகை பீர் பாட்டில்கள் டாஸ்மாக் கடைகளில் கிடைக்கும் என்று பட்டியலில் உள்ளது. ஆனால் இப்போது பீர் பாட்டில் ரகங்களில் 4 அல்லது 5 வகை ரகங்கள் தான் உள்ளது. எந்த பீர் வகையை கேட்டாலும் இல்லை என்றுதான் கடைக்காரர் கூறுகிறார். டாஸ்மாக் கடைகளில் மக்கள் விரும்பும் பெரும்பாலான மது வகைகள் இருப்பு இல்லாததால் அறிமுகம் இல்லாத, பெயர் தெரியாத சரக்குகள் தான் அதிகம் விற்பனை செய்யப்படுகின்றன. இது மது குடிப்பவர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்கள் கூறுகையில், ‘அதிகம் விற்பனையாகும் பிராண்டுகளை கேட்டு டெப்போவுக்கு தினமும் தகவல் அளிக்கிறோம். ஆனால் குறிப்பிட்ட சில பிராண்டுகள் மட்டுமே அனுப்புகிறார்கள். இதனால் வாடிக்கையாளர்கள் விரும்பும் பிராண்டுகளை வழங்க இயலவில்லை’ என்றனர். இப்போது கோடை வெயில் கடுமையாக உள்ளதால் டாஸ்மாக் கடைகளில் அதிகம் பேர் பீர் விரும்பி கேட்கிறார்கள். கடைகளுக்கு பீர் பெட்டிகள் வந்து இறங்கிய சில மணி நேரங்களில் அனைத்தும் விற்பனையாகி வருவதால் பீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் காலதாமதமாக கடைகளுக்கு சென்றால் ‘பீர்’ காலியாகிவிட்டது என்று கூறுகிறார்கள். இதுகுறித்து ஊழியர்களிடம் கேட்டபோது, ‘கோடை காலத்தில் சில கடைகளுக்கு மட்டுமே அதிக அளவில் பீர் வகைகளை அனுப்புகிறார்கள். விற்பனை குறைவாக நடக்கும் மற்ற கடைகளுக்கு பிரீமியம் சரக்குகள் தான் அனுப்பப்படுகிறது’ என்றனர். கடந்த சில நாட்களாக பாட்டில் பீர் கேட்டால் டின் பீர், டின் பீர் கேட்டால் பாட்டில் பீர் கிடைத்தது. இப்போது சில நாட்களாக எந்த பீர் வகைகளும் கிடைக்கவில்லை. பீர் குடிப்பவர்கள் பல கடைகளுக்கு சென்றாலும் பீர் கிடைக்காத விரக்தியில் மது குடித்து செல்கிறார்கள். பீர் குடிப்பவர்கள் விரும்பி கேட்கும் பிராண்டுகளில் 46 வகை பீர் இருப்பதாக டாஸ்மாக் கூறினாலும் கிடைப்பதோ 4 அல்லது 5 வகையான பீர் ரகங்கள் தான். இதனால் பீர் பிரியர்கள் கடை கடையாக சென்று விசாரித்து கடைசியில் கிடைக்கும் பீர் பாட்டிலை வாங்கிச்செல்கின்றனர்.
Hot this week
சற்றுமுன்
ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
உரத்த சிந்தனை
அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?
ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?
நூலரங்கம்
நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!
நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை
வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics
சற்றுமுன்
ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
உரத்த சிந்தனை
அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?
ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?
நூலரங்கம்
நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!
நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை
வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
சற்றுமுன்
தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!
தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
சற்றுமுன்
தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!
தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.
மதுரை
பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!
மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:



