December 6, 2025, 11:08 AM
26.8 C
Chennai

உதகை 125வது மலர் கண்காட்சி துவக்கம்..

mcms 9 - 2025
#image_title

உதகை தாவரவியல் பூங்காவில் 125வது மலர் கண்காட்சி ராணுவ இசையுடன் தொடங்கியுள்ளது.

மலைகளின் அரசியான உதகையில் கோடைகாலமானது நடைபெற்று வருகிறது. இந்த சீசனை முன்னிட்டு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் படையெடுக்க தொடங்கியிருப்பதனால், சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசிப்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

images 2023 05 19T133108024 - 2025
#image_title

அதன் முக்கிய நிகழ்வாக 10.15 மணியளவில் 125 மலர் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. மலர் கண்காட்சியை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் கா.இராமச்சந்திரன், நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.ராசா மற்றும் நீலகிரி ஆட்சி தலைவர் அம்ரித் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்து மலர்களை பார்வையிட்டனர்.

மேலும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மலர் சிற்பங்களையும், மலர் அலங்காரங்களையும் பார்த்து ரசித்து வருகின்றனர். இந்த மலர் கண்காட்சியை பொறுத்தவரையில் சிறப்பு அம்சமாக 85,000 கார்னேசன் மலர் கொண்டு 46 அடி அகலம், 22 அடி உயரம் கொண்ட மயில் உருவம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

IMG 20230519 WA0075 - 2025
#image_title

20க்கும் மேற்பட்ட மலர் அலங்காரங்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கிறது. மலர் நாடங்களிலும் 35ஆயிரம் மலர் செடிகள், லட்சக்கணக்கான மலர்களுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 125 வது மலர் கண்காட்சியை குறிப்பிடும் வகையில் மலர் அலங்காரம் ஒன்றும் 175 ஆண்டுகள் சிறப்பு புகழ் மிக்க தாவரவியல் பூங்காவை குறிப்பிடும் வகையாக ஒரு மலர் அலங்காரம் வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சின்னங்களாக கருதப்படும் நீலகிரி வரையாடு, மரகத பூ, மரகத புறா, செங்காழ்ந்தல் மலர் போன்ற பல்வேறு மலர் சிற்பங்களும் அங்கங்கே கட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அதே போல வளர்ந்து வரும் வனவிலங்குகள், செல்பி மேடை, மஞ்சள் பை என இருபதுக்கும் மேற்பட்ட உருவங்கள் சுமார் 2 லட்சம் மலர்களை கொண்டு தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மலர் கண்காட்சியானது 5 நாட்களுக்கு நடைபெற உள்ள நிலையில் இன்று காலை முதலே ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் இந்த மலர் கண்காட்சியை காண்பதற்காக வந்துள்ளனர். மலர் கண்காட்சியின் பாதுகாப்பை பொறுத்தவையில் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் தலைமையில் 1,100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories