பெர்த்: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பெர்த்தில் இன்று நடைபெற்ற 21வது லீக் சுற்றுப் போட்டியில், இந்தியா, யுஏஇ அணிகள் மோதின. இதில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு எமிரேட் அணி முதலாவதாக பேட் செய்யத் தீர்மானித்து களம் இறங்கியது. இருப்பினும் அந்த அணி துவக்கம் முதலே தொடர்ச்சியாக விக்கெட்களை இழந்து வந்தது. நடுவரிசையில் களம் கண்ட ஷைமான் அன்வர் 35 ரன்னும், குர்ரம் கான் 14, குருகே 10 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டம் இழந்தனர். 31.3 ஓவரில் அந்த அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 102 ரன் எடுத்தது. இதை அடுத்து 103 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி ஆடத் தொடங்கியது. துவக்க வீரர் த்வான் 17 பந்துகளில் 14 ரன் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். ரோஹித் சர்மாவும் கோலியும் இணைந்து மேற்கொண்டு விக்கெட் இழப்பின்றி தேவையான 104 ரன்களை சேர்த்தனர். ரோஹித் 55 பந்துகளில் 57 ரன் எடுத்தார். கோலி 41 பந்துகளில் 33 ரன் சேர்த்தார். இந்திய இன்னிங்ஸில் ஒரே ஒரு சிக்ஸரை ரோஹித் அடித்தார். இந்திய அணி 18.5 ஓவரில் ஒரு விக்கெட் இழந்து 104 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
Published:

