December 6, 2025, 4:09 PM
29.4 C
Chennai

பழநி உண்டியலில் தவறாக தங்க செயினை போட்ட பெண்ணுக்கு புதிய செயின்..

mcms - 2025
#image_title

பழநி கோயில் உண்டியலில் தவறுதலாக தங்க செயினை போட்ட கேரளாவை சேர்ந்த பெண்ணுக்கு புதிய செயினை கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் வழங்கினார்.

கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், கார்திகாபள்ளியைச் சேர்ந்தவர் சசிதரன் பிள்ளை. இவரது மகள் சங்கீதா (28) கடந்த ஆண்டு செப். 19ம் தேதி பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். அங்கு கழுத்தில் அணிந்திருந்த துளசி மாலையை கழட்டி உண்டியலில் போட முற்பட்டுள்ளார்.

அப்போது அவர் அணிந்திருந்த 2 சவரன் தங்க செயினையும் சேர்த்து, தவறுதலாக உண்டியலில் செலுத்தி விட்டார். தங்கள் குடும்பம் ஏழ்மை நிலையில் உள்ளதென்றும், அதனை கருத்தில் கொண்டு உண்டியலில் செலுத்தப்பட்ட தங்க செயினை திரும்ப வழங்குமாறு கோயில் நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்தார்.

இந்த நிகழ்வுகளை கோயில் அதிகாரிகள் சிசிடிவி கேமரா காட்சிகளின் மூலம் உறுதி செய்தனர். ஆனால், சட்டத்தின்படி உண்டியலில் விழுந்த பொருட்கள் திரும்ப வழங்க வழியில்லை.

இந்நிலையில் பழநி கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் சந்திரமோகன், ரூ.1.09 லட்சம் மதிப்புள்ள 17.46 கிராம் எடையுள்ள தங்கச் செயினை அப்பெண்ணிற்கு வழங்கினார். நேற்று சங்கீதா தனது குடும்பத்தினருடன் வந்து, கண்ணீர் மல்க தங்கச் சங்கிலியை பெற்றுச் சென்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories