கர்நாடகா ஹிஜாப் அணிய தடை உத்தரவு- வாபஸ் பெற பரிசீலனை ..

Published:

f9b7e9a96e - 2026
#image_title

கர்நாடகாவில் ஹிஜாப் அணிவதைத் தடை செய்யும் ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வித் துறையின் சுற்றறிக்கையை திரும்பப் பெறுவது குறித்து தற்போதைய காங்கிரஸ் அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது கர்நாடகாவில் உள்ள பள்ளிகள் மற்றும் பல்கலைக் கழகங்களுக்கு முந்தைய ஆட்சியில் ஹிஜாப் அணிவதைத் தடை செய்யும் ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வித் துறையின் சுற்றறிக்கையை திரும்பப் பெறுவது குறித்து தற்போதைய காங்கிரஸ் அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

மாநிலத்தில் அமைதி குலைந்தால், பஜ்ரங் தள் போன்ற அமைப்புகளை தனது அரசு தடை செய்யும் என்றும் மூத்த மந்திரி பிரியங்க் கார்கே கூறி உள்ளார். அவர் கூறியதாவது:-

கர்நாடகாவை சொர்க்கமாக மாற்றுவோம் என்று எங்கள் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளோம். அமைதி சீர்குலைந்தால், அது பஜ்ரங்தளமா அல்லது வேறு எந்த சங்க பரிவார அமைப்பா என்பதை நாங்கள் கருத்தில் கொள்ள மாட்டோம்.

யாராவது சட்டத்தை மீறினால், தடை விதித்தாலும் அவர்கள் நாட்டின் சட்டத்தின்படி நடத்தப்படுவார்கள். கடந்த நான்காண்டுகளாக சட்டத்துக்கோ, காவல்துறைக்கோ அஞ்சாமல் சில தனிமனிதர்கள் சமூகத்தில் சுதந்திரமாக உலா வருகின்றனர்.பாஜக தலைமை அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கருதினால், அவர்கள் பாகிஸ்தானுக்கு செல்லலாம்.

முந்தைய பா.ஜ.க. அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்ட பசுவதைத் தடுப்பு மற்றும் மதமாற்றத் தடைச் சட்டங்கள் உட்பட அனைத்துச் சட்டங்களையும் தவிர, ஹிஜாப் உத்தரவு மற்றும் பாடப்புத்தகங்களின் திருத்தம் ஆகியவற்றை நாங்கள் மதிப்பாய்வு செய்வோம். இந்தச் சட்டங்களில் ஏதேனும் சர்ச்சைக்குரியதாகவோ, வகுப்புவாதமாகவோ அல்லது சமூகக் கட்டமைப்பு அல்லது அரசின் கொள்கைக்கு எதிராகவோ இருந்தால், அவற்றை ரத்து செய்வது குறித்து பரிசீலிப்போம் என கூறினார்.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img