ராமேஸ்வரம்- ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா தொடக்கம்:

images 32 1 - 2026
#image_titl

ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா இன்று தொடங்கிய நிலையில் ராமேசுவரம் கோவிலில் நாளை நடைதிறப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகின்றது. நாளை தீர்த்த கிணறுகளில் நீராடவும் சாமி தரிசனம் செய்யவும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மேலும் படிக்க ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் தல வரலாற்றை விளக்கும் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில் இந்த ஆண்டு ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகின்றது. திருவிழாவின் முதல் நாளான இன்று(சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு திட்டக்குடி சந்திப்பு சாலையில் துர்க்கை அம்மன் கோவில் அருகே 10 தலை கொண்ட ராவணனை ராமபிரான் தங்க கேடயத்தில் எழுந்தருளி வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. இதை தொடர்ந்து திருவிழாவில் 2-வது நாளான நாளை பகல் 1:30 மணிக்கு தனுஷ்கோடி செல்லும் சாலையில் உள்ள கோதண்ட ராமர் கோவிலில் வைத்து இலங்கை மன்னராக ராவணன் தம்பி விபிஷ்ணருக்கு பட்டாபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது.

3-வது நாளான 29-ந் தேதி அன்று பகல் 1 மணிக்கு கோவிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நடைபெறுகின்றது. திருவிழாவின் 2-வது நாளான நாளை(ஞாயிற்றுக்கிழமை) தனுஷ்கோடி செல்லும் சாலையில் உள்ள கோதண்ட ராமர் கோவிலில் வைத்து பட்டாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு ராமர் மற்றும் விபீஷ்ணர் கோவிலிலிருந்து கோதண்டராமர் கோவிலுக்கு எழுந்தளுகிறார்கள். இதனால் நாளை கோவில் நடைதிறப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாளை கோவில் நடையானது அதிகாலை 2.30 மணிக்கு திறக்கப்பட்டு 3 மணியிலிருந்து 4 மணி வரையிலும் ஸ்படிகலிங்க தரிசனம் நடைபெற்று பின்னர் கால பூஜை நடைபெறுகின்றது இதை தொடர்ந்து காலை 7 மணிக்கு ராமர் மற்றும் விபிஷ்ணர் கோவிலில் இருந்து புறப்பட்ட பின்னர் கோவில் நடையானது சாத்தப்படுகின்றது.

நாளை காலை 7 மணியிலிருந்து மாலை 5 மணி வரையிலும் கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் நீராடவும் சாமி தரிசனம் செய்யவும் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories