December 6, 2025, 6:29 AM
23.8 C
Chennai

ஸ்ரீவிலியில் நாட்டு துப்பாக்கிகள் தோட்டா பறிமுதல் நால்வர் கைது ..

IMG 20230606 WA0030 - 2025
#image_title

ஸ்ரீவில்லிபுத்தூர் வத்திராயிருப்பில் நாட்டுத் துப்பாக்கிகள் வைத்திருந்த நபர்கள் கைது செய்யப்பட்டு மூன்று துப்பாக்கிகள் மற்றும் 78 தோட்டாக்கள் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உரிய அனுமதி இன்றி முறைகேடாக நாட்டு துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் வைத்திருந்த நபர்களை கைது செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியானது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. மலை அடிவாரத்தில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. இது ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் சரணாலயம் மற்றும் சாம்பல் நிற அணில்கள் சரணாலயமாகவும் செயல்பட்டு வருகிறது.

இங்குள்ள வனவிலங்குகள் அவ்வப்போது விவசாயி நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது. இதனை கட்டுப்படுத்த இப்பகுதியை சேர்ந்தவர்கள் மின்வேலி உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தாலும் ஒரு சிலர் விலை நிலங்களுக்குள் புகும் வன விலங்குகளை வேட்டையாடும் முறைகேடான செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வத்திராயிருப்பை சேர்ந்த சரவணகுமார் மற்றும் வனராஜா ஆகியோர் தங்களது வீட்டில் மிருகங்களை வேட்டையாடுவதற்காக துப்பாக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து சரவணக்குமார், வனராஜா ஆகியோரது வீடுகளை சோதனை செய்த காவல்துறையினர் சரவணகுமார் வீட்டில் உரிய அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த இரண்டு நாட்டு துப்பாக்கிகள் மற்றும் 78 தோட்டாக்கலையும் வனராஜா வீட்டில் ஒரு நாட்டு துப்பாக்கியையும் பறிமுதல் சரவணகுமார், வனராஜா இவர்களுக்கு உதவியாக இருந்த நிகில் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும் சரவணகுமார் வனராஜா ஆகியோர் வனவிலங்குகள் வேட்டைக்கு மட்டும் தான் இந்த துப்பாக்கிகளை பயன்படுத்தினரா அல்லது இதை வைத்து வேறு ஏதும் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்களா என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

அடிக்கடி இப்பகுதிகளில் நாட்டு வெடிகுண்டுகள் நாட்டு துப்பாக்கிகள் ஆகியவைகள் பறிமுதல் செய்யப்பட்டு வந்தாலும் அதிக அளவில் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

வத்திராயிருப்பில் மேலும் ஒருவர் துப்பாக்கியுடன் கைது

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் சட்ட விரோதமாக நாட்டு துப்பாக்கிகள் பதுக்கி வைத்திருந்த வழக்கில் மேலும் ஒருவர் துப்பாக்கியுடன் பிடிபட்டார். இது தொடர்பாக மேலும் இருவரை போலீசார் கைது செய்தனர்.

வத்திராயிருப்பு மறவர் தெற்கு தெருவை சேர்ந்த சரவணகுமார்(38) என்பவர் இரவில் துப்பாக்கிகளுடன் தெரிவதாக வத்திராயிருப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை எடுத்து நேற்று முன்தினம் எஸ்ஐ விஜய பிரபாகரன் என்பவர் தலைமையில் அவரது வீட்டை சுற்றி வளைத்த போலீசார் அவரை கைது செய்ததுடன் அவரிடம் இருந்த இரண்டு நாட்டு துப்பாக்கிகள் 78 தோட்டாக்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர் .

இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட ஏடிஎஸ்பி சோமசுந்தரம் தலைமையில் டிஎஸ்பிக்கள் சபரிநாதன் உள்ளிட்ட போலீசார் அதிகாரிகள் அவரிடம் கடந்த இரு நாட்களாக துருவித் துருவி விசாரணை செய்து வந்தனர் .

அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில்
கிழவன்கோவில் பகுதியை சேர்ந்த வனராஜ்(58) என்பவரின் வீட்டை சுற்றி வளைத்த போலீசார் நாட்டுத் துப்பாக்கியுடன் அவரை கைது செய்தனர். இவர்களுக்கு தோட்டாக்களுக்கான வெடி மருந்து சப்ளை செய்த திண்டுக்கலை சேர்ந்த நிகில்(32) என்பவரையும் போலீஸார் கைது செய்தனர்.
துப்பாக்கி சப்ளை செய்த சேர்ந்த ராஜேஷ் என்பவரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

வத்திராயிருப்பு பகுதியில் தொடர்ந்து அடுத்தடுத்து துப்பாக்கியுடன் பலர் கைது செய்யப்பட்டு வருவது பொதுமக்களையும் போலீசாரையும் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories