February 22, 2026, 8:47 AM
26.1 C
Chennai

ஸ்ரீவிலியில் நாட்டு துப்பாக்கிகள் தோட்டா பறிமுதல் நால்வர் கைது ..

IMG 20230606 WA0030 - 2026
#image_title

ஸ்ரீவில்லிபுத்தூர் வத்திராயிருப்பில் நாட்டுத் துப்பாக்கிகள் வைத்திருந்த நபர்கள் கைது செய்யப்பட்டு மூன்று துப்பாக்கிகள் மற்றும் 78 தோட்டாக்கள் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உரிய அனுமதி இன்றி முறைகேடாக நாட்டு துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் வைத்திருந்த நபர்களை கைது செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியானது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. மலை அடிவாரத்தில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. இது ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் சரணாலயம் மற்றும் சாம்பல் நிற அணில்கள் சரணாலயமாகவும் செயல்பட்டு வருகிறது.

இங்குள்ள வனவிலங்குகள் அவ்வப்போது விவசாயி நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது. இதனை கட்டுப்படுத்த இப்பகுதியை சேர்ந்தவர்கள் மின்வேலி உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தாலும் ஒரு சிலர் விலை நிலங்களுக்குள் புகும் வன விலங்குகளை வேட்டையாடும் முறைகேடான செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வத்திராயிருப்பை சேர்ந்த சரவணகுமார் மற்றும் வனராஜா ஆகியோர் தங்களது வீட்டில் மிருகங்களை வேட்டையாடுவதற்காக துப்பாக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து சரவணக்குமார், வனராஜா ஆகியோரது வீடுகளை சோதனை செய்த காவல்துறையினர் சரவணகுமார் வீட்டில் உரிய அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த இரண்டு நாட்டு துப்பாக்கிகள் மற்றும் 78 தோட்டாக்கலையும் வனராஜா வீட்டில் ஒரு நாட்டு துப்பாக்கியையும் பறிமுதல் சரவணகுமார், வனராஜா இவர்களுக்கு உதவியாக இருந்த நிகில் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும் சரவணகுமார் வனராஜா ஆகியோர் வனவிலங்குகள் வேட்டைக்கு மட்டும் தான் இந்த துப்பாக்கிகளை பயன்படுத்தினரா அல்லது இதை வைத்து வேறு ஏதும் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்களா என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

அடிக்கடி இப்பகுதிகளில் நாட்டு வெடிகுண்டுகள் நாட்டு துப்பாக்கிகள் ஆகியவைகள் பறிமுதல் செய்யப்பட்டு வந்தாலும் அதிக அளவில் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

வத்திராயிருப்பில் மேலும் ஒருவர் துப்பாக்கியுடன் கைது

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் சட்ட விரோதமாக நாட்டு துப்பாக்கிகள் பதுக்கி வைத்திருந்த வழக்கில் மேலும் ஒருவர் துப்பாக்கியுடன் பிடிபட்டார். இது தொடர்பாக மேலும் இருவரை போலீசார் கைது செய்தனர்.

வத்திராயிருப்பு மறவர் தெற்கு தெருவை சேர்ந்த சரவணகுமார்(38) என்பவர் இரவில் துப்பாக்கிகளுடன் தெரிவதாக வத்திராயிருப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை எடுத்து நேற்று முன்தினம் எஸ்ஐ விஜய பிரபாகரன் என்பவர் தலைமையில் அவரது வீட்டை சுற்றி வளைத்த போலீசார் அவரை கைது செய்ததுடன் அவரிடம் இருந்த இரண்டு நாட்டு துப்பாக்கிகள் 78 தோட்டாக்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர் .

இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட ஏடிஎஸ்பி சோமசுந்தரம் தலைமையில் டிஎஸ்பிக்கள் சபரிநாதன் உள்ளிட்ட போலீசார் அதிகாரிகள் அவரிடம் கடந்த இரு நாட்களாக துருவித் துருவி விசாரணை செய்து வந்தனர் .

அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில்
கிழவன்கோவில் பகுதியை சேர்ந்த வனராஜ்(58) என்பவரின் வீட்டை சுற்றி வளைத்த போலீசார் நாட்டுத் துப்பாக்கியுடன் அவரை கைது செய்தனர். இவர்களுக்கு தோட்டாக்களுக்கான வெடி மருந்து சப்ளை செய்த திண்டுக்கலை சேர்ந்த நிகில்(32) என்பவரையும் போலீஸார் கைது செய்தனர்.
துப்பாக்கி சப்ளை செய்த சேர்ந்த ராஜேஷ் என்பவரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

வத்திராயிருப்பு பகுதியில் தொடர்ந்து அடுத்தடுத்து துப்பாக்கியுடன் பலர் கைது செய்யப்பட்டு வருவது பொதுமக்களையும் போலீசாரையும் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories