December 7, 2025, 7:07 PM
26.2 C
Chennai

ஜூன் 15-ல் கூர்ம ஜெயந்தி விழா..

IMG 20230613 WA0096 - 2025
#image_title

ஆனி மாத கிருஷ்ண பட்சத்தில், அதாவது தேய்பிறை துவாதசி திதியில் திருமால் கூர்ம அவதாரம் எடுத்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. ஜூன் 15-ம் தேதி கூர்ம ஜெயந்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது

கூர்ம அவதாரம் (ஆமை) ஸ்ரீ மகாவிஷ்ணு எடுத்த இரண்டாவது அவதாரம் ஆகும். விஷ்ணுவின் கூர்ம அவதாரத்திற்காக இந்தியாவில் நான்கு ஆலயங்கள் அமைந்துள்ளன.

ஆந்திரப் பிரதேசம் சித்தூர் மாவட்டத்தில் கூர்மை, மற்றும் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ கூர்மம், கர்நாடகாவில் சித்ரதுங்கா மாவட்டத்தில் உள்ள காவிரங்காபூர் மற்றும் மேற்கு வங்கம், ஹூக்ளி மாவட்டத்தில் கோகாட் கிராமத்தில் உள்ள சுவரூப்நாராயண் கோவில் ஆகியவை ஆகும்.

கூர்ம அவதாரம் யாரையும் அழிப்பதற்காக அல்ல. மேருமலையை மத்தாகக் கொண்டு பாற்கடலைக் கடையும் போது அதை தாங்கி நிற்பதற்காக எடுத்த அவதாரம் ஆகும். ஆனி மாத கிருஷ்ண பட்சத்தில், அதாவது தேய்பிறை துவாதசி திதியில் திருமால் கூர்ம அவதாரம் எடுத்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. வரும் 15-ம் தேதி கூர்ம ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.

IMG 20230612 WA0070 - 2025
#image_title

ஆந்திரப் பிரதேசம் சித்தூர் மாவட்டத்தில் பலமனேர் அருகில் உள்ள கூர்மை கிராமத்தில் கூர்ம வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இங்கு கூர்ம அவதாரத்தில் பெருமாள் வீற்றிருக்கும் திருக்கோலத்தை தரிசிக்கலாம். மூலவரின் இடுப்புக்கு கீழ்ப்பகுதி ஆமை வடிவத்தில் உள்ளது. நான்கு கரங்களுடன் பெருமாள் வீற்றிருக்கிறார். பூதேவி தாயார் தனி சன்னதியில் வீற்றிருக்கிறார்.முன்புசுமார் 25 கி.மீ. சதுர பரப்பளவில் இக்கோவில் இருந்துள்ளது. அன்னியர் படையெடுப்பில் இருந்து கோவிலைக் காப்பாற்ற மண்ணால் மூடியுள்ளனர். அதன்பின்னர் கோவில் அமைப்பு மாறியது. தற்போதுள்ள கோயில் சிறியது. சித்தூரில் இருந்து பெங்களூரு நெடுஞ்சாலையில் 40 கி.மீ. தொலைவில் இக்கோயிலை அடையலாம்.


ஆந்திர பிரதேச மாநிலம் ஸ்ரீ காகுளம் மாவட்டத்தில் ஸ்ரீகாகுளத்தில் இருந்து 14 கி.மீ. தொலைவில் வங்கக் கடலின் ஓரத்தில் ஸ்ரீகூர்மம் என்ற கிராமம் உள்ளது.
இங்குள்ள கூர்ம வரதராஜ பெருமாள் கோவிலில் கூர்ம அவதார கோலத்தில் எம்பெருமான் வீற்றிருக்கிறார்.

மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம். ஸ்ரீ கூர்மநாயகி தாயார் தனி சன்னதி கொண்டுள்ளார். இக்கோயிலின் முன்புள்ள ஸ்வேத புஷ்கரணி என்ற மிகப்பெரிய குளத்தில் இருந்துதான் ஸ்ரீ கூர்மநாயகி தாயார் வெளிப்பட்டதாக நம்பப்படுகிறது. பகவத் ராமானுஜர் இக்கோவிலில் திருப்பணிகள் மேற்கொண்ட விவரம் கல்வெட்டு மூலம் தெரிய வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories