பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தவர் மு.க.ஸ்டாலின்: கனிமொழி பேச்சு

KANIMOZHI_MPசென்னை: இளைஞர் எழுச்சி தினத்தையொட்டி நடைபெற்ற கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவில், பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தவர் மு.க.ஸ்டாலின் என கனிமொழி எம்.பி. பேசினார். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினின் 63-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இன்றைய தினத்தை தி.மு.க.வினர் இளைஞர் எழுச்சி தினமாக கொண்டாடுகின்றனர். இதையொட்டி, நேற்று தி.மு.க. தலைமை அலுவலகம் அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில், தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் 63 மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் கனிமொழி எம்.பி. பேசியது:- இந்த விழாவை மகளிர் அணி நடத்துவதால் பெண் குழந்தைகளுக்கு மட்டும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதாக நினைக்க வேண்டாம். இது மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில், எனது பிறந்த நாள் விழாவுக்கு விளம்பர பதாகைகள் வைப்பதை விட, பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு சொல்லி உள்ளதால் தான் பெண் குழந்தைகளுக்கு மட்டும் உதவித் தொகை வழங்கப்படுகிறது. பெண் கல்வி என்பது மிகவும் இன்றியமையாத ஒன்று. ஒரு ஆணை படிக்க வைப்பது என்பது தனி நபரை படிக்க வைப்பதாகும். இதுவே ஒரு பெண்ணை படிக்க வைப்பது என்பது ஒரு தலைமுறையை படிக்க வைப்பது என்பதாகும். எனவே பெண் கல்வியின் முக்கியத்துவத்தை பெற்றோர் உணராத காலத்தில், அதனை உணர்த்தும் வகையில் கலைஞர் திருமண உதவி திட்டத்தை கொண்டு வந்தார். அந்த வகையில், அண்ணன் ஸ்டாலினும், தனது அறிக்கையில் பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து இருந்தார். 1996-ல் ஸ்டாலின் சென்னை நகர மேயர் பதவியில் இருக்கும்போது, எத்தனையோ பாலங்களை கட்டியதோடு அல்லாமல், கல்வி துறையிலும் புரட்சியை கொண்டு வந்தார். மாநகராட்சி பள்ளி மாணவர்களும் மற்ற பள்ளி மாணவர்களுக்கு இணையாக படிக்கும் வகையில் ‘மல்டி மீடியா’ படிப்பை முதல் முறையாக அரசு பள்ளிகளில் கொண்டு வந்தார். அதுவரை 55 சதவீதமாக இருந்த தேர்ச்சி விகிதத்தை 78 சதவீதமாக மாற்றினார். மாநகராட்சி பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை 30 சதவீதம் உயர்த்தியதோடு, 2 ஆயிரத்து 20 ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பினார். இதன் மூலம் கல்விக்கு ஸ்டாலின் எவ்வளவு முக்கியத்துவம் வழங்கினார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

Topics

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories