மழை-நெல்லை தென்காசி அணைகளில் நீர் மட்டம் உயர்வு..

IMG 20230710 WA0125 - 2026

மேற்குத் தொடர்ச்சி மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் சாரல் மழையால் நெல்லை தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் 60 அடியைத் தாண்டியது.

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் திங்கள்கிழமை முதல் சாரல் மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் வறண்ட நிலையில் இருந்த அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து அணைகளில் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வந்ருகிறது. நிகழாண்டு கோடையில் நீர்மட்டம் 20 அடி வரை சென்ற பாபநாசம் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை 60 அடியைக் தாண்டியது.

சனிக்கிழமை காலை நிலவரப்படி 143 அடி நீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணையில் நீர்மட்டம் 64.70 அடியாகவும் நீர்வரத்து 3141.20 கன அடியாகவும் நீர் வெளியேற்றம்: 454.75 கன அடியாகவும் இருந்தது.

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

156 அடி நீர்மட்டம் கொண்ட சேர்வலாறு அணையில் நீர்மட்டம் 96.75 அடியாக இருந்தது.

118 அடி நீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணையில் நீர்மட்டம் 45.20 அடியாகவும் நீர்வரத்து 133.00 கன அடியாகவும் வெளியேற்றம் 50.00 கன அடியாகவும் இருந்தது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள 85 அடி நீர் மட்டம் கொண்ட கடனாநதி அணையில் நீர்மட்டம் 54 அடியாகவும் நீர்வரத்து 219 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 5 கன அடியாகவும் இருந்தது. 84 அடி நீர்மட்டம் ராமநதி அணையில் நீர்மட்டம் 58 அடியாகவும் நீர்வரத்து 98 கன அடியாகவும் வெளியேற்றம் 3 கனஅடியாகவும் இருந்தது. 72.10 அடி நீர் மட்டம் கொண்ட கருப்பாநதி அணையில் நீர்மட்டம் 34.12 அடியாகவும் நீர்வரத்து 19 கனஅடியாகவும் நீர் வெளியேற்றம் 3 கனஅடியாகவும் இருந்தது. 36.10 அடி நீர்மட்டம் கொண்ட குண்டாறு அணையில் நீர்மட்டம் 36.10 அடியாகவும் நீர்வரத்து மற்றும் நீர்வெளியேற்றம் 67 கனஅடியாகவும் இருந்தது. 132 அடி நீர் மட்டம் கொண்ட கருப்பாநதி அணையில் நீர்மட்டம் 77 அடியாகவும் நீர்வரத்து 104 கனஅடியாகவும் இருந்தது. நீர் வெளியேற்றம் இல்லை .

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

மழையளவு (மி.மீட்டரில்)
திருநெல்வேலி மாவட்டம் : பாபநாசம் அணை 4, சேர்வலாறு அணை 7, பாளையங்கோட்டை 2, திருநெல்வேலி 1.4, சேரன்மகாதேவி 6, மாஞ்சோலை 6, காக்காச்சி 10, நாலுமுக்கு 18, ஊத்து 21.

தென்காசி மாவட்டம்:

தென்காசி 4, செங்கோட்டை 4.8, கடனாநதி அணை 10, ராமநதி அணை 7.2, கருப்பாநதி 2, குண்டாறு 19.4, அடவிநயினார் கோயில் அணை 40.

அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருவதால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் நீங்கிய நிலையில் அணைகளிலிருந்து விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories