December 6, 2025, 12:53 AM
26 C
Chennai

மழை-நெல்லை தென்காசி அணைகளில் நீர் மட்டம் உயர்வு..

IMG 20230710 WA0125 - 2025

மேற்குத் தொடர்ச்சி மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் சாரல் மழையால் நெல்லை தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் 60 அடியைத் தாண்டியது.

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் திங்கள்கிழமை முதல் சாரல் மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் வறண்ட நிலையில் இருந்த அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து அணைகளில் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வந்ருகிறது. நிகழாண்டு கோடையில் நீர்மட்டம் 20 அடி வரை சென்ற பாபநாசம் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை 60 அடியைக் தாண்டியது.

சனிக்கிழமை காலை நிலவரப்படி 143 அடி நீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணையில் நீர்மட்டம் 64.70 அடியாகவும் நீர்வரத்து 3141.20 கன அடியாகவும் நீர் வெளியேற்றம்: 454.75 கன அடியாகவும் இருந்தது.

156 அடி நீர்மட்டம் கொண்ட சேர்வலாறு அணையில் நீர்மட்டம் 96.75 அடியாக இருந்தது.

118 அடி நீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணையில் நீர்மட்டம் 45.20 அடியாகவும் நீர்வரத்து 133.00 கன அடியாகவும் வெளியேற்றம் 50.00 கன அடியாகவும் இருந்தது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள 85 அடி நீர் மட்டம் கொண்ட கடனாநதி அணையில் நீர்மட்டம் 54 அடியாகவும் நீர்வரத்து 219 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 5 கன அடியாகவும் இருந்தது. 84 அடி நீர்மட்டம் ராமநதி அணையில் நீர்மட்டம் 58 அடியாகவும் நீர்வரத்து 98 கன அடியாகவும் வெளியேற்றம் 3 கனஅடியாகவும் இருந்தது. 72.10 அடி நீர் மட்டம் கொண்ட கருப்பாநதி அணையில் நீர்மட்டம் 34.12 அடியாகவும் நீர்வரத்து 19 கனஅடியாகவும் நீர் வெளியேற்றம் 3 கனஅடியாகவும் இருந்தது. 36.10 அடி நீர்மட்டம் கொண்ட குண்டாறு அணையில் நீர்மட்டம் 36.10 அடியாகவும் நீர்வரத்து மற்றும் நீர்வெளியேற்றம் 67 கனஅடியாகவும் இருந்தது. 132 அடி நீர் மட்டம் கொண்ட கருப்பாநதி அணையில் நீர்மட்டம் 77 அடியாகவும் நீர்வரத்து 104 கனஅடியாகவும் இருந்தது. நீர் வெளியேற்றம் இல்லை .

மழையளவு (மி.மீட்டரில்)
திருநெல்வேலி மாவட்டம் : பாபநாசம் அணை 4, சேர்வலாறு அணை 7, பாளையங்கோட்டை 2, திருநெல்வேலி 1.4, சேரன்மகாதேவி 6, மாஞ்சோலை 6, காக்காச்சி 10, நாலுமுக்கு 18, ஊத்து 21.

தென்காசி மாவட்டம்:

தென்காசி 4, செங்கோட்டை 4.8, கடனாநதி அணை 10, ராமநதி அணை 7.2, கருப்பாநதி 2, குண்டாறு 19.4, அடவிநயினார் கோயில் அணை 40.

அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருவதால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் நீங்கிய நிலையில் அணைகளிலிருந்து விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories