மழை-நெல்லை தென்காசி அணைகளில் நீர் மட்டம் உயர்வு..

IMG 20230710 WA0125 - 2026

மேற்குத் தொடர்ச்சி மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் சாரல் மழையால் நெல்லை தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் 60 அடியைத் தாண்டியது.

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் திங்கள்கிழமை முதல் சாரல் மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் வறண்ட நிலையில் இருந்த அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து அணைகளில் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வந்ருகிறது. நிகழாண்டு கோடையில் நீர்மட்டம் 20 அடி வரை சென்ற பாபநாசம் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை 60 அடியைக் தாண்டியது.

சனிக்கிழமை காலை நிலவரப்படி 143 அடி நீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணையில் நீர்மட்டம் 64.70 அடியாகவும் நீர்வரத்து 3141.20 கன அடியாகவும் நீர் வெளியேற்றம்: 454.75 கன அடியாகவும் இருந்தது.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

156 அடி நீர்மட்டம் கொண்ட சேர்வலாறு அணையில் நீர்மட்டம் 96.75 அடியாக இருந்தது.

118 அடி நீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணையில் நீர்மட்டம் 45.20 அடியாகவும் நீர்வரத்து 133.00 கன அடியாகவும் வெளியேற்றம் 50.00 கன அடியாகவும் இருந்தது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள 85 அடி நீர் மட்டம் கொண்ட கடனாநதி அணையில் நீர்மட்டம் 54 அடியாகவும் நீர்வரத்து 219 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 5 கன அடியாகவும் இருந்தது. 84 அடி நீர்மட்டம் ராமநதி அணையில் நீர்மட்டம் 58 அடியாகவும் நீர்வரத்து 98 கன அடியாகவும் வெளியேற்றம் 3 கனஅடியாகவும் இருந்தது. 72.10 அடி நீர் மட்டம் கொண்ட கருப்பாநதி அணையில் நீர்மட்டம் 34.12 அடியாகவும் நீர்வரத்து 19 கனஅடியாகவும் நீர் வெளியேற்றம் 3 கனஅடியாகவும் இருந்தது. 36.10 அடி நீர்மட்டம் கொண்ட குண்டாறு அணையில் நீர்மட்டம் 36.10 அடியாகவும் நீர்வரத்து மற்றும் நீர்வெளியேற்றம் 67 கனஅடியாகவும் இருந்தது. 132 அடி நீர் மட்டம் கொண்ட கருப்பாநதி அணையில் நீர்மட்டம் 77 அடியாகவும் நீர்வரத்து 104 கனஅடியாகவும் இருந்தது. நீர் வெளியேற்றம் இல்லை .

ALSO READ:  மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

மழையளவு (மி.மீட்டரில்)
திருநெல்வேலி மாவட்டம் : பாபநாசம் அணை 4, சேர்வலாறு அணை 7, பாளையங்கோட்டை 2, திருநெல்வேலி 1.4, சேரன்மகாதேவி 6, மாஞ்சோலை 6, காக்காச்சி 10, நாலுமுக்கு 18, ஊத்து 21.

தென்காசி மாவட்டம்:

தென்காசி 4, செங்கோட்டை 4.8, கடனாநதி அணை 10, ராமநதி அணை 7.2, கருப்பாநதி 2, குண்டாறு 19.4, அடவிநயினார் கோயில் அணை 40.

அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருவதால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் நீங்கிய நிலையில் அணைகளிலிருந்து விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories