கட்டிடத் தொழிலாளருக்காக டாஸ்மாக் நேரத்தைக் கூட்டி… டெட்ரா பாக்கெட்டில் கொடுத்து… சர்ச்சையில் அமைச்சர்!

tasmac muthusamy - 2026

தலைமைச் செயலகத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மாவட்ட நிலை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையர் ரத்னா, தமிழ்நாடு மாநில வாணிபக்கழக நிர்வாக இயக்குனர் விசாகன் ஆகியோர் பங்கேற்றனர்.

இதன்  பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் முத்துசாமி  பேசினார். அப்போது உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதாவும் உடன் இருந்தார். 

டாஸ்மாக் கடைகளுக்கும், கடையில் வசூலான பணத்தை செலுத்தும் ஊழியருக்கும் பாதுகாப்பு தேவை. வங்கி ஊழியரே கடைக்குச் சென்று பணத்தைப் பெற்றுக்கொள்ளலாமா? என்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கிறோம். சென்னையில் அதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மற்ற இடங்களிலும் அது செயல்படுத்தப்படும்.

மது விற்பனை செய்வது வருமானத்திற்கான நோக்கமல்ல. விற்பனையில் இலக்கு நிர்ணயிக்கப்படுவது, வருமானத்தை கூட்டுவதற்காக அல்ல. மது விற்பனை குறைந்தால் அதற்கு காரணம் என்ன? மது குடிப்பதை யாரும் நிறுத்தி இருக்கிறார்களா? அல்லது, மாற்றாக வேறு தவறான இடத்திற்கு செல்கிறார்களா? என்பதை கண்டறியவே இந்த இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது.

டாஸ்மாக் பாட்டில்களால் பல பிரச்னைகள் உள்ளன. கண்ட இடங்களிலும் அவை வீசப்பட்டு விடுகின்றன. எனவே மது பாட்டிலுக்கு பதிலாக ‘டெட்ரா பாக்கெட்’ வரவேண்டும் என்று பல தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர். குறுகிய இடத்தில் அவற்றை வைக்கலாம். அவற்றை கையாள்வது எளிது. அதோடு உடைந்து நஷ்டம் ஏற்படுவது இருக்காது. எனவே அதன் அடிப்படையில் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. டெட்ரா பேக் மூலம் விற்பனை செய்து, அதை மறு சுழற்சியாக மீண்டும் பயன்படுத்தலாம்.

அதுபோல கடை திறக்கும் காலநேரம் பற்றி ஆய்வு செய்தபோது, காலை 7 மணியில் இருந்து 9 மணி வரை கட்டட வேலை போன்ற கடுமையான உடலுழைப்பு தேவைப்படும் வேலைக்குச் செல்பவர்கள் மது கிடைக்காமல் சிரமம் அடைகிறார்கள் என்று கண்டறிந்தோம். அவர்களுக்காக என்ன ஏற்பாட்டை செய்யலாம்? என்பதில் இன்னும் முடிவெடுக்கவில்லை.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

உடலுக்கு நன்மை தரும் கள்ளை விற்பனை செய்வது பற்றி கேட்டால், விவசாயிகளை மனதில் வைத்து அதை செய்யலாம் என்பதில் எங்களுக்கு மாறுபட்ட கருத்து இல்லை. விவசாயிகளுக்கு நன்மை ஏற்படுகிறது என்பது மிக அருமையான விஷயம். விவசாயிகளின் நன்மை என்பதில் முதல்வருக்கும் மாறுபட்ட கருத்து கிடையாது. ஆனால் கள் விற்பனையில் ஈடுபட்ட மாநிலங்களில் பல பிரச்னைகள் எழுந்துள்ளன. அங்கு நடக்கும் தவறுகள் இங்கு வந்துவிடக் கூடாது என்பதையும் பார்க்க வேண்டியதுள்ளது.

இது பற்றி ஆய்வு செய்ய தனி கமிட்டியை நியமிக்க இருக்கிறோம். அதை ஒழுங்கு செய்த பிறகுதான் கள் விற்பனை பற்றி யோசிக்க முடியும். அந்த ஆய்வில், அந்த தவறுகளை கட்டுப்படுத்திவிட முடியும் என்று சொன்னால் அதுபற்றி சிந்திப்போம். முதலில் ஆய்வறிக்கை வரட்டும். 

எம்.ஆர்.பி.  விலைக்கு கூடுதலான விலைக்கு மது விற்பனை செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. உயர் அதிகாரிகளுக்கு அதுபற்றி வந்த தகவல் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் மிகச்சில புகார்கள்தான் வந்தன… என்று கூறினார் அமைச்சர் முத்துசாமி. 

ஆனால், அவரது இந்தப் பேச்சு, சமூக  வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.  அரசியல் மட்டத்தில் இந்த அறிவிப்புக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.  பாமக தலைவர் ராமதாஸ் உள்பட பலரும் அரசின் இந்த மது விற்பனை முயற்சிக்கு  கண்டனம் தெரிவித்ததுடன் கடும் விமர்சனங்களையும் முன் வைத்தனர். 

 சமூகத்தலங்களில் அமைச்சர் முத்துசாமியின் பேச்சுக்கு விமர்சனங்களும் கேள்விகளும் எழுந்தன. அவற்றில் சில…

This Content Is Only For Subscribers

Please subscribe to unlock this content. Enter your email to get access.
Your email address is 100% safe from spam!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories