December 5, 2025, 1:35 PM
26.9 C
Chennai

கட்டிடத் தொழிலாளருக்காக டாஸ்மாக் நேரத்தைக் கூட்டி… டெட்ரா பாக்கெட்டில் கொடுத்து… சர்ச்சையில் அமைச்சர்!

tasmac muthusamy - 2025

தலைமைச் செயலகத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மாவட்ட நிலை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையர் ரத்னா, தமிழ்நாடு மாநில வாணிபக்கழக நிர்வாக இயக்குனர் விசாகன் ஆகியோர் பங்கேற்றனர்.

இதன்  பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் முத்துசாமி  பேசினார். அப்போது உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதாவும் உடன் இருந்தார். 

டாஸ்மாக் கடைகளுக்கும், கடையில் வசூலான பணத்தை செலுத்தும் ஊழியருக்கும் பாதுகாப்பு தேவை. வங்கி ஊழியரே கடைக்குச் சென்று பணத்தைப் பெற்றுக்கொள்ளலாமா? என்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கிறோம். சென்னையில் அதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மற்ற இடங்களிலும் அது செயல்படுத்தப்படும்.

மது விற்பனை செய்வது வருமானத்திற்கான நோக்கமல்ல. விற்பனையில் இலக்கு நிர்ணயிக்கப்படுவது, வருமானத்தை கூட்டுவதற்காக அல்ல. மது விற்பனை குறைந்தால் அதற்கு காரணம் என்ன? மது குடிப்பதை யாரும் நிறுத்தி இருக்கிறார்களா? அல்லது, மாற்றாக வேறு தவறான இடத்திற்கு செல்கிறார்களா? என்பதை கண்டறியவே இந்த இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது.

டாஸ்மாக் பாட்டில்களால் பல பிரச்னைகள் உள்ளன. கண்ட இடங்களிலும் அவை வீசப்பட்டு விடுகின்றன. எனவே மது பாட்டிலுக்கு பதிலாக ‘டெட்ரா பாக்கெட்’ வரவேண்டும் என்று பல தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர். குறுகிய இடத்தில் அவற்றை வைக்கலாம். அவற்றை கையாள்வது எளிது. அதோடு உடைந்து நஷ்டம் ஏற்படுவது இருக்காது. எனவே அதன் அடிப்படையில் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. டெட்ரா பேக் மூலம் விற்பனை செய்து, அதை மறு சுழற்சியாக மீண்டும் பயன்படுத்தலாம்.

அதுபோல கடை திறக்கும் காலநேரம் பற்றி ஆய்வு செய்தபோது, காலை 7 மணியில் இருந்து 9 மணி வரை கட்டட வேலை போன்ற கடுமையான உடலுழைப்பு தேவைப்படும் வேலைக்குச் செல்பவர்கள் மது கிடைக்காமல் சிரமம் அடைகிறார்கள் என்று கண்டறிந்தோம். அவர்களுக்காக என்ன ஏற்பாட்டை செய்யலாம்? என்பதில் இன்னும் முடிவெடுக்கவில்லை.

உடலுக்கு நன்மை தரும் கள்ளை விற்பனை செய்வது பற்றி கேட்டால், விவசாயிகளை மனதில் வைத்து அதை செய்யலாம் என்பதில் எங்களுக்கு மாறுபட்ட கருத்து இல்லை. விவசாயிகளுக்கு நன்மை ஏற்படுகிறது என்பது மிக அருமையான விஷயம். விவசாயிகளின் நன்மை என்பதில் முதல்வருக்கும் மாறுபட்ட கருத்து கிடையாது. ஆனால் கள் விற்பனையில் ஈடுபட்ட மாநிலங்களில் பல பிரச்னைகள் எழுந்துள்ளன. அங்கு நடக்கும் தவறுகள் இங்கு வந்துவிடக் கூடாது என்பதையும் பார்க்க வேண்டியதுள்ளது.

இது பற்றி ஆய்வு செய்ய தனி கமிட்டியை நியமிக்க இருக்கிறோம். அதை ஒழுங்கு செய்த பிறகுதான் கள் விற்பனை பற்றி யோசிக்க முடியும். அந்த ஆய்வில், அந்த தவறுகளை கட்டுப்படுத்திவிட முடியும் என்று சொன்னால் அதுபற்றி சிந்திப்போம். முதலில் ஆய்வறிக்கை வரட்டும். 

எம்.ஆர்.பி.  விலைக்கு கூடுதலான விலைக்கு மது விற்பனை செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. உயர் அதிகாரிகளுக்கு அதுபற்றி வந்த தகவல் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் மிகச்சில புகார்கள்தான் வந்தன… என்று கூறினார் அமைச்சர் முத்துசாமி. 

ஆனால், அவரது இந்தப் பேச்சு, சமூக  வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.  அரசியல் மட்டத்தில் இந்த அறிவிப்புக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.  பாமக தலைவர் ராமதாஸ் உள்பட பலரும் அரசின் இந்த மது விற்பனை முயற்சிக்கு  கண்டனம் தெரிவித்ததுடன் கடும் விமர்சனங்களையும் முன் வைத்தனர். 

 சமூகத்தலங்களில் அமைச்சர் முத்துசாமியின் பேச்சுக்கு விமர்சனங்களும் கேள்விகளும் எழுந்தன. அவற்றில் சில…

This Content Is Only For Subscribers

Please subscribe to unlock this content. Enter your email to get access.
Your email address is 100% safe from spam!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories