December 6, 2025, 6:02 AM
23.8 C
Chennai

பள்ளிக்கூடம் செயல்பட்டு வந்த இடத்தில் சர்ச்: ஹிந்து முன்னணி கண்டனம்!

hindumunnani - 2025

பள்ளிக்கூடம் செயல்பட்டு வந்த இடத்தில் கிறிஸ்தவ சர்ச்- கட்டுமான பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஊர் மக்களை மிரட்டும் காவல்துறையினர் அராஜகத்தைக் கண்டிப்பதாக, இந்துமுன்னணி அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, அந்த அமைப்பின் மாநில துணைத் தலைவர் V.P.ஜெயக்குமார் வெளியிட்ட அறிக்கை:

தென்காசி மாவட்டம் வி.கே புதூர் தாலுகா அச்சங்குன்றம் கிராமத்தில் TDTA கிறிஸ்தவ பள்ளி இயங்கி வந்த நிலையில் அந்தப் பள்ளிக்கூடம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் திமுக ஆட்சி அமைந்தவுடன் பல ஆண்டுகளாக பழைய பள்ளிக்கூடம் செயல்பட்டு வந்த இடத்தை தென்காசி மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள் திடீரென இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருத்தம் செய்து அங்கு கிறிஸ்தவ சர்ச் என்று பதிவு செய்துள்ளனர்.

கடந்த 25.3.2023 அன்று திடீரென எந்தவித அனுமதியும் பெறாமல் நடைபெற்ற சர்ச் கட்டுமான பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஊர் மக்களை காவல்துறையினர் மூலம் கைது செய்து ஒரு கோவில் வளாகத்தில் மாலை வரை அடைத்து வைத்திருந்தனர். ஊர் மக்கள் அனைவரும் 3.4.2023-ல் தங்கள் ஊருக்கு TDTA கிறிஸ்தவ பள்ளி வேண்டாம் எனவும் தனியாக அரசுப் பள்ளிக்கூடம் வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். இதன்படி 14 .4. 2023 அன்று TDTA பள்ளியில் படித்த மாணவர்கள் வேறு அரசு பள்ளிக்கூடத்தில் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டது. அதேசமயம் அச்சங்குன்றம் பகுதியில் பள்ளிக்கூடம் அமைக்க தேவையான இடத்தை ஊர் மக்கள் தமிழக ஆளுநர் பெயரில் பத்திரபதிவு செய்து வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் தங்கள் ஊரில் பள்ளிக்கூடம் அமைக்கும் பணியை தொடங்க வேண்டி அச்சங்குன்றம் கிராம மக்களும், குழந்தைகளும் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க முடிவு செய்தனர்.

ஆனால் சிறுபான்மையினர் நலத்துறை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அவர்களின் தூண்டுதல் காரணமாக நேற்றைய தினம் அச்சங்குன்றம் ஊர் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாதபடி காவல்துறையினர் மூலம் தடுக்கப்பட்டுளனர்.

பள்ளி மாணவர்களுக்கு கல்வி என்பது அடிப்படை உரிமையாகும் அதனை தடுக்கும் விதத்தில் செயல்படும் தென்காசி மாவட்டம் ஆட்சியரையும், காவல்துறையினரையும் இந்துமுன்னணி வன்மையாக கண்டிக்கிறது. இந்த சம்பவத்தில் தேசிய குழந்தைகள் ஆணையம் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்துமுன்னணி வலியுறுத்துகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories