ஸ்ரீரங்கம் கோயில் கோபுரம் சிதைவு: அறநிலையத் துறை மெத்தனத்துக்கு இந்து முன்னணி கண்டனம்!

srirangam temple gopuram issue - 2026

ஶ்ரீரங்கம் திருக்கோவில் கிழக்கு கோபுரம் சிதைவடைந்து விழுந்துள்ளது, இந்து சமய அறநிலையத்துறை அலட்சியம். ஆமை வேகத்தில் செயல்படும் அதிகாரிகள். பக்தர்கள் உயிர் கிள்ளுகீரையா? என்று கேட்டு, இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:

வரலாற்று சிறப்புமிக்கதும், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானதுமான ஶ்ரீரங்கம் திருக்கோவில் கிழக்கு கோபுரம் சிதைவடைந்து விழுந்து உள்ளது.

இது எத்தகைய அபசகுணம். கோவில் வளாகம் தீ பிடிப்பது, சிதிலமடைந்து சிதைவது போன்றவை ஆட்சியாளர்கள் அலட்சியத்தால் ஏற்படுவது. இது போன்ற சம்பவங்கள் ஆட்சியாளர்களுக்கு வரும் ஆபத்தை குறிப்பது என்பது மக்கள் நம்பிக்கை.

நூறு ஆண்டுகள் கடந்தாலே தொன்மையானது என்று பாதுகாக்கபட வேண்டும் என்பதைக் கூட அறியாத குருடர்களாக அறநிலையத்துறை இருந்துவருகிறது வேதனைக்குரிய விஷயம்.

பல நூற்றாண்டுகள் கடந்த ஸ்ரீ ரங்கம் கோவில் போலுள்ள பல கோவில்கள் கலாச்சார பாரம்பரியமாக பாதுக்காக்க பட வேண்டியவை. சிதிலமடைந்துள்ளதை சுட்டிக்காட்டி சில நாட்கள் முன்பு இந்து முன்னணி மற்றும் ஆன்மிக பெரியவர்கள் எச்சரித்தனர். இருந்தும் தமிழக இந்து சமய அறநிலையத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க தவறியது.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களை செயல்பாபு என முதல்வர் புகழ்ந்து சில மாதங்களுக்கு முன்பு பேசினார். செயல்பாபு என்று முதல்வரால் பாராட்டப்பட்டவரின் நடவடிக்கையே இப்படி என்றால் மற்றவர்களின் செயல்பாடு எத்தகையது என தமிழக மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

தெய்வாதீனமாக இந்த அசம்பாவிதம் பகலில் நடைபெறவில்லை. இது இறைவனின் கருணை என்றே கருதுகிறோம். பக்தர்கள் நடமாட்டத்தின் போது நடந்து இருந்தால் பலருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கும். தமிழக அரசின் மெத்தனபோக்கு இதற்கு காரணம்.

உலகப் புகழ் பெற்ற ஶ்ரீ ரங்கம் திருக்கோவிலில் நடந்துள்ள இந்த அசம்பாவிதத்தை உடனே சீர் செய்து தக்க பரிகாரம் செய்ய தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories