கோவில்களில் இருந்து கைப்பிடி மண்; தடுக்கும் தமிழக அரசு: இந்து முன்னணி கண்டனம்!

kadeswara subramaniam hindu munnani - 2026

தமிழக திருக்கோவில்களில் இருந்து கைப்பிடி மண்–தடுக்கும் தமிழக அரசு- இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராக செயல்படுவது கண்டிக்கத் தக்கது என்று, இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:

இந்திய அரசு நிர்மாணித்துள்ள புதிய நாடாளுமன்ற வளாகத்தில் “அம்ருத்” என்ற பெயரில் அழகிய பூங்கா அமைக்கப்பட உள்ளது. என் மண் என் தேசம் என்ற இயக்கத்தின் கீழ் விடுதலைக்காக போராடிய மாவீரர்களின் நினைவைப் போற்றும் வகையில், இந்திய ஒருமைப்பாட்டை எடுத்துக்காட்டும் வகையில் இந்த நாட்டின் அனைத்து புனித இடங்களின் மண், மற்றும் புனித நீர் வைக்கப்பட இருப்பது எல்லோரும் அறிந்ததே. அதற்காக தமிழக திருக்கோவில்கள் உட்பட 350 இடங்களில் இருந்து கைப்பிடி மண் எடுத்து அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிகழ்வு தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் விஷயமாகும்.

ஆனால் இதனை கருத்தில் கொள்ளாமல் கோவிலில் கைப்பிடி மண் எடுப்பதை தடுத்து, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் அநாகரிகமாக செயல்பட்டு உள்ளனர். கைப்பிடி மண் எடுப்பதை கனிமவளம் என பேசியுள்ளனர். இது எத்தகைய கீழ்த்தரமான மனோபாவம். தாய் மண் எடுத்து ஒரு புனிதமான காரியத்தைச் செய்வது தொன்றுதொட்டு தமிழ் பண்பாட்டில் உள்ள சிறப்பான நிகழ்வு. இதனை தெரியாமலோ, புரியாமலோ இருக்கும் இவர்கள் வாதம் அற்பத்தனமானது.

ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

அதே சமயம் சென்னை அயனாவரம் அருள்மிகு காசி விஸ்வநாதர் ஆலய திருக்குளத்தில் முறைகேடாக, சட்ட விரோதமாக பொக்லைன் இயந்திரங்கள் மூலம் மணல் கொள்ளையை கையும் களவுமாக இந்து முன்னணி பிடித்துகொடுத்தது. மாவட்ட ஆட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்க வைத்தது. ஆனால் அதுகுறித்து புகார் கொடுக்கக் கூட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்வரவில்லை. அந்த வழக்கை கிடப்பில் போட்டது.

இந்நிலையில் தேசிய ஒருமைப்பாட்டிற்கு பெருமை சேர்க்கும் கைப்பிடி மணல் எடுக்க வீம்பு பேசிய அதிகாரிகள் அவர்கள் சார்ந்துள்ள துறைக்கு தகுதியற்றவர்கள்.

தமிழக அரசு சென்னை வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோவிலில் அநாகரிகமாக நடந்து கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவிலில் வழிபாடு செய்யவும் பா.ஜ.க. மாநில பொறுப்பாளர் வினோஜ் வி. செல்வம் உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தகைய போக்கு காவல்துறையின் அத்துமீறல். இந்துக்களின் வழிபாட்டு உரிமையை தடுத்துள்ளது சட்டவிரோத நடவடிக்கை என்பதை சுட்டிக் காட்டுகிறோம்.

ALSO READ:  எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

தி.மு.க. அரசின் இந்து விரோத போக்கு தமிழக மக்களை வெறுப்படை செய்கிறது. மக்களின் ஆதரவை பெற திமுக தலைவர் தேர்தல் நேரத்தில் என்னவெல்லாம் பேசினார்?

இந்துக்களின் உணர்வுகளை மதிப்போம். எல்லோருக்கும் பொதுவாக நடப்போம். எங்கள் கட்சியில் பெரும்பான்மை இந்துக்கள் தான் உள்ளனர். இப்படி பேசி இந்துக்களின் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்தபின் எப்படி நடந்து கொள்கிறார் என்பதை மக்கள் பார்த்துதான் வருகிறார்கள். இதனை தமிழக முதல்வர் திருத்திக்கொள்ள வேண்டும்.

இந்து விரோத, தேச ஒருமைப்பாட்டிற்கு விரோதமாக செயல்பட்ட தமிழக அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories