சகோதரத்துவ நல்லிணக்கம் பேணும் ரக்ஷா பந்தன் விழா

sengottai rss program - 2026
#image_title

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் சகோதரத்துவ நல்லிணக்க விழா என, ரக்ஷா பந்தன் விழா கொண்டாடப்பட்டது.

ஆகஸ்ட் 24 வியாழக்கிழமை மாலை 7:30 க்கு அம்மா உணவகம் முன்பு நடைபெற்ற பொது நிகழ்ச்சியில், பணி நிறைவு பெற்ற காவல்துறை ஆய்வாளர் சுப்பையா தலைமையேற்று நடத்தினார். உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எம் மாரியப்பன் முன்னிலை வகித்தார். ஆர்எஸ்எஸ்., மாவட்டத் தலைவர் எஸ் குருமூர்த்தி, குமரி கோட்டத் தலைவர் ஏ. காமராஜ் ஆகியோர் கலந்துகொள்ள, பாரதிய மஸ்தூர் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளர் பி தங்கராஜ் சிறப்புரையாற்றினார். 

பி.தங்கராஜ் தமது சிறப்புரையில், ரக்ஷா பந்தன் ஏன் கொண்டாடப் படுகிறது என்பதையும், சங்கத்தின் வார்தா முகாமில் காந்திஜி வந்து பார்த்துக் கூறிய கருத்தையும் பற்றிச் சொல்லி, வரலாற்றில் ரக்ஷா பந்தன் நிகழ்வுகள் எப்படி சகோதரத்துவத்தை வெளிப்படுத்தின, உயிர் காக்கும் பாதுகாப்பு அம்சமாக அது எவ்வாறு திகழ்ந்தது, எனவே, நம்மிடையே சகோதரத்துவம் வலுவாக வேண்டிது ஏன் என்பதன் அவசியத்தை எடுத்துக் கூறினார். 

செங்கோட்டை நகரின் இந்து சமுதாய ஒருங்கிணைப்புக் குழு மற்றும் சமுதாய நல்லிணக்கப் பேரவை இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்ச்சியில் அனைவருக்கும் ராக்கி கயிறு வழங்கப்பட்டது. ஒவ்வொருவரும் தங்கள் அருகில் இருந்தவர்களுக்கு ராக்கி கட்டி சகோதரத்துவத்தை வெளிப்படுத்தினார்கள்.

அனைத்து சமுதாயத் தலைவர்களையும் மேடையேற்றி, அவர்களுக்கு ஆர்எஸ்எஸ்., பொறுப்பாளர்கள் கௌரவம் செய்தார்கள். குழுப்பாடல் உடன் தொடங்கிய நிகழ்ச்சி, சங்க  பிரார்த்தனாவுடன் நிறைவு பெற்றது. 

நிகழ்ச்சி நிறைவுற்ற பிறகு, தென்காசி  மாவட்ட சமுதாய நல்லிணக்கப் பேரவை அமைப்பாளர் ஜி.வரதராஜன் ஒருங்கிணைக்க, அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்களையும் அமர வைத்து, ஒற்றுமையுடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும், சகோதரத்துவ சிந்தனை குறித்தும் பேசினார்கள். 

செங்கோட்டை ஆர்.எஸ்.எஸ்., நகரச் செயலாளர் அயோத்யா முருகேசன்  நன்றியுரை கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செங்கோட்டை ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் முன்னின்று செய்திருந்தனர். நிகழ்ச்சியில் நூற்றுகும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories