கரூர் மாநகராட்சியில் ஆளும் திமுக.,வின் ஊழல் முறைகேடுகள்: அதிமுக.,வினர் நூதன போராட்டம்!

karur corporation coucillers - 2026
#image_title

கரூர் மாநகராட்சியில் பல்வேறு திட்டங்களுக்கு கூடுதலாக மதிப்பீடு தொகை உள்ளது என திமுக கவுன்சிலர் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எழுந்து நின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூரில் இன்று நடைபெற்ற மாமன்ற கவுன்சிலர்கள் கூட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் மாநகராட்சியில் பணிகளில் அதிக அளவு மதிப்பீட்டுத் தொகையை தீர்மானத்தில் இடம் பெற்றதை எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நின்றனர்.

மேலும் மாநகராட்சியில் பணம் இல்லாத சூழ்நிலையில் அவுட்சோர்சிங் முறை என்ற தனியார் கம்பெனியின் மூலமாக பணியில் 1500 பேரை வேலைக்குச் சேர்த்து வருவாய் இழப்பு செய்வதை எதிர்ப்பு தெரிவித்த கவுன்சிலர்கள் எழுந்து நின்று தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்

மேலும் கடந்த கூட்டத்தில் பேப்பர் பேனா ஸ்டேஷனில் பொருட்கள் வாங்குவதற்காக 25 லட்சமும் இந்த முறையும் அதேபோன்று 25 லட்சம் மதிப்பீட்டுத் தொகை தீர்மானத்தில் இருந்ததை எதிர்ப்பு தெரிவித்து திமுக அதன் கூட்டணி கட்சிகள் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சியினர் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர்

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவுட்சோர்ஸின், குடிநீர் திறக்கும் தொழிலாளர்களையும் திட்டத்தையும் தனியாருக்கு தாரை பார்க்கும் செயலை ஈடுபட்டு வரும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

ALSO READ:  மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

அதிகாரிகளிடம் வேலை வாங்க முடியாத நிலையில் தனியாருக்கு தாரை பார்க்கும் திட்டத்தில் ஈடுபட்டு வருகிறதா எனவும் கேள்வி எழுப்பினர்.

21 மாநகராட்சி நிர்வாகம் தனியார் மூலமாக தொழிலாளர்களை பணியமறுத்தி வருகின்றனர் குடிநீர் தொட்டியில் தண்ணீர் திறப்பதற்காக சம்பளமாக ரூ.7,100 வழங்கி வந்த நிலையில் இரவு பகலாக வேலை பார்த்து வந்தனர். 1300 பேர் வேலை பார்க்கிறார்கள் என்றால் அவர்களை மாநகராட்சியில் நிரந்தரபணியில் அமர்த்துங்கள்…

துப்புரவு தொழிலாளர்களை எண்ணிக்கை அதிகப்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்பாடு செய்யாமல் தனியாருக்கு விற்பனை செய்யும் முயற்சியிலேயே தொடர்ந்து கரூர் மாநகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது என கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த கவுன்சிலர் தண்டபாணி கூட்டத்தில் புகார் தெரிவித்தார்.

அதிமுக., கவுன்சிலர்கள் இருவர் சஸ்பெண்ட்

கரூர் மாநகராட்சிக்கு பேப்பர், பேனா, பென்சில், நோட் வாங்க 50 லட்சம் ரூபாய் செலவு. அதிமுக கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பியதால் வாக்குவாதம். அதிமுக கவுன்சிலர்கள் இருவரை இரண்டு கூட்டத்திற்கு சஸ்பெண்ட் செய்து மேயர் உத்தரவு.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

கரூர் மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று மேயர் கவிதா கணேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் அதிமுக கவுன்சிலர்கள் கடந்த முறை நடைபெற்ற கூட்டத்தில் பேப்பர், பென்சில், பேனா வாங்குவதற்காக 25 லட்சம் மதிப்பீடு தொகையாக இருந்த நிலையில், இன்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் அதே பேப்பர், பென்சில், பேனா வாங்குவதற்காக 25 லட்சம் என மொத்தம் 50 லட்சம் ரூபாய் முறை கேடு நடந்திருப்பதாக அதிமுக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து மாமன்ற கூட்டத்தின் அஜந்தா காப்பியை வைத்து நேற்று செய்தித்தாள்களுக்கு பேப்பர் பேனா பென்சில் வாங்குவதற்கு ஊழல் நடந்துள்ளதாக பேட்டியளித்தனர்.

இதனை காரணம் காட்டி அதிமுக கவுன்சிலர்கள் இருவர் சுரேஷ் மற்றும் ஆண்டாள் தினேஷ் இரண்டு கூட்டங்களுக்கு சஸ்பெண்ட் செய்து மாநகராட்சி மேயர் உத்திரவிட்டார். இதனை அடுத்து அதிமுக கவுன்சிலர்கள் கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories