மதுரையில் அதிகரிக்கும் டெங்கு: ஒரே வாரத்தில் 37 பேர் அனுமதி!

Published:

fever caugh - 2026

மதுரையில் அதிகரிக்கும் டெங்கு : கோரிப்பாளையம் ஒரே வாரத்தில் 37 பேர் அனுமதி.!!

மதுரை மாநகராட்சியில் 7 நாள்களில் 11 குழந்தைகள் உள்பட 37 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சியில் 7 நாள்களில் 11 குழந்தைகள் உள்பட 37 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது

கடந்த சில நாள்களாக பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு பரவி வருகின்றன. இந்த நிலையில், மதுரை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் டெங்கு அதிகமாக பாதித்து வருகிறது. மதுரை மாநகராட்சியில் 7 நாள்களில் மட்டும் 11 குழந்தைகள் உள்பட 37 பேருக்கு டெங்கு பாதித்துள்ளது. 50 பேர் காய்ச்சலுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோன்று, புதுக்கோட்டை மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாகி உள்ளது. இதையடுத்து, கடந்த 2 வாரங்களில் 37 பேருக்கு டெங்கு காய்ச்சல் பரவியுள்ளது. ஆவின் நெய் லிட்டருக்கு ரூ.70 உயர்வு! ஒரே நாளில் 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு பரவாமல், இருக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரை நகரில் பெரும்பாலான தெருக்களில் பாதாள சாக்கடை பணிக்காக சாலைகள் தோண்டப்பட்டு ஆங்காங்கே உள்ள பள்ளங்களில் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் அதிக உற்பத்தியாக வாய்ப்புள்ளது.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

மதுரை அண்ணா நகர், வீரவாஞ்சி தெரு, காதர் மொய்தின் தெரு, அன்பு மலர் தெரு, சௌபாக்யா விநாயகர் கோவில் தெரு மற்றும் வண்டியூர் ஆகிய பகுதிகளில் பள்ளிகளில் கழிவுநீர் பீரிட்டு வெளியேறுகிறது. இதை மதுரை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக சரி செய்து, கொசு உற்பத்தி தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க ,சமூக ஆர்வலர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related articles

Recent articles

spot_img