வங்கதேசத்தை வீழ்த்தி த்ரில் வெற்றி: ஆசியக் கோப்பை சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா!

Published:

india won asiacup2018 - 2026

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் பரபரப்பான இறுதி ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி, கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்று, 7வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

துபையில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீசத் தீர்மானித்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய வங்கதேச அணியில் தொடக்க வீரர் லிதன்தாஸ் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். 121 ரன்களுக்கு லிதன் தாஸ் ஆட்டமிழந்ததை அடுத்து, மெஹிதி ஹசன் 32 ரன், சவும்யா சர்க்கார் 33 ரன் சேர்த்தனர். வங்கதேச அணி 48.3 ஓவர்களில் 222 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

india won asiacup - 2026

223 ரன் என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடத் தொடங்கிய இந்திய அணியில், தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா 48 ரன், ஷிகர் தவான் 15 ரன் எடுத்தனர். தினேஷ் கார்த்திக் 37 ரன், தோனி 36 ரன் எடுத்தனர். தொடர்ந்து புவனேஸ்குமார், ஜடேஜா இருவரும் ஒன்றிரண்டு ரன்களாக சேர்த்து நிதானமாக ஆடினர். கடைசி ஓவரில் 6 பந்துகளில் 6 ரன் எடுக்க வேண்டிய நிலையில் பரபரப்பு அதிகமானது. அப்போது 23 ரன்கள் எடுத்த கேதர் ஜாதவ் நிதானமாக விளையாடி கடைசி பந்தில் இந்திய அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

தொடர்ந்து இந்திய அணி 7வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்திய அணியின் வெற்றியை தில்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img