கன்யாகுமரி மாவட்ட கோயில் பணிகளில் கிறிஸ்துவர்கள்: நடவடிக்கை கோரி முதல்வருக்கு மனு!

kanyakumari - 2026

நாகர்கோயில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற திருக்கோயில்களில் கிறிஸ்துவர்கள் பணி செய்வது குறித்து முதவரின் கவனத்துக்குக் கொண்டுவந்து, கோயில் சிலைகள் கொள்ளை போகாமல் தடுக்கவும், முறைகேடுகளைத் தடுக்கவும் குமரி மாவட்ட இந்துமுன்னணி சார்பில் மனு கொடுக்கப் பட்டுள்ளது.

அந்த மனு குறித்த விவரம்:

பெறுநர்
மாண்புமிகு தமிழக முதல் அமைச்சர் தனிப் பிரிவு ,
தலைமைச் செயலகம் சென்னை. 600 009

வணக்கம்

கன்னியாகுமரி மாவட்டம் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு கொண்டு இருக்கும் குழித்துறை தேவிகுமாரி கலை அறிவியல் கல்லூரி, மண்டைக்காடு

இந்து சமய அறநிலையத்துறை மேல்நிலைப்பள்ளி,

மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் திருக்கோவில், கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் திருக்கோவில், மற்றும் அறநிலையத்துறை
அலுவலக பணியாளர்கள் இந்து சான்றிதழில் பணியில் சேர்ந்து இந்து கோவில் காணிக்கையை ஊதியமாகப் பெற்றுக் கொண்டு கிறிஸ்தவ மதத்திற்கு விசுவாசமாக செயல்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.

இந்து சமய அறநிலையத்துறையில் இந்துக்கள் மட்டும் தான் பணி புரிய வேண்டும் என விதிமுறைகள் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் உயர் அதிகாரிகள் கிறிஸ்த மத மாற்றத்தை இந்து சமய அறநிலையத்துறை துணை கொண்டு செயல்படுத்தி கொண்டு இருக்கிறது என்பது இந்துக்களின் மனதை மிகவும் வேதனை படுத்துகிறது.

ALSO READ:  மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

அது மட்டும் இல்லாமல் இந்துக்கள் பெற வேண்டிய சலுகைகள் அனைத்தையும் கிறிஸ்தவர்கள் அனுபவித்து வருகிறார்கள். இந்து சமய அறநிலையத் துறையின் மேற்படி செயல்பாட்டால் இந்து திருக்கோவில்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையும் கிறிஸ்தவர்கள் பணிபுரியக் கூடிய நிலையில் திருகோவில்கள் இருப்பதால் தெய்வ விக்ரகங்கள் கொள்ளை அடிக்கப் படுவதும் கோவில் சொத்துகள் ஆக்கிரமிப்பு செய்வதும் தொடர்கதையாக நடந்து வருகிறது

வேற்று மதத்தினருக்கு இந்து தெய்வத்தின் மீது எந்தவிதமான தெய்வ நம்பிக்கை இருப்பதில்லை. இவர்கள் ஆகம விதிகளை சரியாக பின்பற்றமால் இருக்கும் காரணத்தால் மேற்படி இந்து சமய அறநிலையத்துறையில் பணிபுரியும் வேற்று மதத்தினரை கண்டறிந்து பணி நீக்கம் செய்து குமரி மாவட்ட இந்து திருக்கோவில்கள் அனைத்தும் தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட இந்துமுன்னணி பேரியக்கம் சார்பில் மாண்புமிகு முதல் அமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.

நகல்
1, உயர்திரு இந்து சமய அறநிலையதுறை ஆணையாளர் அவர்கள்
நூங்கம்பாக்கம் , சென்னை 34
2, உயர்திரு மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள்
கன்னியாகுமரி மாவட்டம் (இ) நாகர்கோவில்

ALSO READ:  ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

1 COMMENT

  1. Ϝührerschein Klasse B kaufen: Kaufen Ⴝіe Ьequem von zuս Hause aus einen echten, in einer Datenbаnk registrierten deutѕchen Führеrschein online.

    Sehr wenig Papierkram, keine Hintergrundüberрrüfսngеn undd Ihre Lizenz wird in weniger als 1 Woche аn Ihre
    Haustür geliefert! Worauf wartest du? Kontzktіeгe Uns jetzt, um deinen dеutsxhen Führerschein online zu kaufen.Führerschein Klasse B kaufen http://xn--fhrerschein-anschluss-8hc.com/uber.php

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் ஜூன் 06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Entertainment News

Popular Categories