spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉள்ளூர் செய்திகள்கன்யாகுமரி மாவட்ட கோயில் பணிகளில் கிறிஸ்துவர்கள்: நடவடிக்கை கோரி முதல்வருக்கு மனு!

கன்யாகுமரி மாவட்ட கோயில் பணிகளில் கிறிஸ்துவர்கள்: நடவடிக்கை கோரி முதல்வருக்கு மனு!

- Advertisement -

kanyakumari

நாகர்கோயில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற திருக்கோயில்களில் கிறிஸ்துவர்கள் பணி செய்வது குறித்து முதவரின் கவனத்துக்குக் கொண்டுவந்து, கோயில் சிலைகள் கொள்ளை போகாமல் தடுக்கவும், முறைகேடுகளைத் தடுக்கவும் குமரி மாவட்ட இந்துமுன்னணி சார்பில் மனு கொடுக்கப் பட்டுள்ளது.

அந்த மனு குறித்த விவரம்:

பெறுநர்
மாண்புமிகு தமிழக முதல் அமைச்சர் தனிப் பிரிவு ,
தலைமைச் செயலகம் சென்னை. 600 009

வணக்கம்

கன்னியாகுமரி மாவட்டம் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு கொண்டு இருக்கும் குழித்துறை தேவிகுமாரி கலை அறிவியல் கல்லூரி, மண்டைக்காடு

இந்து சமய அறநிலையத்துறை மேல்நிலைப்பள்ளி,

மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் திருக்கோவில், கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் திருக்கோவில், மற்றும் அறநிலையத்துறை
அலுவலக பணியாளர்கள் இந்து சான்றிதழில் பணியில் சேர்ந்து இந்து கோவில் காணிக்கையை ஊதியமாகப் பெற்றுக் கொண்டு கிறிஸ்தவ மதத்திற்கு விசுவாசமாக செயல்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.

இந்து சமய அறநிலையத்துறையில் இந்துக்கள் மட்டும் தான் பணி புரிய வேண்டும் என விதிமுறைகள் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் உயர் அதிகாரிகள் கிறிஸ்த மத மாற்றத்தை இந்து சமய அறநிலையத்துறை துணை கொண்டு செயல்படுத்தி கொண்டு இருக்கிறது என்பது இந்துக்களின் மனதை மிகவும் வேதனை படுத்துகிறது.

அது மட்டும் இல்லாமல் இந்துக்கள் பெற வேண்டிய சலுகைகள் அனைத்தையும் கிறிஸ்தவர்கள் அனுபவித்து வருகிறார்கள். இந்து சமய அறநிலையத் துறையின் மேற்படி செயல்பாட்டால் இந்து திருக்கோவில்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையும் கிறிஸ்தவர்கள் பணிபுரியக் கூடிய நிலையில் திருகோவில்கள் இருப்பதால் தெய்வ விக்ரகங்கள் கொள்ளை அடிக்கப் படுவதும் கோவில் சொத்துகள் ஆக்கிரமிப்பு செய்வதும் தொடர்கதையாக நடந்து வருகிறது

வேற்று மதத்தினருக்கு இந்து தெய்வத்தின் மீது எந்தவிதமான தெய்வ நம்பிக்கை இருப்பதில்லை. இவர்கள் ஆகம விதிகளை சரியாக பின்பற்றமால் இருக்கும் காரணத்தால் மேற்படி இந்து சமய அறநிலையத்துறையில் பணிபுரியும் வேற்று மதத்தினரை கண்டறிந்து பணி நீக்கம் செய்து குமரி மாவட்ட இந்து திருக்கோவில்கள் அனைத்தும் தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட இந்துமுன்னணி பேரியக்கம் சார்பில் மாண்புமிகு முதல் அமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.

நகல்
1, உயர்திரு இந்து சமய அறநிலையதுறை ஆணையாளர் அவர்கள்
நூங்கம்பாக்கம் , சென்னை 34
2, உயர்திரு மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள்
கன்னியாகுமரி மாவட்டம் (இ) நாகர்கோவில்

1 COMMENT

  1. Ϝührerschein Klasse B kaufen: Kaufen Ⴝіe Ьequem von zuս Hause aus einen echten, in einer Datenbаnk registrierten deutѕchen Führеrschein online.

    Sehr wenig Papierkram, keine Hintergrundüberрrüfսngеn undd Ihre Lizenz wird in weniger als 1 Woche аn Ihre
    Haustür geliefert! Worauf wartest du? Kontzktіeгe Uns jetzt, um deinen dеutsxhen Führerschein online zu kaufen.Führerschein Klasse B kaufen http://xn--fhrerschein-anschluss-8hc.com/uber.php

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe