December 8, 2025, 6:11 PM
25.6 C
Chennai

டிச.3ல் புயல் வாய்ப்பு: வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை!

weather update in chennai - 2025
#image_title

டிச.3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக, வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. டிச.3ம் தேதி உருவாகும் புயல் வடதமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும் என்றும் அது தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது.

டிசம்பர் 4-ம் தேதி அதிகாலையில் வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரா இடையே கரையைக் கடக்க வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.

வங்கக் கடலில் உருவாகும் புயல் காரணமாக டிச.2, 3-ல் சென்னை உள்ளிட்ட 5 மாவட்டத்தில் மிக கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வங்கக் கடலில் உருவாகும் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் வரும் 2, 3-ம் தேதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப் பெற்றுள்ளது. இது தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் டிச. 2-ம் தேதி புயலாக வலுப்பெறும்.

மேலும், வடக்கு இலங்கை மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் டிச. 3-ம் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நவ. 30-ம் தேதி (இன்று) காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

டிச.1-ம் தேதி (நாளை) டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 2, 3-ம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். வரும் 2-ம் தேதி டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களிலும், 3-ம் தேதி மேற்கூறிய மாவட்டங்கள் மற்றும் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

வரும் 4-ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை: அந்தமான் அருகே நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக வடக்கு அந்தமான், தென்கிழக்கு வங்கக் கடல், தென்மேற்கு வங்கக் கடல்பகுதிகளில் வரும் 4-ம் தேதி வரை அதிகபட்சமாக மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும். மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று கூறினார்.

தமிழ்நாடு, புதுச்சேரியின் 29-11-2023 காலை 0830 மணி முதல் 30-11-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)

ஆவடி (திருவள்ளூர்) 19;

மண்டலம் 06 D65 கொளத்தூர், மண்டலம் 06 திரு.வி.க.நகர் (சென்னை), பொன்னேரி (திருவள்ளூர்) தலா 15;

மண்டலம் 07 அம்பத்தூர், மண்டலம் 08 மலர் காலனி, அம்பத்தூர் (சென்னை) தலா 14;

தலைஞாயர் (நாகப்பட்டினம்), சோழவரம் (திருவள்ளூர்), மண்டலம் 12 ஆலந்தூர் (சென்னை) தலா 13;

அம்பத்தூர், மண்டலம் 13 அடையார் சுற்றுச்சூழல் பூங்கா, அண்ணா பல்கலைக்கழகம், மண்டலம் 11 U32 மதுரவாயல் (சென்னை), புழல் ARG, செங்குன்றம் (திருவள்ளூர்) தலா 12;

கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), அண்ணா பல்கலைக்கழக ARG, மண்டலம் 10 கோடம்பாக்கம், மண்டலம் 03 புழல், மண்டலம் வளசரவாக்கம் (சென்னை), YMCA நந்தனம் ARG, பெரம்பூர், மண்டலம் 12 D156 முகலிவாக்கம், மண்டலம் 13 அடையாறு, கத்திவாக்கம், மண்டலம் 13, NIOT பள்ளிக்கரணை ARG தலா 11;

சோழவரம் (திருவள்ளூர்), மண்டலம் 09 தேனாம்பேட்டை, தேனாம்பேட்டை, மண்டலம் 14 U41 பெருங்குடி, மீனம்பாக்கம் AWS, மண்டலம் 14 பெருங்குடி, மண்டலம் 12 மீனம்பாக்கம், ஆலந்தூர், சென்னை விமான நிலையம், மண்டலம் 13 U39 அடையாறு, மண்டலம் 07 U18 D81 வானகரம் தலா 10;

பூந்தமல்லி (திருவள்ளூர்), மண்டலம் 08 அண்ணாநகர், அண்ணாநகர், எம்ஜிஆர் நகர், அயனாவரம் தாலுகா அலுவலகம், சோழிங்கநல்லூர், தரமணி ARG (சென்னை), கொளப்பாக்கம் ARG, செம்பரம்பாக்கம்_வருவாய் (காஞ்சிபுரம்), கொள்ளிடம் (மயிலாடுதுறை), திருக்குவளை (நாகப்பட்டினம்) தலா 9;

திருவள்ளூர், கொரட்டூர் (திருவள்ளூர்), அடையாறு, மண்டலம் 03 மாதவரம், கோடம்பாக்கம், சென்னை நுங்கம்பாக்கம், டிஜிபி அலுவலகம், சென்னை நுங்கம்பாக்கம் AWS (சென்னை), VIT_Chennai AWS (செங்கல்பட்டு), குன்றத்தூர் (காஞ்சிபுரம்), வேப்பூர் (கடலூர்) காரைக்கால் (காரைக்கால்) வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்) தலா 8;

தாமரைப்பாக்கம், திரூர் KVK AWS (திருவள்ளூர்), மண்டலம் 09 ஐஸ் ஹவுஸ், திரு-வி-க நகர், பெருங்குடி (சென்னை), ஆலந்தூர், தாம்பரம் (செங்கல்பட்டு), சத்யபாமா பல்கலைக்கழகம் ARG (காஞ்சிபுரம்), RSCL-2 நெமூர் (விழுப்புரம்), சீர்காழி ( மயிலாடுதுறை), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), திருப்பூண்டி (நாகப்பட்டினம்) தலா 7;

மாதவரம், மண்டலம் 15 சோழிங்கநல்லூர், வளசரவாக்கம், மண்டலம் 02 D15 மணலி, எண்ணூர் AWS (சென்னை), காஞ்சிபுரம், செம்பரம்பாக்கம்_CMWSSB, ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), BASL முகையூர் (விழுப்புரம்), தரங்கம்பாடி, மயிலாடுதுறை (மயிலாடுதுறை), நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்), தலா 6;

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சௌராஷ்டிரா மதுரையில் குடியேற்றம்!

எழுத்தாளர்கள் அனிதா ராஜராஜன் மற்றும் பிஸ்வஜித் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தங்கள் சமூகத்தைப் பற்றிய குடும்ப நாட்டுப்புறக் கதைகளில் வளர்ந்தனர்.

அத்துமீறிய காவல்துறை; ஜனநாயகத்தின் குரல்வளை நெரிப்பு: இந்து முன்னணி கண்டனம்!

இந்து முன்னணி நடத்திய அறவழிப் போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்; ஜனநாயகத்தின் குரல்...

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

Topics

சௌராஷ்டிரா மதுரையில் குடியேற்றம்!

எழுத்தாளர்கள் அனிதா ராஜராஜன் மற்றும் பிஸ்வஜித் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தங்கள் சமூகத்தைப் பற்றிய குடும்ப நாட்டுப்புறக் கதைகளில் வளர்ந்தனர்.

அத்துமீறிய காவல்துறை; ஜனநாயகத்தின் குரல்வளை நெரிப்பு: இந்து முன்னணி கண்டனம்!

இந்து முன்னணி நடத்திய அறவழிப் போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்; ஜனநாயகத்தின் குரல்...

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

Entertainment News

Popular Categories