December 6, 2025, 3:07 AM
24.9 C
Chennai

மிச்சங் புயல் மீட்பு நடவடிக்கை; உதவ தயார் நிலையில் மோடி அரசு: அமித் ஷா!

1723147 amith sha - 2025

மிச்சங் புயல்-மழை பாதிப்புகளை எதிர்கொள்ள கூடுதலாக தேசிய பேரிடர் மீட்பு படைகளை அனுப்ப உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். புயல் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

தமிழக முதல் அமைச்சர் ஸ்டாலினிடம் தொலைபேசி வாயிலாகப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மிச்சங் புயல் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். புயல் பாதிப்புகள் குறித்தும், எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார் மு.க. ஸ்டாலின். அப்போது, கூடுதலாக தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்க கோரிக்கை விடுத்தார்.

உடனடி நிவாரணப் பணிகளை மேற்கொண்ட பிறகு பாதிப்புகள் குறித்து உரிய கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டு தேவைப்படும் உதவிகள் மத்திய அரசிடம் கேட்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தமிழக மாநில முதல் அமைச்சர் ஸ்டாலினிடம் தாம் பேசியது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்…

தமிழக முதல்வர் திரு.@mkstalin அவர்கள் மற்றும் புதுச்சேரி முதல்வர் திரு.என். ரங்கசாமி அவர்கள், ஆகியோரிடம் பேசினேன். மிக்ஜம் புயலால் ஏற்பட்ட சவாலான வானிலையை சமாளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தேன். மக்களின் உயிர் உடைமைகளை பாதுகாக்க பிரதமர் மோடி அரசிடமிருந்து தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கவும் உறுதியளித்தேன். ஏற்கனவே NDRF போதுமான அளவுக்கு அங்கே உள்ளது மற்றும் கூடுதல் படைகள் மேலும் உதவிக்கு தயாராக உள்ளன. – என்று குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக மீட்பு பணிகளை கண்காணித்து வரும் மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மின்வாரிய அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது தெரிவித்ததாவது…

* பாதுகாப்பு காரணங்களுக்காக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
* மழை நின்றவுடன் 2 மணி நேரத்தில் மின் இணைப்பு வழங்கப்படும்.
*மின்வாரிய தலைமை அலுவலகத்தில் 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை செயல்படும்.
* நிவாரண பணிகளை மேற்கொள்ள 5,527 மின் ஊழியர்கள் பணி அமர்த்தப் பட்டுள்ளனர். வெளி மாவட்டங்களிலிருந்தும் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்

  • சென்னையில் பெய்து வரும் அதிகனமழையால் பாதுகாப்பு கருதியே மின்விநியோகம் நிறுத்தம்.
  • மின்சாரம் வழங்குவதில் எந்த பிரச்னையும் இல்லை. மழை நின்றவுடன் 2 மணி நேரத்துக்குள் மின்சாரம் மீண்டும் வழங்கப்படும்,
  • மின் வாரிய தலைமை அலுவலகம் 24 மணி நேரமும் போர்க்கால அடிப்படையில் இயங்கும்,
  • சென்னையில் மின் பாதிப்புகளை சரிசெய்ய, மற்ற மாவட்டங்களில் இருந்து மின் துறை ஊழியர்கள் வரவழைப்பு
  • மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்கள் சந்திப்பு!

  • ⚡ சென்னையில் படிப்படியாக மீண்டும் மின் சேவை.
  • ⚡ சென்னையில் மழைநீர் குறைந்து வரும் பகுதிகளில் மின் சேவை மீண்டும் வழங்கப்படுகிறது.
  • ⚡ மழையால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்த நிலையில் பாதுகாப்பு கருதி மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.
  • ⚡ மழையளவு குறைந்ததாலும் காற்றின் வேகம் குறைந்த நிலையில் படிப்படியாக மின்சாரம் வினியோகிக்கப்படும்.
  • ⚡ தண்டையார்பேட்டை, ஆவடி, பட்டாபிராம் உள்ளிட்ட பகுதிகளில் படிப்படியாக மின்வினியோகம் – என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.

சென்னையில் பெய்துவரும் கனமழை காரணமாக மீட்பு பணிகள் குறித்து சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

  • *எங்களது கட்டுப்பாட்டு அறைக்கு தண்ணீர் தேக்கம், தரைதளத்தில் வசிக்கும் முதியோர்கள் பாதுகாப்பு கேட்பது போன்ற புகார்கள் வருகிறது.
  • சென்னையில் பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட பல்வேறு பகுதி கால்வாய்களில் படிப்படியாக தண்ணீர் வெளியேற துவங்கி வருகிறது. தண்ணீர் தேங்கியுள்ள பகுதி சுரங்கபாதைகள் மூடப்பட்டுள்ளன.
  • சென்னை பெருங்குடியில் 50 செ. மீ.மழை பதிவாகியுள்ளது.
  • இரவு 12 மணிக்கு மேல் சென்னையில் மழை பாதிப்பு குறையும்.
  • சென்னையில் மீட்பு பணிகளை மேற்கொள்ள பிறமவட்டங்களிலிருந்து 5000 பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
  • பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கி ரூ.44 லட்சம் மதிப்பிலான குளோரின் மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது.

  • மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து கூடுதலாக 140 ஆம்புலன்ஸ்கள் சென்னைக்கு வரவழைப்பு. புயல் பாதித்த பகுதிகளுக்கு 15 ஆம்புலன்ஸ்கள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன.
  • சென்னையில் இன்று ஒரே நாளில் 130 ஆம்புலன்ஸ்களில் 300 புகார்கள் கையாளப்பட்டுள்ளன.
    – 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories