December 5, 2025, 9:56 AM
26.3 C
Chennai

நெல்லை வெள்ளத்தில் மக்கள் தவிக்க… தில்லியில் தேர்தல் அரசியலில் ஸ்டாலின்!

annamalai interview in madurai - 2025
#File Picture

வெள்ள நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளில் மத்திய அரசு தன்னுடைய வேலையை செவ்வனே செய்யும் போது முதலமைச்சர் இந்தியா கூட்டணி குறித்த மீட்டிங்கில் உள்ளார். நாளையா தேர்தல் நடக்கிறது- என விருதுநகரில் முதலமைச்சருக்கு அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

விருதுநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் திருநெல்வேலி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லும் வாகனத்தை விருதுநகரில் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை,முதற்கட்டமாக மழை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி மத்திய பகுதிக்கு சாப்பாடு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைப்பதாகவும்,அரிசி, பருப்பு,எண்ணெய்,சானிட்டரி பொருட்கள் உள்ளிட்ட 16 பொருட்கள் அடங்கிய 1000 பேக்கேஜிங் அனுப்பியுள்ளதாகவும்,நாளை முதல் 3 நாட்களுக்கு பிற பொருட்களான துணிகள் வர இருப்பதாகவும், அதையும் மக்களுக்கு வழங்க இருப்பதாகவும் தொடர்ந்து 3 நாட்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து நிவாரண பணிகளை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் பேசிய அண்ணாமலை மழை தகவல் தாமதமாகத்தான் தெரிவிக்கப்பட்டது,இருந்த போதிலும் வெள்ள நிவாரணங்களை மத்திய அரசை எதிர்பார்க்காமல் அறிவித்து இருப்பதாக தமிழக முதலமைச்சர் சொன்னதற்கு பதிலளித்த அண்ணாமலை, வானிலை ஆய்வு மையத்தை வளப்படுத்த சூப்பர் கம்யூட்டருக்கு ரூ 10 கோடி என்னவாயிற்று என்றும் இங்கே மக்கள் துயரத்தில் இருக்கும் போது டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம் நடத்துவதும்,இங்கே சேலத்தில் பாதி அமைச்சர்கள் சென்று இளைஞரணி மாநாடு நடத்துவது குறித்து ஆலோசனை நடத்துவது என திமுக அரசு எந்த ஒரு ஐடியாவும் இல்லாமல் இருப்பதாகவும்,மூத்த அமைச்சர்கள் பலபேர் இருக்க உதயநிதியை நிவாரணத்திற்கு அனுப்பியதுடன் அவர் சினிமா இயக்குநரை உடன் வைத்துக்கொண்டு டேக் ரெடி என்பது போல் செயல்படுவதாகவும், அவருக்கு பேரிடர் மேலாண்மை பற்றி என்ன தெரியும் என கேள்வி எழுப்பினார்.

மேலும் மத்திய அரசு இல்லாமல் நிவாரணத்தில் தமிழக அரசு ஒன்னும் செய்து விட முடியாது என்றும் மத்திய அரசு 24 மணி நேரத்தில் 5 ஹெலிகாப்ட்டர்ஸ் ட்ரோனியர் விமானங்கள்,மி7 போன்ற ஹெலிகாப்ட்டர்ஸ் ,2 ஆர் களம்.என்.டி.ஆர்.எப் படைகள் 7 மற்றும் கோஸ்ட் கார்டு 6 இவையெல்லாம் மத்திய அரசு களத்தில் இறக்கி விட்டுள்ளது என்றும்,

மேலும் சூலூர் விமானப்படை தளத்தை நிவாரண தளமாக அறிவித்து அங்கிருந்து வேலை நடைபெற்று வருவதாகவும், டெல்லி தமிழ்நாடு பவனில் இருந்து கொண்டு முதலமைச்சர் பேட்டி கொடுத்தால் போதுமா? களத்தில் அல்லவா நிற்க வேண்டும் என்றார்.

வெள்ள நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளில் மத்திய அரசு தன்னுடைய வேலையை செவ்வனே செய்யும் போது முதலமைச்சர் இந்தியா கூட்டணி குறித்த மீட்டிங்கில் உள்ளார்.மீட்டிங்கை ஒரு வாரம் தள்ளி வைக்கலாம் அல்லது காணொளி காட்சி மூலம் கலந்து கொள்ளலாம் என்றார்.முக்கிய தலைவர்கள் எல்லாம் டெல்லியில் இருந்தால் இங்கே ஆளுங்கட்சி யார் என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுகிறது என தமிழக முதல்வர் பாஜகவுக்கு எதிராக அரசியல் பண்ணனும் என்ற முழு நேர வேலையாக முதல்வர் வைத்திருக்கிறாரே தவிர மக்களுக்கு பணி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை என்பது இதிலிருந்து தெரிகிறது என்றார்.

மேலும் பேசிய அண்ணாமலை தமிழகத்தில் சில பேர் சொல்ல சொல்லத்தான் பாஜக கட்சி வளரும் எனவும் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி மூன்று இடங்களில் நோட்டாவுக்கு கீழ் வாக்கு வாங்கியது என விமர்சனம் செய்த அண்ணா மலை நாடாளுமன்றத்தின் மையப்பகுதிக்கு வரக்கூடாது என எல்லா எம்.பிக்களும் ஒத்து கொண்டார்கள் என்றார்.

அதே போல் ராஜ்ய சபாவின் தலைவரும் துணை குடியரசு தலைவர் போல் ஒரு எம்.பி மிமிக்ரி செய்வதை ராகுல் காந்தி வீடியோ எடுத்து சிரிப்பது என்பது அரசியல் கட்சி தலைவரின் மாண்புக்கு அழகா என கேள்வி எழுப்பினார்.

மேலும் பேசிய அண்ணாமலை தமிழகத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 39 தொகுதிகளை வெல்லும் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories